ஶ்ரீ ரமண ஸஹஸ்ரம்
839. ஓரணுவுஞ் சுத்தமிலா வுள்ளத்தே னையொதுக்கக்
காரண(ம்)நீ பல்கோடிக் காட்டலாம் — சீரமணா
அவ்வியா ஜக்கருணை யாளனீ யல்லவோ
வவ்வியல்பா லென்னைக்காப் பாற்று.
ஓர் அணுவளவுகூட சுத்தமில்லாத மனத்தையுடைய வனாகிய என்னை ஒதுக்குவதற்கு நீ பல கோடி காரணங்களைக் காட்ட முடியும். ஆயினும், ஸ்ரீ ரமணா, நீ காரணம் வேண்டாக் கருணையாளனல்லவா? அந்த உனது இயல்பால் என்னைக் காப்பாற்றுவாயாக.
அப்பனேஅருணாசலம்.
🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி



