ShareChat
click to see wallet page
search
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், “அல்லாஹும்ம அஸ்லம்து வஜ்ஹீ இலைக; வ ஃபவ்வள்து அம்ரீ இலைக; வ அல்ஜஃது ளஹ்ரீ இலைக ரஃக்பதன் வ ரஹ்பதன் இலைக; லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க இல்லா இலைக. அல்லாஹும்ம ஆமன்து பி கிதாபிகல்லதீ அன்ஸல்த; வ பி நபிய்யகல்லதீ அர்ஸல்த” என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (பொருள்: அல்லாஹ்வே! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கி அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய இரவின் கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள். அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி) (புகாரி: 247) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல் ) அனள்கள் கூறினார்கள்: 60) நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளச் செய்து கொள். புகாசி 247) ~~~ட55 االصل كلوطوأصولل كمجملف تفاملا nn 8000 ஸல் ) அனள்கள் கூறினார்கள்: 60) நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளச் செய்து கொள். புகாசி 247) ~~~ட55 االصل كلوطوأصولل كمجملف تفاملا nn 8000 - ShareChat