#aanmeega thagavul. நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ?*
*இன்று மே மாதம் 4 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும்.*
*ஜோதிட ரீதியாக சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் தங்கி பயணிப்பார். அந்த வகையில், பரணி மூன்றாம் பாதத்தில் ஆரம்பித்து கிருத்திகை நட்சத்திரத்தில் முழுவதுமாக சூரியன் சஞ்சரிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலம் ஆகும்.*
*கிருத்திகை நட்சத்திரம் என்பது அக்னி பிழம்பான நட்சத்திரமாகும். முருகன் கிருத்திகை நட்சத்திரத்தில் தான் அவதரித்தார்.*
*கிருத்திகை என்பதே அக்னி நட்சத்திரம். அந்த நட்சத்திரத்திற்குள் சூரியன் பிரவேசிப்பது தான் அக்னி நட்சத்திர காலம் என்று கூறப்படுகிறது.*
*அறிவியல் ரீதியாக சூரியன் பூமிக்கு மிக அருகில் வரும் காலமே இந்த அக்னி நட்சத்திர காலமாகும்.*
*இந்த காலகட்டத்தில் சூரியனின் கதிர்கள் மிக பக்கமாக இருப்பதால் அதீத தாக்குதலை ஏற்படுத்துகிறது.*
*சூரியன் மிகவும் தீவிரமாக கதிர்வீச்சு தரும். வெப்பநிலை அதிகபட்சமாக உயரும். நிலம், காற்று, நீர் அனைத்தும் சூடாக இருக்கும்.*
*இந்த காலகட்டத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய வெயிலில் வெளியே போகாமல் இருப்பது நல்லது.*
*இலகுவான, குளிர்ச்சியான உணவுகள் சாப்பிடுவது நன்மை பயக்கும். நீர் காய்கறிகள், இளநீர், கம்பங்கூழ், பழைய சாதம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.*
*அக்னி நட்சத்திரம் என்பது ஜோதிட ரீதியிலும், இயற்கை ரீதியிலும் வெயில் உச்சத்தை அடையும் காலம். இந்த காலத்தில் உடல்நலத்தை கவனமாக பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.*
*அக்னி நட்சத்திரத்தில் சுப காரியங்கள் செய்யலாமா ?*
*அக்னி நட்சத்திர காலத்தில் வாடகை வீட்டுக்கு குடி போகலாம். திருமணத்திற்கான வேலைகளை எல்லாமே செய்யலாம்.*
*திருமணத்திற்கு பூ வைப்பது, உறுதி செய்வது, நிச்சயதார்த்தம் செய்வது போன்றவர்றை செய்யலாம்.*
*வளைகாப்பு இந்த காலத்தில செய்யலாம். 5,7,9 மாதத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக வளைகாப்பு செய்து கொள்ளலாம்.*
*மஞ்சள் நீராட்டு விழா செய்யலாம்.*
*கடை கட்டுவது, மண்டபம் கட்டுவது போன்றவற்றை செய்யலாம்.*
*குலதெய்வ வழிபாடுகளைச் செய்யலாம்.*
*அக்னி நட்சத்திர காலத்தில் செய்யக் கூடாதவை என்ன ?*
*அக்னி நட்சத்திர காலத்தில் புதிதாக கட்டிய சொந்த வீடுகளுக்கு குடி போவதை தவிர்ப்பது நல்லது.*
*மொட்டை அடிப்பது, காது குத்துவதைத் தவிர்ப்பது நல்லது.*
*மரங்களை வெட்டக் கூடாது. கூரை வேய்வது, ஓடு மாற்றும் வேலைகளை தவிர்ப்பது நல்லது.*
*விதை விதைப்பதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.*
*வழிபாடு முறைகள் :*
*அக்னி நட்சத்திர காலத்தில் ஏதேனும் சுப விஷயங்களை கட்டாயமாக செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால் கண்டிப்பாக செய்யலாம்.*
*அதற்கு முன்பாக குலதெய்வத்துக்கு அல்லது இஷ்ட தெய்வத்துக்கு குளிரான அபிஷேகம் செய்வது நல்லது.*
*குறிப்பாக, சிவன் கோயில்களுக்கு அபிஷேக பொருள்களை வாங்கித் தருவது நன்மை பயக்கும்.*
*சிவலிங்கத்திற்கு மேல் இருக்கும் தாரா பாத்திரத்திற்கு பன்னீர், இளநீர் வாங்கி கொடுக்கலாம்.*
*தயிர், பால் போன்றவற்றை அபிஷேகத்திற்கு வாங்கி கொடுப்பது நன்மை பயக்கும்.*
*விலங்குகள், பறவைக்கு தண்ணீர் வைப்பது நல்லது.*


