ShareChat
click to see wallet page
search
பேசிப் பேசியே, பேரம் பேசியே... பேரம் பேசுவதில் EPS ஓர் அசகாய சூரர் என்று அதிமுக தலைவர்களில் சிலரும், அவரிடம் அனுபவப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களில் சிலரும் மேடைகளிலேயே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள். அடிப்படையில் ஒரு விவசாயி என்பதை விட வியாபாரி என்பதால் பேரம் பேசுவது, அமெரிக்க அதிபர் டிரம்பைப் போல அவருக்கு கைவந்த கலை. வாழ்க்கையே ஒரு வியாபாரம் என்றாகிவிட்டதால், பொதுவாழ்வில் பெருந்தன்மை வேண்டும் என இன்று யார் நினைக்கிறார்கள்? அதேசமயம், அரசியலிலும்கூட, சோரம் போவது என்பது ஏற்புடையது அல்ல. சோரம் போதல் என்பதற்கு நம்பிக்கை துரோகம், வஞ்சனை செய்தல் என்றும் பொருள் கொள்ளலாம். நடந்து முடிந்த தேர்தலில், ஆரம்பத்தில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு ஓரளவு இருந்தது. சசிகலா, மற்றும் OPS ஆகியோரை உதாசீனம் செய்தது மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் EPS பெருந்தன்மையாக நடந்து கொள்ளவில்லை. சிலரிடம் வஞ்சனை பாராட்டியது வெளிப்படையாகத் தெரிந்ததால் களத்தில் கூட்டணிக் கட்சிகளிடையே ஒத்துழைப்பின்மை நிலவியது. உதாரணமாக, அண்ணாமலைக்குத் தோதான ஒரு தொகுதியை EPS நினைத்தால் ஒதுக்கியிருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யாததால் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். எனினும் அவர் அதிமுக வேட்பாளர்களுக்காக கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டார். அது அவரின் பெருந்தன்மை. பாஜக செல்வாக்குடன் இருக்கும் கோவை மற்றும் சென்னையில் தொகுதிகளை தராமல், வெற்றி பெற வாய்ப்பில்லாத புதுக்கோட்டை மற்றும் தஞ்சையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதனால் கடைசி நிமிடம் வரை பேச்சுவார்த்தை நீடித்தது. EPS சற்றும் விட்டுக் கொடுக்காமல் கடைசிவரை பிடிவாதம் பிடித்து வென்றது ஒரு சாதனை இல்லை. அதை ராஜதந்திரம் என்றும் சொல்ல முடியாது. "இது ஒரு நல்ல கூட்டணி அமைவதற்கு முழுமனதுடன் பாடுபட்ட பாஜகவிற்கு செய்த நம்பிக்கை துரோகம். அதில் அவருக்கு தனது கட்சி வெற்றிபெற வேண்டும் என்பதை விட, தொடர்ந்து உதவி வந்த கூட்டணி கட்சி தோல்வி அடையட்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது" என பாஜகவில் சிலர் கூறுவதை மறுக்க முடியவில்லை. திமுக வலிமையான கூட்டணி அமைத்திருக்கிறது என்று கருதப்பட்ட நிலையில் அதை மேலும் பலப் படுத்தும் விதமாக கூட்டணி பேச்சுவார்தைகளின் போது EPS தேமுதிகவை அவமதிக்கும் வகையில் பேசியதால் அது திமுக பக்கம் சாய்ந்தது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் அதே போல கைவிடப்பட்டார். EPS தன்னை MGR மற்றும் ஜெ போல மக்கள் தலைவராக நினைத்துக் கொண்டு அதிகாரத்துடன் செயல் படுவதாக கட்சித் தொண்டர்கள் பொருமுகிறார்கள். வைகைச்செல்வன், 'மாஃபா' பாண்டியராஜன், சேவூர் ராமசந்திரன், தனபால் போன்ற செல்வாக்கான தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுப்பதிலேயே EPS கண்ணும் கருத்துமாக இருந்ததாக சொல்லப் படுகிறது. கட்சிக்குத் தலைவராக இருப்பவரே கோஷ்டி மனப்பான்மையுடன் செயல்படலாமா? MGR மற்றும் ஜெ அந்த மாதிரி செயல்பட்டதில்லை என தொண்டர்கள் அங்கலாய்க்கிறார்கள். முத்தாய்ப்பாக, ஆரம்ப கால கட்டத்தில் தனது அரசியல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய செங்கோட்டையனுக்கு EPS செய்தது மிகப்பெரிய துரோகம் என்கிறார்கள். "EPS யாருக்குமே விசுவாசமாக இருந்ததில்லை, துரோகம் செய்வது இவரது பிறவிக் குணம்" என்று கட்சியின் பல்வேறு தரப்பினரும் பேசுவதை காணமுடிகிறது. விஜய் முதல்வரானதில் திமுக எதிர்க்கட்சி ஆனது. எடப்பாடி அதிமுகவிற்கும் திமுகவிற்கும்தான் போட்டி என்று சொல்லி அந்த போட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிகொடுத்ததுதான் மிச்சம். கடைசியில் கட்சியின் ஓட்டு சதவீதம் 21% ஆக குறைந்ததுதான் மிச்சம். தனது ஈகோ, பிடிவாதம், வஞ்சகம் ஆகியவற்றால் கட்சியை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்ற EPS, தனது தலைமைக்கு சசிகலா, OPS, செங்கோட்டையன் போன்றவர்களால் ஆபத்து நேரலாம் என்ற பயத்தில் அவர்களை திட்டமிட்டு ஒரம் கட்டியதாக சொல்லப் படுகிறது. ஆனால் தேர்தலுக்குப் பின் தலைமைப் பொறுப்பில் மாற்றம் தேவை என அதிமுகவின் அடிமட்டத்திலிருந்து எழும் குரலை சில தலைவர்களுடன் சமரசம் செய்து கொண்டு இனிமேலும் EPS ஆல் தடுக்க முடியாது எனத் தெரிகிறது. #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:05