ShareChat
click to see wallet page
search
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:16* ஸா பாதத்விதயாஹதிர் ஜயதி தே யஸ்யாம் கிரீந்த்ராத்மஜே ப்ராசீனேந்துயுதே நகேந்துதசகே மௌலிதலீஸங்கதே ச ஸ்வஸ்யைகாதச மூர்த்திதாமுசிதாஸநேகாதசை வோடுபா நாபிப்ராண இவாபபௌ ஸ பகவானேகோபி ருத்ர: ஸ்வயம் ஹிமவானுடைய புத்திரியே! பிரணய கலகத்தில் ஸ்ரீபரமேஸ்வரன் நமஸ்கரிக்கும் போது உன் இரு ஸ்ரீபாதங்களையும் அவருடைய சிரஸின் மீது வைக்கிறாய். அப்போது உன் ஸ்ரீபாத நகங்களாகிய பத்து பாலசந்திரர்களுடன் ஏற்கனவே நிரந்தரமாக ஸ்ரீபரமேஸ்வரனின் சிரஸின் மீது இருக்கும் ஒரு பாலசந்திரனையும் சேர்த்து மொத்தம் பதினொரு பாலசந்திரர்கள் அவருடைய சிரஸை அலங்கரிக்கின்றனர். பகவான் ஸ்ரீபரமேஸ்வரன் (இரண்டற்றவராக) ஒருவரேயானாலும், தானே பதினொரு ருத்ர மூர்த்திகளாக விளங்கும் போது மொத்தம் பதினொரு பாலசந்திரர்கள் உண்டு என்பதால், இந்த சந்தர்ப்பத்தில் அவர் அந்த ஏகாதச ருத்ர வடிவத்தில் ஏகாதச சந்திரர்களைத் தாங்கி சோபிக்கிறார் போலிருக்கிறது. மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 16ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
🙏அம்மன் துணை🔱 - ShareChat
00:22