அங்காளி
பார்த்து கொள்ளவாள்
பார்த்துக்கொண்டே உள்ளார்
#உங்கள்_வாழ்க்கையில் வரும் எப்பேர்ப்பட்ட #துன்பத்தையும்_போக்கும் துதிப்பாடல்🕉️💐🙏💯
#சைவ_சமயத்தின்_நால்வர் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்) ஆகியோரின் பெருமைகளைக் கூறும் புகழ்பெற்ற துதிப் பாடல் வரிகள் மற்றும் அதன் எளிய விளக்கம் 🕉️💐🙏📝📝📝💐💐💐💐💯🕉️
#நால்வர்_துதி_வரிகள்:💐🙏🕉️💯
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!1️⃣🟡💛
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி!2️⃣🔵💙
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!3️⃣🟣💜
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி! போற்றி!4️⃣🔴♥️
#பாடல்_வரிகளின்_எளிய விளக்கம்:💐🙏🕉️💯
#திருஞானசம்பந்தர்_வரி:🕉️🕉️🕉️
#பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!"💐💐💐🕉️
#பாடல்_விளக்கம்:💐🙏🕉️💯
பாண்டிய மன்னனின் (பூழியர்கோன்) வெப்பு நோயைத் (தீராத சுரம்) தனது பதிகத்தால் நீக்கிய, சீர்காழி (புகலியர்) அவதாரமான திருஞானசம்பந்தரின் திருவடிகளைப் போற்றுகிறேன். 💐💐💐
#திருநாவுக்கரசர்_வரி:🕉️💐🙏💯
"ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி!"💐💐💐🕉️
#பாடல்_விளக்கம்: கடலில் (ஆழி) இடப்பட்ட கல்லைத் தெப்பமாக மிதக்கச் செய்து, அதன் மீது ஏறி கரையேறிய திருநாவுக்கரசர் (அப்பர்) என்னும் பெருமானின் திருவடிகளை வணங்குகிறேன். 🙏🙏🙏💯
#சுந்தரர்_வரி:🕉️💐🙏💯
"வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!"
#பாடல்_விளக்கம்:🙏💐🕉️
திருநாவலூரில் அவதரித்து, இறைவனையே தன் தோழனாகக் கொண்டு உரிமை பாராட்டிய சுந்தரமூர்த்தி நாயனாரின் (வன்தொண்டர்) திருவடிகளை வாழ்த்தி வணங்குகிறேன். 🙏🙏🙏
#மாணிக்கவாசகர்_வரி:🕉️💐🙏
"ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி! போற்றி!"💐💐💐🕉️
#பாடல்_விளக்கம்:💐🙏🕉️
திருவாதவூரில் பிறந்து, சிவபெருமானின் திருவருளைப் பெற்று '#திருவாசகம்' எனும் அமுதத்தை அருளிய மாணிக்கவாசகரின் திருவடிகளை மீண்டும் மீண்டும் போற்றி வணங்குகிறேன். 🙏💐💐🕉️💯
#திருமூலர்_திருமந்திரம் 🔥🧘🙏
#கொக்குப்_போல்_தியானம் செய்வோம் கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க் குடையாமல் ஊழி இருக்கலு மாமே. 🙏🙏🙏
#பாடல்_விளக்கம்:🔥🙏🧘🌙
#மூலாதாரத்தை_அடைத்து பிராண வாயுவை மேலே எழுப்பி, இடையில் உள்ள புருவ மத்தியில் மனத்தை நிறுத்தி, நீர் ஓடும் கால்வாயில் மீனுக்காக காத்திருக்கும் கொக்குப் போல #ஒரே_குறிக்கோளுடன்_தியானம்_செய்ய வல்லவர்க்கு உடல் பல ஆண்டுகள் சிதையாமல் இருக்கும். 🧘🧘💯
ஓம் சிவ சிவ ஓம் 🙏
ஓம் மகேந்திரன் சிவவாக்கியர் திருவடி வாழ்க
🙏🔥🌙
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தருவார் ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும்
#நமசிவய #எனும் #ஐந்தெழுத்து #மந்திரம்..!
#நமசிவய எனும் வெறும் #அஞ்செழுத்து, #சைவத்தின் #வெறும் #மந்திரம் #அல்ல!!
இது ஒரு சித்தர்களின் பரிபாஷை!
பிரபஞ்சம் உருவானதன் வரிசை ரகசியம் குறித்து #திருமூலர் சொல்ல வரும் போது.....
அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்
அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே
(1) முதல் வரி : அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்
ந- என்ற எழுத்தால் மண்ணையும்,
ம- என்ற எழுத்தால் நீரையும்,
சி- என்ற எழுத்தால் நெருப்பையும்,
வ- என்ற எழுத்தால் காற்றையும்,
ய- என்ற எழுத்தால் ஆகாயமும் ஆகிய ஐந்து பூதங்களை படைத்தான்.
(2) அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்
நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்து நான்கு இலட்சம் உருவ பேதங்களாய்ப் பிறவிகள் மருவி
எவ்வழியும் அஞ்செழுத்தால் தொடர்ந்து பெருகியிருக்கின்றன.....
வித்து, வேர்வை, முட்டை, கருப்பை என்னும் இந்த நான்கும் பிறவிக்கு மூல கிளைகளாக வந்துள்ளன.
அஞ்செழுத்தால் 84 லட்சம் யோனி பேதங்களையும் இப்புவனத்தில்
படைத்ததான்
ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனி என்பான்ஆரவந்த நான்கு நூறாயிரத்துள் தீர்வரியகன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும் போற்சென்மித்து உழலத் திரோதித்து வெந்நிரய.....
என்கிறது ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளிய "திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா"
ந- என்ற எழுத்தால் எலும்பு, நரம்பு
தசையால் ஆன உடலையும்,
ம- என்ற எழுத்தால் நீர் ரத்தம் இவைகளையும்,
சி- என்ற எழுத்தால் நெருப்பு
உடலின் சூட்டையும்,
வ- என்ற எழுத்தால் காற்று,
சுவாசம் எனும் சரம் கொண்டு சரீரத்தையும்,
ய- என்ற எழுத்தால் ஆகாயம் கொண்டு அறிவு, மனம் என்பவற்றையும் படைத்தான்.
(3) அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்
இந்த பிரபஞ்சத்தை நிர்வகிப்பதற்காக,
ந- பிரமன் ஆக்கல்
ம- திருமால் காத்தல்
சி- ருத்திரன் அழித்தல்
வ- மகேஸ்வரன் மறைத்தல்
ய- சதாசிவன் அருளல்
இந்த ஐவரின் உருவால் அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்.....
(4) எல்லா உயிர்களுக்கும் உயர்வாக படைக்கப் பெற்ற மனித உடலுக்குள் ஐந்து ஆதாரங்களிலும் ஐந்துவகை தொழில் செய்யும் தெய்வங்களை நிலைபெற செய்து, அவர்களுக்கு மேலே உச்சிக்குழி முதல் உண்ணாக்கு வரை நீண்டுள்ள பிரம்மரந்திரம் எனும் நுண்ணிய துவாரத்துக்குள் நெற்றி நாடு நிலையில் மனிதனின் சூக்ஷும சரீரத்தை துரியம் என்ற நிலையில் வைத்து, அதற்கு மேலே துரியாதீதம் என்ற நிலையில் ஜீவ சொரூபமாக பரம் பொருள் அமர்ந்து (அற ஆழியின் நடுவில் சுடராக, ஜோதியாக) இரு நாசிகள் வழியே சுவாசத்தை
இழுத்தும், விடுத்தும் உடலை இயக்க செய்து வருகிறது.
ந- சுவாதிஷ்டானம் பிரமன் ஆக்கல்
ம- மணிபூரகம் திருமால் காத்தல்
சி- அனாகதம் ருத்திரன் அழித்தல்
வ- விசுக்தி மகேஸ்வரன் மறைத்தல்
ய- ஆக்ஞை சதாசிவன் அருளல்
மூலாதாரத்தின் அட்சரம் "ஓம்"
அதன் அதிபதி விநாயகர்.
எனவே அது இதில் சேர்க்கப்படவில்லை....
இவ்வாறு அஞ்செழுத்தால் இந்த பிரபஞ்சமும் ,மனிதனும் இயங்கும்
விதத்தை நான்கு வரிகளில் நயமாக #திருமூலர் விளக்குகிறார்.....
#திருச்சிற்றம்பலம்
ஒருவரின் பார்வையை வைத்து
அவரின் வலியையும் அறியலாம்
அகந்தையையும் அறியலாம்
அன்பையும் அறியலாம்;;
திருச்சிற்றம்பலம்.
எத்தனை பெரிய பெரிய கோடீஸ்வரர் இருந்து இடம் தெரியாமல் போய்விட்டார்
"பட்டினத்தார்" 42
கட்டிஅணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டிமுழக்கி அழுவார் மயானங் குறுகியப்பால்
எட்டியடி வைப்பரோ இறைவாகச்சி யேகம்பனே.
சிவாயநம.
இறைவனை வழிபடுங்கள்
இதயம் பேரின்பமாகும்
இதனையே வேண்டுவேன் நானும்😂
அனைவரும் வாழ்க
அமைதியும் நிம்மதியும் சூழ்க🙏❤🙌
இறையருள் நிறைந்த
எனக்கெல்லாம் தைரியம்
எங்கிருந்து வந்தது
எல்லாம் நீங்கள் தந்தது
என் வீட்டருகே இருப்பவரிடமும்
பேசுவதற்குத் தயக்கம் கொள்வேன்
இப்போது இணைய உறவுகள் யாவரிடத்தும்
அச்சமின்றிப் பேசிக் கொண்டு
அகமகிழ்ந்து அன்பு செய்கிறேன்
இணையத்தில் கற்றுக் கொள்கிறேன்
வாழ்வின் படிப்பினைகளை
நன்றி மக்களே🙏
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும்
( கடைவாசல் – மூலாதாரம், இடைவாசல் – சுழுமுனை, ஊழி – நெடுங்காலம )
நதி ஓடிக்கொண்டே இருக்கிறது, நீயும் ஓடிக்கொண்டே இரு. தேங்கி நிற்கும் நீரும், தேங்கி நிற்கும் மனிதனும் கெட்டுப் போவார்கள்.
பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத நிமிடங்களைத் தான், நேரம் சரியில்லை என்று கூறி தப்பித்துக் கொள்கிறோம்
நேற்று நீங்கள் தோற்றிருக்கலாம், ஆனால் இன்று உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 24 மணிநேரம் ஒரு புதிய வரலாறு படைக்கக் கிடைத்த வாய்ப்பாகும்.
எதிர் நீச்சல் போடுபவர்களுக்கு ஆழம் ஒரு பொருட்டல்ல. தோல்வியை சமாளிக்க கற்றுக் கொண்டால் வெற்றி நிச்சயம் சாத்தியமாகும்.
🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய



