ShareChat
click to see wallet page
search
#இரக்க_குணம்_என்பது........... #யாதெனில்......!!!! கேட்டு செய்தல் என்பதை விட .... தானாக சென்று செய்வது என்பதே இரக்க குணம் என்று கூறலாம்... பசியால் கேட்டு கொடுப்பதை விட... பசித்தவனை கண்டவுடன் தானே சென்று கொடுப்பது என்றும் கூறலாம்... ஆனால் இரக்க குணம் தான் இன்று நம்மிடம் இறந்து கொண்டே வருகிறது.. உள்ளங்கள் கல்லாகி விட்டன.. துஆ வில் கண்ணீர் வருவதில்லை.. கடுமையான கஷ்டத்தில் இருப்பவனுக்கு உதவ மனம் வருவதில்லை... மன்னித்து விடும் மனம் இல்லை.. தன் இரத்த உறவின் கஷ்ட நேரம்.. அன்பளிப்பாய் பணம் கொடுக்காமல்.. கடனாய் கொடுத்து பெருந்தன்மையை காட்டுவது... தன் பிள்ளைக்கு திருமணம் என்று யாரோ ஒருவர் பள்ளியின் ஓரத்தில் நிற்பார்... தன் ஜோப்பில் சில்லரையை தேடி பெருந்தன்மையை காட்டுவது... வாய் செத்தவன் என தெரிந்து அவனையே துன்புறுத்துவது.. ஏழ்மையை வைத்து கிண்டல் செய்வது.. திருமண விருந்தின் முன் வருசையில் பணக்காரனை அமர்த்தி... உபசரித்து.. ஏழையை உள்ளே விடாமல் வாசலில் ஆள் வைப்பது... சிந்தியுங்கள்........ உண்பதெல்லாம்,மலம் தான்.... உடலும் ,ஒரு நாள் மண் தான்.. உடுத்த கபன் தான்.... கொடுப்பதே மிச்சம்... மறுமையின் கட்டுச் சாதகமாய்..!!! #💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚
💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚 - ShareChat