ShareChat
click to see wallet page
search
*#மூணேமூணு #மேலானவரங்கள் #விசுவாசம்நம்பிக்கைஅன்பு* *#பரிசுத்தஆவியின்அதிசயவரங்கள் #முன்னறிவித்ததுபோலவேவரம்நின்றுபோனது #ஆதித்திருச்சபை #வரம்நின்றுபோனதுகிபி150 #பரிசுத்தஆவியின்அபிஷேகம் #பரமஅழைப்பு* தேவனின் *இராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கிற வேலையை அச்சமின்றி செய்ய திருச்சபைக்கு பரிசுத்த ஆவி தெம்பு அளிக்கிறது* (அப்போஸ்தலர் 2:8-11; 4:31). முதலாம் நூற்றாண்டில் திருச்சபையார் கிறிஸ்துவின் இராஜ்ய நற்செய்தியை உலகமெங்கும் பரப்பும் பொருட்டு, அந்த செய்தியை நிரூபிக்க (குணமளித்தல், வேற்று மக்கள் பாஷை பேசுதல் போன்ற) சக்திவாய்ந்த அடையாளங்கள் செய்ய, *அந்த காலத்தில் திருச்சபைக்கு ஆவியின் விசேஷித்த அதிசய வரங்களை தேவன் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மூலம் கொடுத்தார்* (1 கொரிந்தியர் 12:8-10). வேதாகமம் (1 கொரி 13:8) முன்னறிவித்தது போலவே, அப்போஸ்தலர்கள் எல்லாரும் இறந்தபின், *2-ஆம் நூற்றாண்டிற்குள் அதிசய வரங்கள் யாவும் நின்றுபோயின.* இன்றளவும் நிலைக்கும் ஆவியின் வரங்கள் ஏதும் உண்டா? கொரிந்து பட்டண சபையில் யாருக்கு பெரிய வரங்கள் உள்ளது என்று சபையார் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் ('நான் அந்நிய பாஷைகளில் பேசுகிறேன்!', 'அதனால் என்ன? என்னால் மக்களை குணப்படுத்த முடியும்!'). அவர்களை கண்டித்து பவுல் பின்வருமாறு எழுதுகிறார் -- "வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவி ஒன்றே. ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது... இப்படியிருக்க, *மேன்மையான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிசிறந்த வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம்,* அறிவானாலும் ஒழிந்துபோம். *இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது;* இவைகளில் அன்பே பெரியது." 1கொரிந்தியர் 12:4 -- 13:13. அதிசய வரங்கள் யாவும் 2-ஆம் நூற்றாண்டோடு நின்றுபோனபின், பவுல் முன்னறிவித்தபடியே, *மூன்று வரங்கள் மட்டுமே கிறிஸ்துவின் வருகை வரை நிலைத்திருக்கின்றன* – அவையாவன.. *1. (கிறிஸ்துவின் மேல்) விசுவாசம்,* *2. (இராஜ்யம் வருமென்ற) நம்பிக்கை* மற்றும் *3. (பிதா, குமாரன் மற்றும் சகோதரர்/மனிதர் மேல் காட்டும்) அன்பு,* ..ஆகிய மூன்றாகும். அடுத்த கேள்வி: இம்மூன்று வரங்களில் அன்பே பெரிது என பவுல் கூற காரணம் என்ன? #🙏ஆன்மீகம் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன்
🙏ஆன்மீகம் - பவுல் ஆவியின்வரங்கள் பற்றி கொரிந்தியரிடம் பேசுகையில் tachristianityoriginallcom தீர்க்கதரிசனம் அந்நிய பாஷை சுகமளிப்பு . ஆவியின் அதிசய வரங்கள்! மெய்கிறிஸ்தவம் ஏதாச்சும் மிஞ்சுமா? எல்லாம் நின்னுபோம் 9L விசுவாசம் . கிறிஸ்து மேல நம்பிக்கை. ராஜ்யம் வர 9I60TL: மூணே மூணு கண்ணே கண்ணு போங்க. கொரிந்தியர் 13:13 ta.ChristianityOriginal com/ Tongues 1 பவுல் ஆவியின்வரங்கள் பற்றி கொரிந்தியரிடம் பேசுகையில் tachristianityoriginallcom தீர்க்கதரிசனம் அந்நிய பாஷை சுகமளிப்பு . ஆவியின் அதிசய வரங்கள்! மெய்கிறிஸ்தவம் ஏதாச்சும் மிஞ்சுமா? எல்லாம் நின்னுபோம் 9L விசுவாசம் . கிறிஸ்து மேல நம்பிக்கை. ராஜ்யம் வர 9I60TL: மூணே மூணு கண்ணே கண்ணு போங்க. கொரிந்தியர் 13:13 ta.ChristianityOriginal com/ Tongues 1 - ShareChat