#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் திண்டுக்கல் மாவட்டம் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மேற்கு கிரிவீதியில் ரூ. 51.55 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயிலில் நடைபெறும் பூஜைக்கான பூக்களை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இராக்கால நந்தவனத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வின்போது வணிகவரி பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை அரசு செயலாளர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் ,அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், மற்றும் உறுப்பினர்கள் திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் ,வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


