"அய்யாமுத் தஷ்ரீக் 🕋🌙✨ உண்ணும், பருகி கொண்டாடும் நாட்கள்!!
'மே 29 முதல் மே 31 அஸர் வரை இன் ஷா அல்லாஹ் 📌✨
"துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை விட அய்யாமுத் தஷ்ரீக் மூன்று நாட்கள் மிகச் சிறந்தது.
"தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்கின் இறுதி நாளான துல்ஹஜ் பிறை 13 அஸர் தொழுகை வரைக்கும் கூறுதல் வேண்டும். இப்னு உமர் ரழி அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்.
நூல்: புகாரி 4/123.
கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது சிறப்புடன் விரும்பத்தக்கது.
"தக்பீரின் வாசகங்கள்
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்,
லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.
அல்லாஹு அக்பர் கபீரா
வல் ஹம்து லில்லாஹி கசீரா
வ சுபஹானல்லாஹி புக்ரதவ் – வ அ-சீலா
லா இலாஹ இல்லல்லாஹு வலா ந(ஹ்க்புது இல்லா இயாஹு முஹ்லிசீன லஹுத்தீன
வலவ் கரிஹல் காஃபிரூன்
லா இலாஹ இல்லல்லாஹு வஹதா , சதக வஹதா, வ நசர அப்தா
வ அஸ்ஸ ஜூ(ன்)ந்தா – வ ஹஸமல் அஹ்ஸாப வஹதா
லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்
ருல்லாஹு அக்பர் , வ லில்லாஹில் ஹம்து
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
'(துல்ஹஜ்) பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்ல' என்று
"அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் வல்லமைமிக்க அல்லாஹ்வை நினைவு கூர்வது (திக்ர் செய்வது) சுன்னத்தாகும். மேலும், அந்நாட்களில் நோன்பு நோற்பது ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் என்பவை உண்பதற்கும், பருகுவதற்கும், அல்லாஹ்வை நினைவு கூர்வதற்குரிய (திக்ர் செய்வதற்கான) நாட்களாகும்."
(ஸஹீஹ் முஸ்லிம்: 1141)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
"ஹஜ்ஜின் போது குர்பானி பிராணி கிடைக்காதவர்களைத் தவிர, ஏனையோருக்கு அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்க அனுமதி அளிக்கப்படவில்லை."
(ஸஹீஹ் புகாரி: 1998)
குறிப்பு 📌✨
● அய்யாமுத் தஷ்ரீக் என்பது துல் ஹிஜ்ஜா மாதத்தின் 11, 12, மற்றும் 13 ஆகிய மூன்று நாட்களாகும் (ஹஜ் பெருநாளை அடுத்த மூன்று நாட்கள்).
● இந்த நாட்களில் இறைவனை அதிகமாகத் துதிப்பதும், நோன்பு நோற்காமல் சாப்பிட்டு மகிழ்வதும் அவசியமாகும். ஹஜ்ஜின் போது குர்பானி கொடுக்க வசதி இல்லாதவர்கள் மட்டுமே இந்த நாட்களில் நோன்பு நோற்க விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
*துல்ஹிஜ்ஜாவுடைய தக்பீர் எங்கே!? - அஷ்ஷைஃக் முஹம்மத் பாமூஸா ஹஃபிதஹுல்லாஹ்*
சிலர் வெட்கப்படுகின்றனர், (துல்ஹிஜ்ஜாவின்) பத்தில் தக்பீர் முழங்க நான் வெட்கப்படுகிறேன் என்று கூறுகின்றனர்! சுப்ஹானஹல்லாஹ்!
பாடகன் பாடுவதற்கு வெட்கப்படவில்லை, இராகத்துடன் படிப்பவன் இராகமாக படிக்க வெட்கப்படவில்லை,
நடனமாடுபவன் நடனமாட வெட்கப்படவில்லை, புல்லாங்குழல் வாசிப்பவன் புல்லாங்குழல் வாசிப்பதற்கு வெட்கப்படவில்லை, மேளக்காரன் மேளம் அடிப்பதிலிருந்து வெட்கப்படவில்லை, பொய்யன் பொய்யிலிருந்து வெட்கப்படவில்லை மற்றும் பலர்…
அல்லாஹ்வை நினைவு கூர்பவரோ வெட்கப்படுகின்றார், நான் வெட்கப்படுகிறேன் என்று கூறுகின்றார்!
சுப்ஹானல்லாஹ்! உன்னுடைய குரலை உயர்த்துவாயாக. இந்த தக்பீரானது சஹாபாக்களுடைய காலத்தில் இருந்தது, ஸலஃபுகளுடைய காலத்தில்; அதனைக் கொண்டு சந்தைகள் நடுநடுங்கும், அதனைக் கொண்டு சந்தைகள் நடுநடுங்கும்.
மேலும் அவ்வாறே அய்யாமுத் தஷ்ரீகில் மினாவிலும், சஹாபாக்களுடைய - ரதியல்லாஹு அன்ஹும் - தக்பீரினால் கூடாரங்கள் நடுநடுங்கும்; இது அவர்களிடமிருந்து உறுதியாகியுள்ளது. இந்த தக்பீரானாது இன்றைய தினம் எங்கே!? அல்லாஹ் ரஹ்மத் செய்தவர்களைத் தவிர (மற்றவர்கள் விட்டு விட்டனர்). #🎉பக்ரீத் ஸ்டேட்டஸ்🕌 #🎉ஈத் உல் அத்ஹா கொண்டாட்டம் 🕌 #⚡ஷேர்சாட் அப்டேட் #🌙ஈத் கோட்ஸ்☪ #🕌பக்ரீத் முபாரக் 🌙


