#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடியில் கலைஞர் பிறந்த நாள் விழா
சண்முகபுரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தூத்துக்குடி, ஜூன். 5
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 103 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சண்முகபுரம் பகுதி தி.மு.க செயலாளர் சுரேஷ்குமார் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி வழிகாட்டுதலின்படி மாநகராட்சி 39வது வார்டு சிவன் கோவில் தெரு பாலகிருஷ்ணா தியேட்டர் அருகில் சண்முகபுரம் பகுதி தி.மு.க செயலாளரும் மாநகராட்சி சுகாதார குழு தலைவருமான சுரேஷ்குமார் கருணாநிதி திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து இனிப்பு வழங்கினார் பின்னர் 103 நபர்களுக்கு பிரியாணி வழங்கினார்.
விழாவில் வட்ட பிரதிநிதிகள் பொன்ராஜ் செல்வராஜ், அவைத் தலைவர் கணேச பாண்டியன், சிறுபான்மை பிரிவு மைதீன், வர்த்தக அணி இஸ்மாயில் சதாம், செந்தில்குமார், மணிகண்டன், தர்மா மற்றும் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.


