#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥
விரும்பியதெல்லாம் வெறுத்துப் போகும் காலம் வரும்.
ஆசைப்பட்டதெல்லாம் வேண்டாமென்று ஒதுக்கும் காலம் வரும்.
கொண்டாடியதெல்லாம் தூக்கிப்போடும் காலம் வரும்.
தேனொழுகிய பேச்செல்லாம் கசந்து போகும் காலம் வரும்.
கெஞ்சிக் கேட்டதெல்லாம் அலட்சிய படுத்தும் காலம் வரும்.
மண்டியிட்டவர்களிடம் எதிர்த்துப் போகும் காலம் வரும்.
உறங்காத இரவுகளெல்லாம் திருப்தியாக உறங்கும் காலம் வரும்.
சுலபமெல்லாம் கடினமாகவும்
கடினமெல்லாம் சுலபமாகவும் மாறும் காலம் வரும்.
தொலைத்தவர்களை தேடாமல் போனால் போகட்டும் என்றிருக்கும் காலம் வரும்.
ஏங்கி தவித்த வாழ்வினை உதாசீனப்படுத்தும் காலம் வரும்.
தேடிக்கொண்டிருந்த நிம்மதி தேடி வந்தும் வேண்டாமென்ற காலம் வரும்.
பெரும் போதை தந்த பொழுதுகள் அலுப்பை தட்டும் காலம் வரும்.
எல்லாமே காலத்தின் கைகளில் மட்டுமே உள்ளதென்று எண்ணிவிடாதீர்கள்.
சந்திக்கின்ற மனிதர்களின் கைகளிலும் உள்ளதென்று எண்ணுங்கள்.
ரூபன் 🩷🩷🩷🩷🙏🙏


