#அமைதியான சாலை
யாரும் இல்லாத சாலை,
ஏகாந்தமான இரவு,
சன்னல் தட்டும் மழை,
நிமிடங்களை மெதுவாக்குகிறது.
ஆயிரம் சிந்தனைகள்,
துளிகளாய் கரைந்து,
மனம் அமைதியில்,
நிம்மதி கொள்கிறது!
இந்த பயணம்
இரைச்சலற்ற இரவின்
அமைதியில் மனதிற்கு
நிம்மதியைத் தருகிறது.
இந்த இயற்கை நிலவு மற்றும்
நட்சத்திரங்கள்
இரவின் அழகை ரசிக்க
வைக்கின்றன.
இந்தத் தனிமை சிந்திக்கவும்,ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும்
நேரத்தை வழங்குகிறது.
இந்தப் பயணம் கடந்து போன காலங்களின் மலரும் நினைவுகளாய் பயணங்கள் முடிவதில்லை ....!!


