⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
♦️♦️பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி 6
🌹ஆனந்தம் பெருகும்
🚩சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்
🌹விளக்கம்:
🔹கலைகளில் நாயகன் என்று சந்திரனைப் போற்றுவார்கள். வான் வழியே உலகைச் சுற்றும் அந்தச் சந்திரனையே ஒளியிழக்கச் செய்து, அவருக்குப் புத்தி கொடுத்து, புகழ் வரலாறு படைத்தவரே! உலக நீதியை எடுத்துரைத்த பெருமானே!
🔹தங்களை வழிபடாமல் ஆணவத்துடன் சென்று விட்ட தேவர் தலைவனான இந்திரனு க்குப் புத்தி புகட்டும்விதம் தேரின் அச்சை முறியச் செய்து, வழிபாட்டின் தத்துவம் சொன்ன முழுமுதற் தெய்வமே... உம்மை வணங்குகிறோம்.
🔹தங்களைப் போற்றி பிரார்த்தனை செய்ய வந்திருக்கும் எங்கள் முன்தோன்றி, பசுவானது தான் ஈன்றெடுத்த கன்றினைக் கண்டதும் எவ்வாறு மகிழ்ச்சியோடும் கனிவோடும் இன்முகம் காட்டிப் பாலூட்டுகிற தோ,
🔹அதுபோல் தாங்களும் எங்களுக்கு இன்முகம் காட்டி, மனநிறைவான தீர்வுகளைத் தந்தருள வேண்டுகிறோம். அதன்பொருட்டு, தோரணப் பிள்ளையாரே... காலம் தாழ்த்தாமல் எங்கள் முன் தோன்றி அருள் பாலிக்கவேண்டும்.
🌹விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி...
🌹15.07.2026...நேசமுடன் விஜயராகவன்.... #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏அம்மன் துணை🔱 #🕉️சதுர்த்தி விரதம் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞