நேற்று பெருங்கடை ஒன்றில்
தமக்கை வாங்கித் தந்த
காலணிகளை ஏற்றுக்கொண்ட தம்பி
நம்பிக்கையோடு
கூறிய சொற்களைக் கேட்க வாய்த்தது.
“நானும் சீக்கிரம்
நிறையச் சம்பாதிப்பேன்கா...
அன்னிக்கி
நீ ஆசைப்பட்டது எதுன்னாலும்
விலை பார்க்காம வாங்கித் தருவேன்...” #🤔தெரிந்து கொள்வோம்


