ShareChat
click to see wallet page
search
#🕉️ஓம் முருகா #✡️ஜோதிட பரிகாரங்கள் #🪔கார்த்திகை விரதம்🙏🏻 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 தடையை நீக்குவதற்கான எளிய வழிமுறை. இன்றைய சூழலில் இளைய தலைமுறையினரின் வாழ்வியல் முறை முற்றாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக திருமணம் செய்து கொள்வது குறித்த எண்ணங்களில் மாற்றம் பெற்றுள்ளன. எம்மில் பலரும் தங்களுடைய வாழ்க்கையில் பொருளாதார நிலையை உறுதி செய்து கொண்ட பிறகுதான் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமணம் குறித்து சிந்திக்கிறார்கள். கல்வி அறிவு பெற்ற பெண்களும், ஆண்களும் தாமதமாகத்தான் திருமணம் செய்து கொள்ளலாம் என தீர்மானிக்கிறார்கள். இந்த தருணத்தில் அவர்களுக்கு வயதின் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ திருமணம் அவர்கள் திட்டமிட்டபடி நடைபெறாமல் மேலும் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்கள் சமூக உளவியல் சார்ந்த அச்சத்தை எதிர்கொள்கிறார்கள். இந்நிலையில் திருமண சார்ந்த தடைகளை அகற்றுவதற்கான எளிய வழிமுறையை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள். திருமண தடையை எதிர்கொள்ளும் பெண்கள் - செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரை தருணத்தில் முருகப்பெருமானுக்கு படைத்து மாதுளம் பழத்தையோ அல்லது மாதுளம் பழ சாறையோ பருகி வந்தால்.. அவர்களுக்கு திருமணத்தில் உள்ள மாய தடைகள் விலகி, அவர்கள் விரும்பிய வரன் கிடைக்கும். திருமணத்தடையை எதிர்கொள்ளும் ஆண்கள்- வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரை தருணத்தில் கஸ்தூரி மஞ்சளை அரைத்து, மகாலெட்சுமிக்கு படைத்து இரண்டு கால்களின் பாதங்களிலும். இரண்டு கைகளின் உள்ளங்கைகள் பகுதியிலும்.. அரைத்து தேய்த்து, நீராடினால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் திருமணம் தொடர்பான சூட்சும தடை விலகி, விரும்பிய வரன் கிடைத்து, இல்லறத்தை இனிதாக தொடங்குவீர்கள். #✡️தோஷ பரிகாரங்கள்
🕉️ஓம் முருகா - u u - ShareChat