*ஏப்ரல் 09,*
*ராகுல் சாங்கிருத்தியாயன்*
(Rahul Sankrityayan)
ஹிந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அறியப்படுபவரும், மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் (Rahul Sankrityayan) 1893ம் ஆண்டு ஏப்ரல் 09ம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆஸிம்கார் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கேதார்நாத் பாண்டே.
இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய 'வால்கா ஸே கங்கா' நூல் வேதகாலத்திற்கு முந்தைய நாட்களிலிருந்து 1944ம் ஆண்டு வரையிலான காலக் கண்ணாடி. இந்த வரலாற்றுப் புனைவு நூல் மொத்தம் 14 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
இவர் புத்த துறவியாக மாறிய பிறகு தன் பெயரை ராகுல் சாங்க்ருத் தியாயன் என்று மாற்றிக்கொண்டார். இவர் முறைப்படி கல்வி எதுவும் கற்கவில்லை என்றாலும் சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராக நியமித்தது.
இவர் சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷண் விருது, மகாபண்டிட் உள்ளிட்ட பல பட்டங்களையும் பெற்றுள்ளார். மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது, சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன.
அறிவுக்கடல், தத்துவஞானி, மகாபண்டிதர் என்று போற்றப்படும் ராகுல் சாங்க்ருதியாயன் 1963ம் ஆண்டில் தனது 70வது வயதில் மறைந்தார். #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா


