🌹இன்று 25.06.2026
🌹நிர்ஜலா ஏகாதசி
🚩நீர் கூட தவிர்க்க வேண்டிய நிர்ஜலா ஏகாதசி.
வியாசர் கனிவோடு பேசினார்.
"பீமா, ஏன் பதற்றமாய் இருக்கிறாய், உனக்கு என்னதான் பிரச்னை?” என்று கேட்டார்.
அதற்கு பீமன், "குருவே, ஏகாதசி விரதம் மிகவும் முக்கிய மாகக் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் என்கிறார்கள். அன்னை குந்தி, அண்ணன் யுதிஷ்டிரர், திரௌபதி, அர்ச்சுனன், நகுல ன், சகாதேவன் எல்லோரும் தவறாமல் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.”
"இது நல்ல விஷயம்தானே... இதில் நீ பதற்ற மடைய என்ன இருக்கிறது...”
"குருவே, அவர்கள் விரதம் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், என்னையும் அல்லவா பட்டினி கிடக்கச் சொல்கிறார்கள். மற்றொரு பிரச்னை, ஏகாதசியும் ஏதோ மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ வந்தாலும் பரவாயில்லை. அது சரியாகப் பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை வந்துவிடுகிறது. என்னால் அப்படியெல்லாம் அடிக்கடி சாப்பிடா மல் இருக்க முடியாது. போனால் போகிறதெ ன்று வருடத்துக்கு ஒருநாள் வேண்டுமானால் உபவாசம் இருக்கலாம். அப்படி நான் ஒரு நாள் இருக்கும் விரதத்துக்கு ஓராண்டு விர தம் அனுஷ்டித்த பலன் கிடைக்க வே ண்டும். அப்படி ஏதேனும் வழி இருந்தால் சொல்லி உதவுங்கள் குருதேவா...” என்று பீமன் அப்பாவியாகக் கேட்டான்.
நம்மில் பலருக்கும் மாதமிருமுறை வரும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது கடி னமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களு க்கும் இந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்வதில் விருப்பம் இருக்கலாம்.
வியாசர் சிரித்துக்கொண்டே பீமனுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
"பீமா உன் குறைதீர்க்க அப்படி ஓர் ஏகாதசி உண்டு. அதற்கு பெயர் `நிர்ஜலா ஏகாதசி.’ சந்திர மாதக் கணக்குப்படி ஆனி மாதத் தில் வரும் வளர்பிறை ஏகாதசிக் குப் பெயர் நிர்ஜலா ஏகாதசி. இந்த நாளில் ஏகாதசி விரதம் மேற்கொள்வதோடு சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை ஒரு சொட்டு நீர்கூடப் பருகாமல் இருக்க வேண்டும்.”
வியாசர் இப்படிச் சொன்னதும் பீமன் திடுக்கிட்டான்.
"என்ன நீர்கூட அருந்தக் கூடாதா...”
"ஆமாம் பீமா. ஜலம் என்றால் நீர். நிர்ஜலம் என்றால் நீர்கூட இல்லாமல் என்று பொரு ள். ஆனால் யோசித்துப்பார், இந்த ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீ ஓராண்டு முழுவதும் ஏகாதசி விரதம் மேற்கொண்ட பலனை எளிமையாகப் பெறலாம். அப்புறம் உன் இஷ்டம்” என்றார் வியாசர்.
"உணவு உண்ணாமல் இருப்பதே கடினம். அதில் நீரையும் துறக்க வேண்டுமா’
பீமன் யோசித்தான். ஆனாலும் இது நல்ல யோசனையாக இருந்தது. இந்த விரதமு றை குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்பினான்.
"குருதேவா, இந்த விரதம் குறித்து மேலும் சொல்லமுடியுமா?” என்று கேட்டான்.
வியாசர் புன்னகை மாறாமல் விளக்கத் தொடங்கினார்.
"அதிகாலையில் எழுந்து நீராடி அந்த வாசுதே வனை வணங்க வேண்டும். நாள் முழுவதும், `ஓம் நமோ பகவதே வாசுதேவா ய’ என்று உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இந்தநாளில் முடிந்த அளவுக்கு தான தருமங் கள் செய்ய வேண்டும்.
இன்று தானம் செய்யும் செல்வம் பல மடங்கா கப் பெருகி நம்மிடம் வந்து சேரும். அந்த நாளின் இரவிலும் இறைச்சிந்தனையிலேயே நிறைந்திருக்க வேண்டும். மறு நாள் துவாதசி திதி தொடங்கும் வேளையி ல் பகவான் விஷ்ணுவை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி இந்த விரதத்தை முடிக்க லாம்” என்றார் வியாசர்.
பீமன், குருவின் வாக்கை வேதவாக்காகக் கொண்டு இந்த விரதத்தை மேற்கொள்ள முடிவு செய்தான். அவ்வாறே நிர்ஜலா ஏகாதசி விரதத்தையும் முடித்தான். அதனால் அவனுக் குப் புண்ணிய பலன்கள் கிடை த்தன. பீமனே உணவை விட்டு உபவாசித் த ஏகாதசி என்ப தால் அந்த ஏகாதசிக்கு பீம ஏகாதசி என்றும் பாண்டவ ஏகாதசி என்று ம் பெயர் உண்டானது.
இன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடிந்த வர்கள் உபவாசித்தும் முடியாதவர்கள் முழு அரிசியால் ஆன உணவைத் தவிர்த்தும் விரத மிருந்து பகவான் விஷ்ணுவை வழிபடலாம். நாள் முழுவதும் நாராயண நாமமோ அல்லது ராம நாமமோ சொல்லி ஜபம் செய்யலாம். இதன் மூலம் நம் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.
🌹ஓம் நமோ நாராயணாய....
🌹25.06.2026... நேசமுடன் விஜயராகவன்.....
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #📸பக்தி படம் #🙏ஏகாதசி🕉️


