Jikuna News
#😱சுற்றிப்பார்க்க சென்று கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி👦🏻 தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் ஃபைபர் படகில் கடலைச் சுற்றிப் பார்க்கச் சென்றபோது, கடலில் மூழ்கி ஜோஸ்வா (16), மனோஜ் (16) ஆகிய இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை இவர்கள் சென்ற படகின் எஞ்சின் பழுதானதால், நீந்தி கரைசேர முயன்று கடலில் குதித்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்தது; இவர்களது உடல்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன.