ShareChat
click to see wallet page
search
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! சமூக வலைதளத்தை தடை செய்ய வேண்டாம் _காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கருத்துக்கு முஸ்லிம் மக்கள் கழகம் கண்டனம் விழுப்புரம், ஜூன் 5: AI என்கிற செயற்கை நுண்ணறிவு அறிவியல் தற்போது வளர்ந்து வரும் காலத்தில் இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களை நான் பயன்படுத்தி ஆக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளோம் எனவே அதனை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ள நிலையில் இதற்கு முஸ்லிம் மக்கள் கழகம் நிறுவன தலைவர் சமூக போராளி முனைவர் ச.சு. ஜைனுதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: .“இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பயன்பாட்டால் இன்றைய இளைஞர்கள், குறிப்பாக 15 மற்றும் 16 வயது மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குடும்பப் பெண்களும் சமூக வலைதளங்களில் பரவும் ஆபாச மற்றும் ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்களால் மனரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பரவும் பல்வேறு பதிவுகள், வீடியோக்கள் மற்றும் விளம்பரங்கள் இளம் தலைமுறையினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் அபாயம் கொண்டவை. இத்தகைய சூழலில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் எந்தத் தவறும் இல்லை என்று கூறுவது சமூக நலனுக்கு எதிரான கருத்தாகும். மேலும் இவ்வாறாக இன்ஸ்டா வலைதளத்தில் தங்களுடைய திறமைகள் என தவறான வழியில் மக்களிடத்தில் தகவல்களை கொண்டு சேர்க்கும் சில நபர்களை கண்டறிய வேண்டும் எனவே மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, சமூக ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் தளத்தின் செயல்பாடுகளை அரசு தீவிரமாக ஆய்வு செய்து, தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு ச. ஜோசப் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, மாணவ சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் சமூக வலைதளங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூகப் போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் வலியுறுத்தியுள்ளார்.
நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! - ShareChat