♥️ஒரு முறை பகவானின் தேகம் நோய்க்கு ஆளாகியது.
♥️டாக்டர்கள் சத்தான ஆகாரம் பரிந்துரைத்தார்கள்.
♥️பகவான் வழக்கம் போல் செவி மடுக்கவில்லை.
♥️யாரோ பகவான் சப்பாத்தி, பால்,ஆரஞ்சு ஜுஸ் தினம் சாப்பிட்டால் தேவலாம் என்றார்கள்.
♥️பகவானோ, "அவ்வளவு வசதியான போஜனமெல்லாம் நமக்கு முடியாது.
♥️நமக்கு சாது போஜனம் தான்" என்றார்.
♥️'உடம்பு சரியில்லாதப்ப ஆரோக்கியத்துக்காக சாப்பிடலாம்.
♥️மகாத்மா காந்தியே விசேஷ உணவு தான் எடுத்துக்கறார்.
♥️அரவிந்தரும் அப்படி தான்.
♥️ஆரோக்கியத்துக்காக எடுத்துக்கலாம் பகவானே, ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜுஸ் தானே,எங்களுக்காக சாப்பிடுங்கோ,!'
என்றார் அன்பர் ஒருவர்.
♥️" ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜுஸ் என்ன விலை ஓய் ?" என்றார் பகவான்.
♥️'என்ன நாலணா இருக்கும் !' என்றார் அன்பர்.
♥️"இல்லே, நாலணா இருக்காது.
♥️நமக்கு 200 டம்ளர் ஜூஸ் வேணும்.
♥️உங்களை எல்லாம் பாக்க வெச்சுண்டு நான் மட்டும் சாப்பிடறதா !
♥️சரி 200 டம்ளர் ஜுஸ்னாலும் 50 ரூபாய் தினத்துக்கு நாம மாதிரி ஆளுகளுக்குக் கட்டாது" என்றார் பகவான்.
♥️மீண்டும் அடுத்த நாள் நெய் தடவிய சப்பாத்தியும், பால் ஒரு டம்ளரிலும்,ஆரஞ்சு ஜுஸ் ஒரு டம்ளரிலுமாக ஒரு தட்டில் வைக்கப்பட்டு பகவானிடம் கொண்டு வரப்பட்டது.
♥️பகவான் அதைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
♥️மாறாக, "அதைக் கொண்டு வந்தவாளே சாப்பிடட்டும்!" என்றார்.
♥️அப்பொழுது அங்கிருந்த பக்தை, "எங்களுக்காக நீங்க சோபாவில் உட்கார்ந்த மாதிரி எங்களுக்காக நீங்க இதைச் சாப்பிடனும்' என்றாள்.
♥️அவ்வளவு தான். மறுநிமிடம் பகவான் ஏதும் கூறாமல் தரையில் அமர்ந்து கொண்டார்.
♥️யாரும் இதை எதிர்ப்பார்க்கவில்லை.
♥️அந்த பக்தை கண்ணீர் சிந்தியபடி, "பகவானே ! ஏதோ பேசத் தெரியாம பேசிட்டேன்' என்றபடி அரற்ற ஆரம்பித்தாள்.
♥️எல்லோரும் பகவானை மறுபடி சோபாவில் எப்படி உட்காரச் செய்வது என்றறியாமல் திகைத்தனர்.
♥️அப்போது நீண்ட நாள் அன்பர் ஒருவர்
எந்தப் பேச்சும் பேசாமல் பகவானை அப்படியே அலாக்காகத் தூக்கி மீண்டும் சோபாவில் உட்கார வைத்தார்.
♥️பகவான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
♥️திரும்பவும் தரையில் உட்கார எத்தனிக்கவும் இல்லை.
♥️விசேஷ உணவுப்பிரச்சனை தீர்க்கப்பட்டது.
ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய.
ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🙇🙇🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி



