Murugan
5K views • 1 days ago
#🔴 LIVE: 2026 பட்ஜெட் அதிரடி அறிவிப்புகள் 💼 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥Trending வீடியோஸ்📺 #🎙️அரசியல் தர்பார் 👀நதிகள் இணைப்பு மற்றும் நதிகள் மீட்பு குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டைக் குறிப்பிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன், மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உரிய நியாயமான பங்களிப்பையும், நலனையும், உரிமையையும் அரசு தொடர்ந்து பாதுகாக்கும் என்று உறுதி அளித்துள்ளார். ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்கள், தீர்ப்பாயங்களின் தீர்ப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின்படி காவிரி நீர் உரிய நேரத்தில் திறந்துவிடப்படுவதையும், மேகதாது திட்டம் போன்ற மாநில உரிமைகளைப் பாதிக்கக்கூடிய திட்டங்களைக் கடுமையாக எதிர்த்துச் சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதையும் அரசு உறுதி செய்யும் என்றார். மேலும், நீண்ட கால நீர் பாதுகாப்பை ஏற்படுத்தவும் விவசாயிகள் நலனைக் காக்கவும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துதல், ஆனைமலை ஆறு - நல்லாறு திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தத் தேவையான வலியுறுத்தல்களைத் தமிழ்நாடு அரசுத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
64 likes
1 comment • 56 shares