ShareChat
click to see wallet page
search
💞அல்குர்ஆன் கூறும் வெற்றியாளர்களின் சில பண்புகள்! 1- மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள். 2- தொழுகையை கடைப்பிடிப்பார்கள். 3- அல்லாஹ் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள். 4- அல்லாஹ்வின் தூதருக்கு அருளப்பட்ட வேதத்தையும் அவருக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களையும் நம்புவார்கள். 5- இறுதி நாளை உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 2: 3,4,5). 6- மக்களை நன்மையின் பக்கம் அழைப்பார்கள். 7- நன்மையை ஏவுவார்கள். 8- தீயதை விட்டு மக்களைத் தடுப்பார்கள். (அல்குர்ஆன் 3: 104). 9- நன்மையின் எடை கனத்தவர்கள். (அல்குர்ஆன் 23: 102). 10- இறுதித் தூதரை உண்மையாகவே நம்பியவர்கள். 11- அவரை கண்ணியப்படுத்தியவர்கள். 12- அவருக்கு உதவி செய்தவர்கள். 13- அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தை பின் பற்றியவர்கள். (அல்குர்ஆன் 7: 157). 14- தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து அல்லாஹ்வின் வழியில் போர் புரிபவர்கள். (அல்குர்ஆன் 9: 88) 15- அல்லாஹ்வினதும், அவனது தூரினதும் தீர்ப்புக்கு செவியேற்றுக் கட்டுப்பட்டவர்கள். (அல்குர்ஆன் 24: 51) 16- அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்கள். (அல்குர்ஆன் 24: 52) 17- இறை திருப்திக்காக உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்துதவுபவர்கள் (அல்குர்ஆன் 30: 38) 18- தொழுகையை கடைப்பிடிப்பார்கள். 19- அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள். 20- இறுதி நாளை உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 31: 4,5). 21- அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட இவர்கள், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே. (அல்குர்ஆன் 58: 22). 22- உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டவர்கள். )அல்குர்ஆன் 59: 09). (அல்குர்ஆன் 64: 16). 23- இறை நம்பிக்கை கொண்டவர்கள். 24-ஹிஜ்ரத் செய்தவர்கள். 25- தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தவர்கள். (அல்குர்ஆன் 9: 20) 26- பொறுமையாளர்கள். (அல்குர்ஆன் 23:111 27- தொழுகையை உள்ளச்சத்தோடு தொழுவார்கள். 28- வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். 29- ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள். 30- தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். 31- தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள். 32- தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். (அல்குர்ஆன் 23:1-9 33- தங்கள் ஆத்மாவைப் பரிசுத்தமாக்கிக் கொண்டவர்கள். (அல்குர்ஆன் 90: 9 #🕋யா அல்லாஹ்
🕋யா அல்லாஹ் - பணம் உலகத்தை B6UID அழகு உள்ளத்தைக் @I கவ வார்த்தைகள் மனிதனை B6ID நாம் செய்யக்கூடிய நற்செயலானது படைத்த இறைவனையே கவரும் Cyisl பணம் உலகத்தை B6UID அழகு உள்ளத்தைக் @I கவ வார்த்தைகள் மனிதனை B6ID நாம் செய்யக்கூடிய நற்செயலானது படைத்த இறைவனையே கவரும் Cyisl - ShareChat