#nadappathu nadakkattum. வாழ்வதும்,
பூனைகள் வாழ்வதும்
ஒரே வீட்டில் தான்...
புலிகள் வாழ்வதும்,
புள்ளிமான்கள் வாழ்வதும்
ஒரே காட்டில் தான்...
சிறுமீன்கள் வாழ்வதும்,
சுறாமீன்கள் வாழ்வதும்
ஒரே கடலில் தான்...
இல்லாதவனுக்கும்,
இருப்பவனுக்கும்
பூமி ஒன்று தான்...
வாழ்க்கை என்பது...
ஏழை, எளியோர்க்கு
போராடி வெற்றி கொள்வது...
ஏமாற்று அரசியல்வாதிக்கோ
அடித்துப் பிடுங்கி சாப்பிடுவது...
கொள்கை என்பார்,
கூட்டணி என்பார்,
அடித்தக் கொள்ளையில்
ஆளுக்குப் பாதி
பிரித்துக் கொள்வார்...
ஏழைகள் முன்னேற
ஒரே வழி கல்வி கற்பது தான்...
அதிலும் கூட
நுழைவுத்தேர்வு என்ற பெயரில்
நுழைய விடாமல் தடுப்பதும்...
புதியக் கல்விக் கொள்கை
என்ற பெயரில் ஏழைகளின்
கல்வி வளர்ச்சியைத் தடுப்பதும்...
எதுவென சிந்திப்பீர்,
செயல்படுவீர், வெற்றி காண்பீர். 😊😊😊


