ShareChat
click to see wallet page
search
#முக்திக்கு_வழி_தரும்_மூன்று_மந்திரங்கள்! #பஞ்ச_ஸம்ஸ்காரத்தின் ஒரு பகுதியாக மூன்று மந்த்ரங்கள் ஆசார்யனால் சிஷ்யனுக்கு உபதேசிக்கப் படுகின்றன: 1)#திருமந்த்ரம் 🙏🙏#ஓம்_நமோ_நாராயணாய🙏🙏 எம்பெருமானின் இருஅவதாரங்களில் நாராயண ரிஷி நர ரிஷிக்கு #பத்ரிகாச்ரமத்தில் உபதேசித்தது. எம்பெருமானின் உடைமையான ஜீவாத்மா எம்பெருமானின் உகப்புக்காகவே இருத்தல் வேண்டும். எல்லார்க்கும் தலைவனான நாராயணனுக்கே கைங்கர்யம் செய்தல் வேண்டும் என்பது இதன் எளிய பொருள். இந்த திருமந்திரத்தை வதரியாசிரமத்தில் (பத்ரிநாத்) நாராயணன் நரனுக்கு அருளினான். அவனே நரன் (சீடன்), அவனே நாராயணன் (ஆச்சார்யன்)! 2)#மந்திர_ரத்தினம் என்று போற்றப்படும் #த்வயத்தை வைகுந்தத்தில் தான் மார்பில் தரித்த பிராட்டிக்கு (இலக்குமி தேவிக்கு)பரமன் உபதேசித்தார். 🙏ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே! ஸ்ரீமதே நாராயணாய நமஹ!🙏🙏 3)#சரம_சுலோகத்தை பார்த்தசாரதியாக குருச்சேத்திரப் போர்க்களத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்தார். பகவத் கீதையில் இது உள்ளது. 🙏🙏*ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ*🙏🙏 இந்த 3 மந்திரங்களையுமே #நாராயணனே_அருளியதால், அவன் குருபரம்பரையின் முதல் ஆச்சார்யன் ஆகிறான்! 🌷பரம்பொருளின் தன்மை, ⚡ஜீவாத்மாவின் தன்மை, 🌷முக்திக்கான வழிவகைகள், ⚡முக்தி என்ற இலக்கின் தன்மைகள், 🌷முக்திக்குத் தடையாக இருப்பவை ஆகிய 5 விஷயங்களை விளக்கும் சாரமாகவே இம்மூன்று ரகசிய மந்திரங்களும் (#ரகஸ்யத்ரயம்) விளங்குவதாக #மணவாள_மாமுனிகள் அருளியிருக்கிறார் #மரணததருவாயில் இருப்பவரின் செவிகளில் மந்திர ரத்தினம் என்று போற்றப்படும் கீழ்கண்ட த்வய மந்திரத்தை சொன்னால் #முக்தி அடைவர். *ஸ்ரீமந் நாராயணா சரெணெள சரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம* இதன் அர்த்தம் பிராட்டியுடன் கூடிய எம்பெருமானின் இரு திருவடிகளே உபாயம் மற்றும் உபேயம் ஆகும். அதாவது, அடையவேண்டிய பொருள் மற்றும் அடையவேண்டிய வழி இரண்டுமே எம்பெருமானின் திருவடிகளே ஆகும். ஓம் நமோ நாராயணா 🙏🌹🙏tks nalini gopalan #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏பெருமாள்
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat