*ஒரு முக்கிய அறிவிப்பு*
இன்று தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இன்ஷா அல்லாஹ்..இதில் நமக்கு பிடித்த கட்சி வெற்றி பெறலாம் அல்லது நமக்கு பிடிக்காத கட்சி வெற்றி பெறலாம் யார் வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கலாம் அல்லாஹ் நாடியவர்களுக்கு தான் ஆட்சி அதிகாரத்தை வழங்குவான் என்ற குர்ஆன் வசனம் நம் அனைவருக்கும் தெரிந்தது இந்த பதிவின் மூலம் நான் சொல்ல வருவது அல்லாஹ் நாடி ஒருவருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிய பிறகு நமக்கு பிடிக்காத கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்களை திட்டுவதை தவிர்க்கவும் அது எந்த கட்சியாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அப்படி அந்த கட்சியை திட்டுவதனால் அல்லாஹ்வுக்கு நாம் எதிராக செயல்பட்டது போல் இருக்கும் இந்த ஆட்சி அதிகாரத்தை வழங்கியவன் அல்லாஹ் அதன் மூலம் சில சோதனைகளை நமக்கு தரலாம் அவர்களுக்கும் தரலாம் அதில் விமர்சனம் செய்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது ஆகையால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதை வரவேற்போம்..ஒருவேளை அவர்கள் செய்யும் ஆட்சி முறை நமக்கு பிடிக்கவில்லை என்றால் அல்லாஹ்விடம் முறையிடுவோம் துஆக்கள் மூலம்..இது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ஆனால் நாம் அனைத்தும் தெரிந்தும் இந்த தவறை நாம் செய்யக்கூடாது என்பதே எனது கருத்து..
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.
(அல்குர்ஆன் : 3:26) #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


