ShareChat
click to see wallet page
search
இதுபோல்_மோசடி_செய்தால் நாய்_கூட_ஆட்சியை_பிடிக்கலாம் இந்திய தேர்தல் ஆணையம் தாங்கள் பயன்படுத்தும் வாக்கு இயந்திரங்களில் இணையத் தொடர்பு இல்லை, OS இல்லை, திரைகள் (Monitor) இல்லை, USB Board இல்லை, கால்குலேட்டர் போன்ற எளிமையானது ஆகவே இதை யாரும் ஹேக்கிங் மூலம் வாக்குகளை திருடவோ மடைமாற்றவோ முடியாது என்று சாதித்தாலும். இந்தியத் தேர்தல் முறையிலுள்ள நிர்வாகப்பாதுகாப்பை (Administrative Security) மீறி கீழுள்ள தொழில்நுட்பம் மூலம் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும். Stuxnet ( #Israel_Technology ) Air-Gap Hacking or Power Line Side-Channel Attacks Electronic Emissions Power Hammer Air-Hopper & Fansmitter இது இணையத் தொடர்பு (Internet) இல்லாத கணினிகள் அல்லது மின்னணு சாதனங்களிலிருந்து கூட தகவல்களைத் திருடப் பயன்படுத்தப்படும் ஒரு முன்னேறிய உளவு முறை. EVM-களில் USB போர்டோ, ஸ்பீக்கர்களோ, ஃபேன்களோ அல்லது திரையோ (Monitor) கிடையாது என்பதால் இந்த குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் (Fansmitter போன்றவை) நேரடியாக இதில் செயல்படாது. #ரேண்டமைசேஷன் (Randomization) : எந்த இயந்திரம் எந்த தொகுதிக்கு போகும், எந்த வேட்பாளர் எந்த வரிசையில் இருப்பார் என்பது கடைசி நிமிடம் வரை யாருக்கும் தெரியாது. எனவே, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக முன்கூட்டியே புரோகிராம் செய்வது கடினம். தேர்தல் காலத்தில் இயந்திரங்கள் 24 மணிநேர கண்காணிப்பு மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்படுவதால் chip-ஐ மாற்ற முடியாது. ஆனால், சிப் தயாரிக்கும் இடத்திலேயே #Stuxnet போன்ற ஒரு வைரஸை ரகசியமாக உள்ளே வைத்தால், அது எப்போது செயல்பட வேண்டும் (Trigger) என்ற நேரத்தை வைத்து, வாக்கு எண்ணிக்கையை மடைமாற்ற முடியும். இதற்கு #சின்னம் வரிசைப்படியான #பட்டன்_கோட் (Button Sequence) #வேட்பாளர்_பெயர் (Candidate Sequence) தேவையே இல்லை. அதாவது நீங்கள் அழுத்திய பட்டன் ஒன்று ஆனால் வாக்கு விழுந்தது வேறு வேட்பாளருக்கு என்ற சர்ச்சை ஏற்படாது. #நேரம் (Time-based Trigger) : சிப்பிற்குள் இருக்கும் கடிகாரத்தை (Internal Clock) வைத்து, தேர்தல் முடிந்து இயந்திரம் சீல் வைக்கப்பட்ட பிறகு, நள்ளிரவு 2 மணிக்கு வாக்குகளை மாற்று என்று கட்டளையிடலாம். அல்லது #Memory_Manipulation வாக்குகள் பதிவாகும் போது எதையும் மாற்றாமல், இயந்திரம் அமைதியாக இருக்கும். ஆனால், வாக்கு எண்ணிக்கைக்காக Result பட்டனை அழுத்தும்போது, சிப் தனது கணக்கை (Calculation) நொடிப் பொழுதில் மாற்றி, திரையில் (Display) தவறான எண்ணிக்கையைக் காட்டும். EVM இயந்திரம் உள்ளே இருக்கும் மெமரியில் (EEPROM) சேமிக்கப்பட்ட தரவுகளை நாம் கண்களால் பார்க்க முடியாது. சிப் என்ன எண்களைக் காட்டுகிறதோ அதுதான் இறுதி முடிவு. ஆகவே இதை சுலபமாக யாரும் கண்டுபிடிக்க முடியாது. #மால்வேர்_எப்படிப்_புதிய #கட்டளைகளை_ஏற்கிறது? (Dynamic Command) ஒரு சிப்பைத் தயாரிக்கும் போதே அதற்குள் Variable Logic (மாறும் தன்மை கொண்ட தர்க்கம்) என்ற முறையில் புரோகிராம் எழுதப்பட்டிருக்கும். #அதாவது... நான் சொல்லும் போது மட்டும் நீ வேலை செய், நான் யாருக்குச் சொல்கிறேனோ அவருக்கு வாக்குகளை மாற்று என்பது தான் அந்த அடிப்படை புரோகிராம். #புரோகிராம்_செய்யப்பட்ட #வழிமுறை : சிப்பிற்குள் இருக்கும் வைரஸ் ஒரு வெற்றுப் படிவம் அதாவது (Blank template) போல இருக்கும். #புதிய_கட்டளை (Injection) : ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர் வரிசை இறுதி செய்யப்பட்ட பிறகு, சின்னங்களை ஏற்றப் பயன்படுத்தப்படும் SLU (Symbol Loading Unit) கருவிகள் மூலம் அந்த விவரங்கள் கணினியில் ஏற்றப்படும். EVM இயந்திரங்களைச் சரிபார்க்கும் (First Level Checking - FLC) போதோ அல்லது சின்னங்களை இயந்திரத்தில் பொருத்தும் போதோ (Candidate Setting), SLU கருவி மூலம் எந்தப் பொத்தான் எந்தக் கட்சிக்குரியது என்ற விவரத்தை சிப்பிற்குள் இருக்கும் மால்வேருக்குத் தெரியப்படுத்த முடியும். Symbol Loading Unit மூலம் சிக்னல் கொடுக்கும் போது, அந்த வைரஸிற்கு இரண்டு தகவல்கள் கடத்தப்படுகின்றன. #யார்_இலக்கு? : எடுத்துக்காட்டாக பட்டன் எண் 3-ல் இருக்கும் வேட்பாளர். #எவ்வளவு_திருட_வேண்டும்? : சதவீத அடிப்படையில் மாற்றுதல் (Percentage Capping) எடுத்துக்காட்டாக மற்றவர்களிடம் இருந்து 15% வாக்குகளை இவருக்கு மாற்று. இந்தத் தகவல்கள் சிப்பிற்குள் சென்றவுடன், ஏற்கனவே உள்ள மால்வேர் அந்தப் புதிய தரவுகளை (Data) எடுத்துக்கொண்டு தனது வேலையைத் தொடங்கும். இது உங்கள் மொபைலில் ஒரு ஆப் (App) இருக்கும்போது, அதற்கு வரும் Update அல்லது Notification போன்றது தான். ஆப் ஏற்கனவே இருக்கும், ஆனால் அது என்ன செய்ய வேண்டும் என்ற புதிய தகவலை மட்டும் சர்வர் அனுப்புகிறது. இதன் மூலம் அந்த தேர்தலில் யார் எத்தனை விழுக்காடு வாக்குகளை பெற்று வெற்றிபெற வேண்டும் என Symbol Loading Unit மூலம் மைக்ரோ கண்ட்ரோலருக்கு கட்டளை இடப்பட்டதோ அவரே வெற்றி பெறுவார். இது அப்பட்டமான தேர்தல் மோசடி. ஜனநாயக படுகொலை. #VVPAT_சீட்டுகளை_எண்ணுவதில் #உள்ள_சிக்கல்கள்_மற்றும் #உச்ச_நீதிமன்ற_தீர்ப்பு : இந்த தொழில்நுட்ப சந்தேகங்களுக்குத் தீர்வாகத் தான் VVPAT (Voter Verifiable Paper Audit Trail) கொண்டு வரப்பட்டது. ஆனால் இதிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. #தற்போதைய_நடைமுறை : இந்தியாவில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு அல்லது நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதிக்கு வெறும் 5 சீரற்ற (Random) EVM-களின் VVPAT சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. #சிக்கல் : ஒரு தொகுதியில் 300 இயந்திரங்கள் இருந்தால், வெறும் 5-ஐ மட்டும் எண்ணுவது 100% துல்லியமான முடிவைத் தராது என்பது நிபுணர்களின் வாதம். மற்ற 295 இயந்திரங்களில் மால்வேர் இருந்தால் அது பிடிபட வாய்ப்பு குறைவு. #உச்ச_நீதிமன்றத்தின் #அண்மைக்கால_நிலைப்பாடு (ஏப்ரல் 2024 - மே 2026 இடைப்பட்ட தகவல்கள்) : 100% #எண்ண_முடியாது : 100% VVPAT சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இது தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கருதுகிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட எண்ணுவதில் உச்ச நீதிமன்றத்திற்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை. #பாதுகாப்பு_காரணம் : Security Excuse ஒரு சட்ட ஓட்டை தேர்தல் ஆணையம் பெரும்பாலும் Intellectual Property (காப்புரிமை) மற்றும் National Security ஆகிய இரண்டு காரணங்களைக் காட்டி, EVM மென்பொருளைச் சுயாதீன ஆய்வுக்கு உட்படுத்த மறுக்கிறது. #அரசு_தரப்பு_வாதம் : மென்பொருளை வெளிப்படையாக்கினால், வெளிநாட்டுச் சக்திகள் அல்லது சமூக விரோதிகள் அதை ஹேக் செய்ய எளிதாகிவிடும். ஆய்வுகள் செய்த பிறகு ஆணையம் Security Code-ஐ மாற்றிக்கொள்ள முடியும் போது, இணைய தொடர்பே இல்லாத வெறும் கால்குலேட்டர் போன்ற வாக்கு இயந்திரங்களை எப்படி வெளிநாட்டு சக்திகளால் ஹேக் செய்ய முடியும்?. நம்மிடம் யாராலும் ஹேக் செய்ய முடியாது என்று சொல்கிற இந்த தேர்தல் ஆணையத்திடம் வெளிநாட்டு சக்திகளால் மட்டும் எப்படி ஹேக் செய்ய முடியும் என்று நீதிமன்றம் ஏன் கேட்கவில்லை. மறுப்பு_வாதம் : ஆளும் பாஜக அரசால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் தலைமையிலான மத்திய தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னாட்சி அமைப்பின் மீதே சந்தேகம் எழும் போது, அந்த அமைப்பே பாதுகாப்பு என்ற பெயரில் தன்னைத் தற்காத்துக் கொள்வது Natural Justice (இயற்கை நீதி) கொள்கைக்கு எதிரானது. தன்னாட்சி_அமைப்புகளின் மீதான_நம்பகத்தன்மை : பாஜக - ஆர்எஸ்எஸ் ஊடுருவல் மற்றும் தேர்தல் ஆணையர்களின் நியமன முறை (Appointment Process) குறித்து உச்ச நீதிமன்றத்திலேயே வழக்குகள் நடந்துள்ளன. #சமீபத்திய_தீர்ப்பு : தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்து, தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒரு மத்திய அமைச்சரைச் சேர்த்தது. இதுவே நமது சந்தேகத்தை வலுப்படுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. #சட்டப்படி_இது_எப்படி_நீதியாகும்? ஒரு வேட்பாளர் தனக்கு அநீதி நடந்துள்ளதாகக் கருதினால், அவருக்கு FullDisclosure (முழுமையான விவரங்களை அறியும் உரிமை) உண்டு. #Article_324 : தேர்தல் நடத்தும் அதிகாரம் ஆணையத்திற்கு இருந்தாலும், அது ஒருதலைப்பட்சமாக இருக்கக்கூடாது. #மறுப்பு_நீதியற்றது : மென்பொருள் மற்றும் ஹார்டுவேரை ஆய்வு செய்ய அனுமதி மறுப்பது, ஒரு குற்றவாளி தனது குற்றத்திற்கான ஆதாரத்தை ரகசியம் என்று சொல்லி மறைப்பதற்குச் சமம் என்று சட்ட நிபுணர்கள் வாதிடுகின்றனர். #இதற்கு_என்னதான்_தீர்வு? உச்ச நீதிமன்றம் தனது Suo Motu (தானாக முன்வந்து விசாரணை நடத்தும்) அதிகாரத்தைப் பயன்படுத்தி பின்வருவனவற்றைச் செய்ய முடியும். #Technical_Expert_Audit : தேர்தல் ஆணையத்திற்கும் மத்திய அரசிற்கும் சம்பந்தமில்லாத, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சைபர் பாதுகாப்பு நிபுணர்களை கொண்டு ஒரு தணிக்கையை நடத்த உத்தரவிடலாம். (எ.கா. ரஷ்ய நிபுணர்கள் அல்லது பாரபட்சமற்ற இந்திய ஐடி வல்லுநர்கள்). #Audit_Trail_Verification : மின்னணு வாக்குகளை விட, காகிதச்சீட்டுகளை (VVPAT) முதன்மை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றலாம். #யதார்த்தம் : நீதித்துறையும், தேர்தல் ஆணையமும் மத்திய அரசின் அழுத்தத்தில் இருப்பதாக மக்கள் கருதினால், அது ஜனநாயகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படும். எனவே, பாதுகாப்பு என்பதை விட வெளிப்படைத்தன்மை Transparency தான் முக்கியம் என்பதை நீதிமன்றம் உணர்ந்து உத்தரவிட வேண்டும் என்பதே தற்போதைய சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் கொண்டுள்ள இந்த அவநம்பிக்கையை மாற்ற, காகித வாக்கு முறைக்கே (Paper Ballot) திரும்புவது தான் ஒரே வழி. சாதாரண எனக்கு தெரிகிற இந்த அநியாயம் நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் தெரியாமலில்லை. ஆனால் இவர்கள் ஏன் இந்த அநீதிக்கு எதிராக போராட முன்வருவதில்லை?. இதையே எதிர்க்க தயங்குபவர்கள் எதற்காக தேர்தலில் போட்டியிட்டு நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் விரையம் செய்ய வேண்டும்?. இவர்களுக்கு எல்லாம் என்ன கூந்தலுக்கு அரசியல்?. கீழே உள்ள காணொளி பல ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணிய சுவாமி வாக்கு இயந்திர மோசடி பற்றி கொடுத்த நேர்காணல். 👇https://www.facebook.com/share/18d6DTW4zG/ #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #@அமானுஷ்யம்@( HORROR )
🚨கற்றது அரசியல் ✌️ - க்யாரே செட்டிங்கா பாஜக + தேர்தல் ஆணையம் + EVM ) தநதி MHANTHITV TNO7CM2026 சொல்லி கிலலி அடித்த படத்தில் காரில் Goat 2026 TNO7 CM எ குறியீடு விஜய் வைதத ஆம் தேதி சொன்னபடியே 2026ஆம் 966 07 ஆக பதவியேற்கிறார் CM க்யாரே செட்டிங்கா பாஜக + தேர்தல் ஆணையம் + EVM ) தநதி MHANTHITV TNO7CM2026 சொல்லி கிலலி அடித்த படத்தில் காரில் Goat 2026 TNO7 CM எ குறியீடு விஜய் வைதத ஆம் தேதி சொன்னபடியே 2026ஆம் 966 07 ஆக பதவியேற்கிறார் CM - ShareChat