ShareChat
click to see wallet page
search
"அவசரம் நமக்கு, நிதானம் அல்லாஹ்வுக்கு." நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: “நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்." [ஸஹீஹ் புகாரி 6340] மலர் மலர்வதற்கு முன் மொட்டுக்குள் அதற்கான வேலை நடக்கும் வெளியில் தெரியவில்லை என்றாலும், உள்ளே இதழ்கள் விரிந்து கொண்டிருக்கும். உங்கள் துஆவும் அப்படித்தான். அல்லாஹ் பின்னணியில் காரணங்களை தயார் செய்து கொண்டிருக்கிறான். நீங்கள் நினைக்காத வழியில் அதை அழகாக்கி தருவான். சீசன் மாறினால் பூ மலராது குளிர் காலத்தில் ரோஜா பூக்காது. அதற்கான சீசன் வர வேண்டும். உங்கள் வாழ்க்கையிலும் அல்லாஹ் சரியான 'சீசனுக்காக' காத்திருக்கிறான். அந்த நேரம் வரும்போது, நீங்கள் கற்பனை செய்ததை விட அழகாக உங்கள் துஆ மலரும். நினைவில் கொள்ளுங்கள்: ரோஜா மலர்வதற்கு அல்லாஹ்வின் 'குன்' - ஆகு என்ற ஒரு கட்டளை போதும். உங்கள் துஆ நிறைவேறவும் அதே 'குன்' போதும். அந்த கட்டளை எப்போது வர வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். எனவே துஆ கேட்பதை நிறுத்தாதீர்கள். மொட்டு மலரும் வரை தண்ணீர் ஊற்றுவது போல, துஆவை தொடர்ந்து கேளுங்கள். சரியான நேரத்தில் அல்லாஹ் அதை மலரச் செய்வான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - راعد அல்லாஹ்வின் கட்டளையால் ஒவ்வொரு இதழும் மலர்வது போல, உங்கள் துஆக்களும் சரியான நேரத்தில் மலரும் راعد அல்லாஹ்வின் கட்டளையால் ஒவ்வொரு இதழும் மலர்வது போல, உங்கள் துஆக்களும் சரியான நேரத்தில் மலரும் - ShareChat