ShareChat
click to see wallet page
search
#ஆன்மிகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #👏Inspirational videos #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 1, 2026 *திருச்சிற்றம்பலம்* *திருமாளிகைத் தேவர் அருளிய ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா-திருப்பல்லாண்டு* *கோயில் - உயர் கொடியாட பதிகம்* : பண் : பஞ்சமம் *பாடல்* : ஏர்கொள்கற் பகம்ஒத்து இருசிலைப் புருவம் பெருந்தடங் கண்கள்மூன் றுடையுன் பேர்கள்ஆ யிரம்நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச் சீர்கொள் கொக் கிறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்தா ! நீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம் நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே. - 9.002.10 *பொருள்* : *’அழகு பொருந்திய கற்பக விருட்சத்தின் கிளைகளைப் போல, வில் போன்ற இரண்டு புருவங்களையும், அருள் பொழியும் பெரிய, விசாலமான மூன்று கண்களையும் உடைய உன்னுடைய, ஆயிரம் மற்றும் நூறாயிரம் திருநாமங்களை எப்போதும் இடைவிடாது ஓதித் துதிக்கும், தகுதி மிக்க அடியவர்கள் வாழ்கின்ற 'பெரும்பற்றப்புலியூர்' என்னும் சிதம்பரம் தலத்தில், சிறப்புமிக்க கொக்கின் இறகும், கொன்றை மலர் மாலையும் நெருங்கி விளங்கும், திருமுடியை உடைய சிற்றம்பலத்தில் ஆடும் நடராசப் பெருமானே! கங்கையாற்றைத் தாங்கிய உமது சிவந்த சடையில் வாழ்கின்ற பிறை நிலவும், புதிய ஊமத்தம்பூவும், எப்போதும் என் நினைவில் குடிகொண்டு, எனது அறிவிலும் சிந்தனையிலும் நிறைந்து விளங்குகின்றன’ என்று திருமாளிகைத்தேவர் உருகுகிறார்.* *திருச்சிற்றம்பலம்*
ஆன்மிகம் - நமச்சிவாய் வாழ்க னி 17 01ಸ 8 பணி அரன் புதன்கிழமை _ நமச்சிவாய் வாழ்க னி 17 01ಸ 8 பணி அரன் புதன்கிழமை _ - ShareChat