ShareChat
click to see wallet page
search
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தருவையில் நான்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி.ஆர். மனோகரன் வாக்கு சேகரித்தார் நெல்லை.ஏப்.15 நெல்லை மாவட்டம் தருவையில் நான்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி.ஆர்.மனோகரன் தீவிர வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியின் முன்பு அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது. கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகைத் கிராமப் புறங்களைச் சேர்ந்த பல பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்துள்ளது.மீண்டும் இந்த ஆட்சி தொடர மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரான எனக்கு உங்கள் ஆதரவு தந்து கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பாளையங்கோட்டை வட்டார தலைவர் கணேசன்.நெல்லை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தருவை செல்வக்குமார். கிராம கமிட்டி தலைவர்கள் நந்தகோபால். சுப்பையா. பொருளாளர் ராமசுப்பு. முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகராமச்சந்திரன். மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் - ShareChat