அதிகாலை 2 மணிக்கு உணவு டெலிவரி செய்ய வந்த ஒரு இளைஞன் சந்தித்த துயரமான அனுபவம் இது. அவர் சென்றிருந்த அபார்ட்மென்டில், டெலிவரி பணியாளர்கள் லிப்ட் பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்பு இருந்தது. அந்த விதியை மீறினால் ₹100 அபராதமும் விதிக்கப்படும் 😑
தான் மிகவும் சோர்வாக இருப்பதாகவும், லிப்ட் பயன்படுத்த அனுமதி இல்லாததால் கீழே வந்து உணவை பெற்றுக் கொள்ளுமாறு அவர் வாடிக்கையாளரிடம் கேட்டார். ஆனால் “எனக்கு அது பற்றிய கவலை இல்லை, என் ஆர்டரை மேலே கொண்டு வா” என்பதே வாடிக்கையாளரின் பதில் 😑
இறுதியில் வேறு வழியில்லாமல், அந்த டெலிவரி பையன் ஆறு மாடி படிக்கட்டுகளை ஏறி மேலே சென்று உணவை வழங்க வேண்டியதாகிவிட்டது 💔🙏
அதிகாலை 2 மணி… உலகம் முழுவதும் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், பசித்தவர்களுக்கு உணவு கொண்டு சேர்க்க ஓடும் ஒரு டெலிவரி பையனின் நிலை இது.
ஒருபுறம் அபார்ட்மென்ட் நிர்வாகத்தின் மனிதநேயமற்ற விதி 👎
மற்றொரு புறம் மனிதாபிமானமே இல்லாத வாடிக்கையாளர் 🙏
இத்தகைய பாகுபாடு கொண்ட விதிகள் நாகரிகமான சமூகத்திற்கே அவமானம்.
அவர்கள் நம்முடைய வேலைக்காரர்கள் அல்ல; நம்மைப் போலவே பசியை போக்க ஓடும் மனிதர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அபார்ட்மென்ட்களில் இத்தகைய பாகுபாடு நிறைந்த விதிகளை அமல்படுத்துவதும், அதை பார்த்தும் பார்த்ததே இல்லாதது போல் இருப்பதும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
இதை படிப்பவர்கள் எத்தனை பேர் ஃபுட் டெலிவரி வேலைகள் செய்திருப்பீர்கள் ?
அல்லது ஆர்டர் செய்பவர்களை எத்தனை பேர் மரியாதை உடன் நடத்தி இருக்கிறீர்கள்?
#SaiSudhaDevaTrust #DevaJobPortal #SaiDevGroup #SaiDevTrailers #Brahmin_Political_Party


