ShareChat
click to see wallet page
search
கர்மாவின் படியே நடக்கிறது 1) வைகுண்டத்தில் பெருமாளை சந்திக்க எமதர்மர் வருகிறார் உள்ளே செல்லும்போது வாயிலில் ஒரு பக்கமாக ஆஞ்சநேயரும் அவருக்கு எதிரே கிளியும் அமர்ந்திருக்கிறது. 2) எமதர்மன் ஒரு நிமிடம் நின்று கிளி யை முறைத்து பார்த்துவிட்டு உள்ளே சென்று விடுகிறார். 3) கிளி பயந்து போய் எதிரே இருந்த ஆஞ்சநேயரிடம் எமதர்மன் என்னையே முறைத்து செல்கிறார் . எனக்கு பயமாக இருக்கிறது என்று கிளி கூறுகிறது. 4) அபயம் தரும் ஆஞ்சநேயர் நான் இருக்கிறேன் நீ கவலைப்படாதே பெருமாளை பார்த்துவிட்டு எமதர்மன் வெளியே வருவதற்குள் உன்னை ஒளித்து வைத்து விடுகிறேன் என்று சொல்லுகிறார் 5) அடுத்த நிமிடமே கிளியை வாயு வேகத்தில் தூக்கி சென்று ஒரு தீவில் வைத்து கொண்டு ஒன்றும் தெரியாது போல் வந்து அமர்ந்து விடுகிறார். 6) எமதர்மன் பெருமாளை பார்த்து விட்டு வெளியே வருகிற போது கிளியை காணவில்லை எங்கே என்று கேட்கிறார். 7) ஆஞ்சநேயர் ஒன்றும் தெரியாது அப்பாவி போல் எமதர்மனை பார்த்துக் கொண்டிருக்கிறார். 8) எமதர்மர் ஆஞ்சநேயரை பார்த்து எங்கே இங்கே இருந்த கிளியை காணவில்லை என்று கேட்கிறார். 9) அதற்கு ஆஞ்சநேயர் நக்கலாக ஏன் எமதர்மரே கிளியின் உயிரை எடுக்கலாம் என்று தானே முறைத்து பார்த்து விட்டு சென்றீர்கள் எனவே நான் அதை தூக்கிக் கொண்டு போய் ஒரு தீவில் வைத்திருக்கின்றேன் எனது நண்பனை உன்னால் ஒன்றும் பண்ண முடியாது. 10) எமதர்மர் ஆஞ்சநேயரிடம் ஆஞ்சநேயா நான் பெருமாளை உள்ளே பார்க்க செல்கிற போது கர்மாவின் படி ஒரு தீவில் பூனையால் கழுத்தை கடித்து சாக வேண்டும் என்கிற விதி கிளிக்கு இருக்கிறது ஆனால் பெருமாளின் முன்பு அல்லவா அமர்ந்திருக்கிறது. 11) இந்த கர்மாவின் கணக்கு எப்படி முடியப் போகிறது என்று நான் அதை முறைத்து பார்த்து சென்றேன் 12) நான் திரும்பி வந்து பார்க்கும் பது அந்தக் கிளியை காணவில்லை .இந்நேரம் அந்த தீவில் பூனையால் இந்தக் கிளி கொல்லப்பட்டது. இதுதான் அதன் கர்மா 13) கர்மாவின் கணக்கை சரியாக நிறைவேற்றிய ஆஞ்சநேயரை வணங்கி எமதர்மர் செல்கிறார். 14) இப்படித்தான் நமது வாழ்விலும் துன்பங்களும் துயரங்களும் கஷ்டமும் வந்து போகலாம் கர்மாவின் கணக்கு என்று கடந்து போங்கள் சரணாகதி அடைந்து இறைவனை பற்றிக் கொள்ளுங்கள் எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம். அதை மீறி நடக்கும் அனைத்து செயல்களுக்கும் கர்மாவே காரணம் என்று சமாதானம் அடையுங்கள் அந்த சூட்சமத்தை அறிந்தவன் பரம்பொருள் பரந்தாமன் ஒருவனே. #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #good morning #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #✨ஜெய் சாய் ராம்🙏
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - ಗಗn ಗಗn - ShareChat