#நதி
வளைந்து நெளிந்து ஓடும் நதி நீர் போன்றதே
நம் வாழ்க்கை.*
சலசலப்பாய் சிலநேரம் சப்தமின்றியும்
சிலநேரம்.
எதிர்பாரா திருப்பங்கள்*
சிலநேரம்.
பிறர் மகிழும் விருப்பங்கள்*
சிலநேரம்.
கடந்து போன இடத்திற்கு*
நதிகள் மீண்டும் திரும்புவதில்லை.
நம்மை கடந்து போன நிகழ்வுகள் எல்லாம் வாழ்க்கையில்
மீண்டும் வருவதில்லை சந்திக்கும் திருப்பங்களையும்
சிந்தித்து எதிர் கொள்வோம்.


