செந்thilகுமார்
அன்று பாராட்டு! இன்று பழிதூற்றலா💔
மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம், கோவை சூறைக்காற்று எனப் பேரிடர்கள் தாக்கியபோதெல்லாம் மின் கட்டமைப்பு பெரும் சேதத்தைச் சந்தித்தது. ஆள் பற்றாக்குறை, மெட்டீரியல் தட்டுப்பாடு இருந்தது (தரமற்ற மெட்டீரியல் என தொழிற்சங்கங்களே குற்றச்சாட்டும் வைத்தன). போன்ற பல நெருக்கடிகளுக்கு மத்தியில், தூக்கம், உணவின்றி உயிரைப் பணயம் வைத்து இரவும் பகலுமாகப் போராடி மின்சாரம் வழங்கினர்கள் மின்வாரிய ஊழியர்கள்!
அன்று, இந்தத் தட்டுப்பாடுகளை எல்லாம் மூடிமறைத்த சில 'பெய்டு' (Paid) மீடியாக்களும் ஐடி விங்குகளும், ஊழியர்களின் உழைப்பை மட்டும் முன்னிறுத்திப் பாராட்டி அரசியல் செய்தன.
ஆனால் இன்று, திருவள்ளூரில் வீசிய சூறைக்காற்றால் ஏற்பட்ட மின் தடையை அதே ஊழியர்கள்தான் களத்தில் நின்று சீரமைத்து வருகின்றனர். ஆனால் இப்போதோ, அதே மீடியாக்களும் ஐடி விங்குகளும் மின்வாரியத்தை மிக மோசமாகச் சித்தரித்து அவதூறு பரப்புகின்றன!
அன்று தட்டுப்பாடுகளை மறைத்துப் புகழ்ந்தவர்கள், இன்று ஊழியர்களின் உழைப்பை மறைத்துத் தூற்றுகிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் இந்த இரட்டை வேட அரசியலில் பலியாவது என்னவோ களத்தில் உழைக்கும் மின் ஊழியர்கள்தான்!
களத்தில் நிற்கும் மின் ஊழியர்களின் தியாகம் என்றும் போற்றத்தக்கது... 🙏 #மின்சாரம் அவசியம்