ShareChat
click to see wallet page
search
அமாவாசை தர்ப்பணத்தை நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுக்கலாம். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில், தலை வாழையிலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு, அதன் பின்னர் காக்கைக்கு வைத்து விட்டு, உணவு சாப்பிடலாம். அத்துடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் சிறப்பான பலன்களை தரும். பசுவுக்கு அகத்திக்கீரை தருவது இன்னும் சிறப்பு. சாப்பிடுவதற்கு முன்னர் மூதாதையருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும். முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம் அல்லது முன்னோர்களுக்கு உணவு படைக்கும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதானை செய்து விட்டு, காக்கைக்கு உணவு வைத்து விட்டு அதன் பின்னர் சாப்பிடலாம். காகம், நம் பித்ருக்களின் அம்சமாகக் கருதப்படுகிறது. சாதத்துடன் காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைப்பது சிறப்பு. காகங்கள் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் நம் வீட்டிற்கு சாப்பிட வந்திருப்பதாகவும், நம் சந்ததியினரை ஆசீர்வதிப்பதாகவும் ஐதீகம். இதனால், தோஷங்கள் நீங்கி, வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.காகம் வரவில்லை என்றாலோ, அல்லது உணவை சாப்பிடவில்லை என்றாலோ, உங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் ஏதோ குறையுடன் இருப்பதாக கருதப்படுகிறது. பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் போது, அவரவரால் இயன்ற அளவுக்கு, உணவு, ஆடை போன்றவைகளை வறியவர்களுக்கு தானமாக வழங்கலாம். கால்நடைகளுக்கு உணவுகளை தானமாக வழங்கலாம். அமாவாசையன்று அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. அரிசி, தானியங்கள் தானம் செய்தால் மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை #🙏🌚 இன்று சித்திரை அமாவாசை 🌚🙏 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🙏நமது கலாச்சாரம்
🙏🌚 இன்று சித்திரை அமாவாசை 🌚🙏 - இன்று சித்திரை என்ன அமாவாசை.. செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?! இன்று சித்திரை என்ன அமாவாசை.. செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?! - ShareChat