MUTHUPANDIAN RAMKUMAR
607 views • 8 days ago •
#சமய புரம் மாரியம்மன் துணை🌿🌿🌿 ஸ்பெஷல்*
சமயபுரம் மாரியம்மன் ஏழு சகோதரிகள்
தமிழ்நாட்டில் சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கக்கூடியது சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில். இப்படி தலைமை பண்பு மிகுந்த அருளாட்சி செய்யும் சமயபுரம் மாரியம்மனுக்கு 7 சகோதரிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சமயபுரம் முத்து மாரியம்மன்
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரத்தில் முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சோழ மன்னர் ஒருவர் தனது தங்கைக்குச் சீதனமாகக் கொடுத்த நகரம் தான் இந்த சமயபுரம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்குத் திருக்கோயில் உருவானதாகக் கூறப்படுகிறது.
புன்னை நல்லூர் மாரியம்மன்
தஞ்சை மாவட்டத்தில் கிழக்குப் பகுதியில் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அம்மன் அருள் பாதித்து வருகிறார். புற்று மண்ணால் மூலவர் உருவான காரணத்தினால் இந்த அம்பாளுக்குத் திருமுழுக்கு செய்யப்படுவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு திருமகளுக்கு நடைபெறுகிறது.
அன்பில் மாரியம்மன்
திருச்சி மாவட்டத்தில் லால்குடி அடுத்து உள்ள அன்பில் கிராமத்தில் இந்த மாரியம்மன் கோயில் உள்ளது. சுமார் 700 ஆண்டுகள் பழமையான கோயிலில் வீச்சிருக்கும் அம்மன் கொள்ளிட ஆற்றில் வெள்ளம் வரும்போது வேப்ப மரத்தடியில் தங்கியதாகக் கூறப்படுகிறது.
தென்னலூர் மாரியம்மன்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் இந்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தென்னலூர் கிராமத்தில் அதிதேவதையாக இந்த மாரியம்மன் விளக்குகிறார். எளிமையான கூரையில் இந்த அம்மன் குடி கொண்டார் எனக் கூறப்படுகிறது
நார்த்தமலை முத்துமாரியம்மன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள நார்த்தமலை என்ற ஊரில் இந்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஒன்பது மலைகள் சூழ இந்த திருத்தலம் அமைந்துள்ளது.
கொன்னையூர் மாரியம்மன்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியின் அருகே உள்ளது கொன்னையூர் கிராமம். நான்கு திசைகளில் உள்ள மக்களையும் இந்த மாரியம்மன் காப்பாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த திருக்கோயில் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது.
வீரசிங்கம்பேட்டை மாரியம்மன்
திருவையாறு அருகே உள்ள குடமுரட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள வீரசிங்கம்பேட்டை என்ற ஊரில் இந்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. மாரியம்மனின் சகோதரிகள் ஏழு பேரில் கடைசி தங்கை இங்கு வீற்று இருப்பதாகக் கூறப்படுகிறது.
18 likes
10 shares