#🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💪தி.மு.க
இதுவரை இந்திய அரசியலில் எந்த மாநில முதல்வரும் அறிவிக்காத ஒரு மடத்தனமான அறிவிப்பு !!!
ஒருவர் எவ்வளவு முக்கியமான பதவியில் வகித்தாலும், அவரது பிறந்த நாளுக்கு அரசாங்க வருவாயை எப்படி நிறுத்த முடியும்...? இது ஜனநாயக விரோத செயல் இல்லையா..?
உதாரணமாக, வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணமாக 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 200 ரூபாய், 5 - 12 வயதுள்ள சிறுவர்களுக்கு 50 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.
ஒரு நாளில் குறைந்த பட்சம் 5,500 பேர் வருகிறார்கள் எனில், குறைவாக கணக்கிட்டாலும் சுமார் 10 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. இரண்டு நாட்களில் 20 லட்சம் ஆகிறது.
இங்கே மேலும் சில உயிரியல் பூங்காக்களிலும் இரண்டு நாட்களுக்கு இலவசம் எனில், எப்படியும் சுமார் 1 கோடி அளவுக்கு அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்படுகிறது.
இந்த வருவாயை விஜய் தெரிந்தே அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி தன்னோட சொந்த விளம்பரத்திற்கு பயன்படுத்துகிறார்.
அதாவது, இவரது பிறந்த நாளுக்கு அரசாங்க பணமான 1 கோடியை எடுத்து மக்களுக்கு செலவு செய்வது மக்கள் விரோத செயல் இல்லையா...?
வேண்டுமானால் நீங்கள் அந்த இரண்டு நாட்களுக்கு தேவைப்படும் அனைத்து நுழைவுக்கட்டணங்களையும் உங்கள் சொந்த பணத்தில் செலவிட்டு வாங்கிய பிறகு, மக்களுக்கு இலவச நுழைவு கட்டணத்தை அறிவிக்கலாமே..! அப்போது அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்படாது தானே..?
'எங்க தளபதி தன்னோட சொந்த பணத்தை எடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்' என தற்குறி ஜென்மங்கள் பெருமையாக சொன்னார்கள்.
ஆனால், இதற்கு நேர் எதிராக அரசாங்க பணத்தை எடுத்து இவர் தன்னோட பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இது தானடா நீங்கள் கேட்ட மாற்றம்...?


