#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம் கீ வா குப்பம் வட்டம் கீழ் ஆலத்தூர் கிராமத்தில் ஸ்ரீ கெங்கை அம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அம்மன் சிரசு வீதிகளில் ஊர்வலமாக சென்றது, அங்கங்கே தீப ஆராதனை காண்பித்தும் தேங்காய் உடைத்தும் பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கெங்கையம்மன் திருவிழாவை ஒட்டி 17 ஆம் ஆண்டு அசைவ விருந்து அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை சந்திரபாபு பெங்களூர், தாமு கீழ் ஆலத்தூர், ராஜசேகர் கொசவன் புதூர், ஆல்பர்ட் நாகல், மற்றும் செந்தில்குமார் அன்னதான நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்து இருந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ கெங்கை அம்மன் கோயில் திருவிழாவை கீழ் ஆலத்தூர் ஊர் பொதுமக்கள் ஊர் பெரியவர்கள் இளைஞர்கள் மற்றும் விழா குழு உறுப்பினர்கள் என திருவிழா ஏற்பாட்டைனை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.


