16 shares
More like this
- MUTHUPANDIAN RAMKUMAR#பெருமாள் #காக்கும் கடவுள் மகாவிஷ்ணு. பெருமாள் #ஸ்ரீலக்ஷ்மி மகாவிஷ்ணு #மகாலட்சுமி மகாவிஷ்ணு #happy saturday2419
- MUTHUPANDIAN RAMKUMAR7800 கிலோ தூய தங்கம், 780,000 வைரங்கள் மற்றும் 780 காரட்களால் வைரத்தால் செய்யப்பட்ட சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை. இதன் இன்றய மதிப்பு பல ஆயிரம் லட்சம் கோடிகள் எனவும் இதனை விலை மதிப்பீடு செய்ய முடியலை என ஸதபதிகள் மற்றும் நவீன வல்லுனர்கள் சொன்னார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட வல்லுனர் குழு பிரமித்து போய் கணக்கிடமுடியாது திரும்பி சென்றனர் என்பது அறிந்ததே.இதை தரிசிக்க, கண்களால் காணவே பெரும் பாக்கியம் பண்ணியிருக்கவேண்டும்.நேரில் செல்ல முடியாதவர் இந்த காணொளிம மூலம் தரிசித்து பலன் பெறலாம்.🙏 #🕉🐚🌀ஸ்ரீ மஹாலக்ஷ்மி மகாவிஷ்ணு 🐚🌀🕉 #காக்கும் கடவுள் மகாவிஷ்ணு. பெருமாள் #மகாலட்சுமி மகாவிஷ்ணு #🙏🙏மகாவிஷ்ணு புராணக்கதை 🌹🙏🙏 #ஸ்ரீலக்ஷ்மி மகாவிஷ்ணு2616
- MUTHUPANDIAN RAMKUMAR#மகாவிஷ்ணு #🕉🐚🌀ஸ்ரீ மஹாலக்ஷ்மி மகாவிஷ்ணு 🐚🌀🕉 #காக்கும் கடவுள் மகாவிஷ்ணு. பெருமாள் #மகாலட்சுமி மகாவிஷ்ணு #💳💸💰மஹாலக்ஷ்மி மகாவிஷ்ணு💰💸💳1K1K
- MUTHUPANDIAN RAMKUMAR*🙏🕉️கடன் தீர தேங்காய் தீபம்.🕉️🙏* *🙏🕉️கடன் பிரச்சினைகளால் மன உளைச்சலில் தவிப்பவர்கள் எந்த தெய்வத்திற்கு? என்ன பரிகாரம் செய்வது? என்று யோசிக்க வேண்டாம். எல்லா செல்வங்களுக்கும் அதிபதியாக திகழ்பவள் மகாலட்சுமி தாயார் ஆவார். பெருமாளுடன் கூடிய மகாலட்சுமியை “லக்ஷ்மி பெருமாள்” என்று கூறுவார்கள். 🙇♂️🕉️🙏* *🙏🕉️இந்த லட்சுமி பெருமாளுக்கு 🥥தேங்காய் 🪔தீபம் ஏற்றி வந்தால் சகல கடன்களும் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.🕉️🙏* *🙏🕉️லட்சுமி பெருமாளுக்கு தேங்காய் தீபம் ஏற்றி கடனை அடைப்பது எப்படி? என்னும் ஆன்மீகம் சார்ந்த பரிகார முறையை தான்.. 🕉️🙏* *🙏🕉️பரிகாரம் செய்ய தேவையானவை:*🕉️🙏 *🙏ஒரு முழுமையான, உடைக்கப்படாத ஒற்றைக்கண் தேங்காய் (தேங்காயின் மூன்று கண்களில்,* *ஒன்று மட்டும் சற்று அகலமாக இருக்கும், அதுவே ஒற்றைக்கண்.* *நல்லெண்ணெய் அல்லது நெய்* *திரி (பஞ்சு திரி அல்லது தாமரைத் தண்டு திரி சிறந்தது).* *🙏கடன் அடைய பரிகாரம் செய்யும் முறை:🙏* *🙏தேங்காயின் மேலே உள்ள ஒற்றைக்கண் பகுதியை கவனமாக ஒரு சிறிய ஓட்டை போல திறந்து கொள்ளவும். தேங்காயை உடைத்து விடக்கூடாது.* *🙏அந்த ஓட்டை வழியாக, தேங்காய்க்குள் இருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றி விடவும். நீர் வெளியேறியதும், தேங்காய்க்குள் நல்லெண்ணெய் அல்லது நெய்யை நிரப்பவும். திரியை எண்ணெயில் நனைத்து, தேங்காயின் ஒற்றைக்கண் ஓட்டையில் வைக்கவும். தேங்காயை ஒரு பச்சரிசி பரப்பிய தட்டில் வைத்து, 🪔தீபத்தை ஏற்றவும்.🕉️🙏* *🙏🥥இந்த தீபத்தை🪔 செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில், மாலை வேளையில், சூரியன் அஸ்தமனமான பின்பு ஏற்றலாம்.* *🙏உங்கள் வீட்டு பூஜை அறையில், அல்லது நீங்கள் வணங்கும் தெய்வத்தின் படத்திற்கு முன்பு இந்த 🪔தீபத்தை ஏற்றலாம்.🙇♂️🤲🙏* *🙏🕉️🤲லட்சுமி பெருமாள் மட்டுமல்லாமல் பைரவர், துர்க்கை அம்மன் அல்லது விஷ்ணு போன்ற கடன் நிவர்த்திக்குரிய தெய்வங்களுக்கும் இந்த தீபம் மிகவும் உகந்தது. தீபத்தை ஏற்றும் போது, மனதார உங்களின் கடன் தொல்லைகள் நீங்க வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்.🙇♂️🤲🕉️🙏* *🙏🕉️பின் “ஓம் நமோ நாராயணாய” என்னும் திருமந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லட்சுமி குபேர மந்திரத்தையும் நீங்கள் 108 முறை சொல்லலாம். 🙇♂️🤲🙏* *🥥தீபம்🪔 முழுவதுமாக எரிந்து அணைந்த பிறகு, தேங்காயை எடுத்து, உள்ளே இருக்கும் தேங்காயை நீங்கள் சிறிது உட்கொண்டு, மீதியை பசு மாட்டிற்கு கொடுக்கலாம்.🕉️🙏* *🙏🪷லக்ஷ்மி குபேர மந்திரம்:🪷🙏* *🙏🕉️ "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் சௌம் ஓம் ஹ்ரீம் ஐம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் ஓம்”🙇♂️🤲🕉️🙏* *🙏🕉️தேங்காய்த்🥥 தீபம்🪔 ஏற்றும் போது உருவாகும் நேர்மறை ஆற்றல், தீராத பல ஆண்டு கடன் சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து, புதிய வழிகளைத் திறக்கும் என்றும், செல்வ வளம் பெருக்கும் என்றும் நம்பப்படுகிறது.🕉️🙏* *🙏இது மனத் தூய்மையுடனும், ஆழ்ந்த நம்பிக்கையுடனும், முழுமையான பக்தியுடனும் செய்யப்பட வேண்டும் என்பது முக்கியம். இது பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு எளிய சக்தி வாய்ந்த பரிகார முறையாகும். 🕉️🙏* *🙏🕉️மேலும் பலரும் இதன் மூலம் பலன் அடைந்துள்ளதாக நம்புகின்றனர். நம்பிக்கையோடு செய்து பாருங்கள், நிச்சயம் நல்லதே நடக்கும்.💐🌷🌹🙏🙏* #🕉🐚🌀ஸ்ரீ மஹாலக்ஷ்மி மகாவிஷ்ணு 🐚🌀🕉 #காக்கும் கடவுள் மகாவிஷ்ணு. பெருமாள் #மகாவிஷ்ணு #🙏🌺மகாலட்சுமி 🌺🙏 #மகாலட்சுமி1623
- MUTHUPANDIAN RAMKUMAR#பெருமாள் #காக்கும் கடவுள் மகாவிஷ்ணு. பெருமாள் #ஸ்ரீலக்ஷ்மி மகாவிஷ்ணு #மகாலட்சுமி மகாவிஷ்ணு #happy saturday190105
- MUTHUPANDIAN RAMKUMAR#🕉🐚🌀ஸ்ரீ மஹாலக்ஷ்மி மகாவிஷ்ணு 🐚🌀🕉 #மகாவிஷ்ணு #காக்கும் கடவுள் மகாவிஷ்ணு. பெருமாள் #🙏🌺மகாலட்சுமி 🌺🙏 #மகாலட்சுமி திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் இருக்க போற்றுவோம் நாராயணனை 🪔🙇♂️🤲🕉️🙏* *🙏🕉️ௐ நமோ நாராயணா 🙇♂️🕉️🙏* 1. ஓம் ஹரி ஹரி போற்றி 2. ஓம் ஸ்ரீஹரி போற்றி 3. ஓம் நர ஹரி போற்றி 4. ஓம் முர ஹரி போற்றி 5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி 6. ஓம் அம்புஜாஷா போற்றி 7. ஓம் அச்சுதா போற்றி 8. ஓம் உச்சிதா போற்றி 9. ஓம் பஞ்சாயுதா போற்றி 10. ஓம் பாண்டவர் தூதா போற்றி 11. ஓம் லட்சுமி சமேதா போற்றி 12. ஓம் லீலா விநோதா போற்றி 13. ஓம் கமல பாதா போற்றி 14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி 15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி 16. ஓம் அகிலாண்டகோடி போற்றி 17. ஓம் பரமானந்தா போற்றி 18. ஓம் முகுந்தா போற்றி 19. ஓம் வைகுந்தா போற்றி 20. ஓம் கோவிந்தா போற்றி 21. ஓம் பச்சை வண்ணா போற்றி 22. ஓம் கார்வண்ணா போற்றி 23. ஓம் பன்னகசயனா போற்றி 24. ஓம் கமலக்கண்ணா போற்றி 25. ஓம் ஜனார்த்தனா போற்றி 26. ஓம் கருடவாகனா போற்றி 27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி 28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி 29. ஓம் சேஷசயனா போற்றி 30. ஓம் நாராயணா போற்றி 31. ஓம் பிரம்ம பாராயணா போற்றி 32. ஓம் வாமனா போற்றி 33. ஓம் நந்த நந்தனா போற்றி 34. ஓம் மதுசூதனா போற்றி 35. ஓம் பரிபூரணா போற்றி 36. ஓம் சர்வ காரணா போற்றி 37. ஓம் வெங்கட ரமணா போற்றி 38. ஓம் சங்கட ஹரனா போற்றி 39. ஓம் ஸ்ரீதரா போற்றி 40. ஓம் துளசிதரா போற்றி 41. ஓம் தாமோதரா போற்றி 42. ஓம் பீதாம்பரா போற்றி 43. ஓம் பலபத்ரா போற்றி 44. ஓம் பரமதயா பரா போற்றி 45. ஓம் சீதா மனோகரா போற்றி 46. ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி 47. ஓம் பரமேஸ்வரா போற்றி 48. ஓம் சங்கு சக்கரா போற்றி 49. ஓம் சர்வேஸ்வரா போற்றி 50. ஓம் கருணாகரா போற்றி 51. ஓம் ராதா மனோகரா போற்றி 52. ஓம் ஸ்ரீரங்கா போற்றி 53. ஓம் ஹரிரங்கா போற்றி 54. ஓம் பாண்டுரங்கா போற்றி 55. ஓம் லோகநாயகா போற்றி 56. ஓம் பத்மநாபா போற்றி 57. ஓம் திவ்ய சொரூபா போற்றி 58. ஓம் புண்ய புருஷா போற்றி 59. ஓம் புருஷாத்தமா போற்றி 60. ஓம் ஸ்ரீ ராமா போற்றி 61. ஓம் ஹரிராமா போற்றி 62. ஓம் பலராமா போற்றி 63. ஓம் பரந்தாமா போற்றி 64. ஓம் நரஸிம்ஹா போற்றி 65. ஓம் திரிவிக்ரமா போற்றி 66. ஓம் பரசுராமா போற்றி 67. ஓம் சகஸ்ரநாமா போற்றி 68. ஓம் பக்தவத்சலா போற்றி 69. ஓம் பரமதயாளா போற்றி 70. ஓம் தேவானுகூலா போற்றி 71. ஓம் ஆதிமூலா போற்றி 72. ஓம் ஸ்ரீ லோலா போற்றி 73. ஓம் வேணுகோபாலா போற்றி 74. ஓம் மாதவா போற்றி 75. ஓம் யாதவா போற்றி 76. ஓம் ராகவா போற்றி 77. ஓம் கேசவா போற்றி 78. ஓம் வாசுதேவா போற்றி 79. ஓம் தேவதேவா போற்றி 80. ஓம் ஆதிதேவா போற்றி 81. ஓம் ஆபத் பாந்தவா போற்றி 82. ஓம் மகானுபாவா போற்றி 83. ஓம் வசுதேவ தனயா போற்றி 84. ஓம் தசரத தனயா போற்றி 85. ஓம் மாயாவிலாசா போற்றி 86. ஓம் வைகுண்டவாசா போற்றி 87. ஓம் சுயம்பிரகாசா போற்றி 88. ஓம் வெங்கடேசா போற்றி 89. ஓம் ஹ்ருஷி கேசா போற்றி 90. ஓம் சித்தி விலாசா போற்றி 91. ஓம் கஜபதி போற்றி 92. ஓம் ரகுபதி போற்றி 93. ஓம் சீதாபதி போற்றி 94. ஓம் வெங்கடாசலபதி போற்றி 95. ஓம் ஆயாமாயா போற்றி 96. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி 97. ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி 98. ஓம் உலகமுண்டவாயா போற்றி 99. ஓம் நானாஉபாயா போற்றி 100. ஓம் பக்தர்கள் சகாயா போற்றி 101. ஓம் சதுர்புஜா போற்றி 102. ஓம் கருடத்துவஜா போற்றி 103. ஓம் கோதண்டஹஸ்தா போற்றி 104. ஓம் புண்டரீகவரதா போற்றி 105. ஓம் விஷ்ணு போற்றி 106. ஓம் பகவானே போற்றி 107. ஓம் பரமதயாளா போற்றி 108. *ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!🪔🙇♂️🤲🕉️🙏* *🙏🕉️🙇♂️குறையொன்றுமில்லை கோவிந்தா அச்சுதா அனந்தா நாராயணா கோவிந்தா ஸ்ரீனிவாசா வாசுதேவா... 💐🌷🌹🙇♂️🤲🕉️🙏*1314
- 乂❤‿❤乂ᎢᏆᎢᎪNᏆᏟ ᏴᏩᎷ 乂❤‿❤乂#பக்தி #மகாவிஷ்ணு #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்817
- MUTHUPANDIAN RAMKUMAR#🕉🐚🌀ஸ்ரீ மஹாலக்ஷ்மி மகாவிஷ்ணு 🐚🌀🕉 #காக்கும் கடவுள் மகாவிஷ்ணு. பெருமாள் #மகாவிஷ்ணு #🙏🌺மகாலட்சுமி 🌺🙏 #மகாலட்சுமி ஸ்ரீமகாவிஷ்ணுவின் 10 சயன திருக்கோலங்கள் – ஒவ்வொன்றும் ஒரு தெய்வீக தத்துவம்! வைணவ மரபில் ஸ்ரீமகாவிஷ்ணு பக்தர்களுக்கு பல்வேறு சயன (பள்ளிகொண்ட) திருக்கோலங்களில் அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு சயனமும் தனித்துவமான ஆன்மிக அர்த்தத்தையும், திவ்ய தேச மகிமையையும் எடுத்துரைக்கிறது. 1️⃣ ஜல சயனம் மனிதர்களால் நேரடியாக தரிசிக்க முடியாத திருப்பாற்கடல் (ஸ்ரீவைகுண்டம்) ஜல சயனத்தின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. இது பரம்பொருளின் நித்திய திவ்ய நிலையைக் குறிக்கிறது. 2️⃣ தல சயனம் மாமல்லபுரம் (கடல்மல்லை) திவ்ய தேசத்தில் தலசயனப் பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டு, வலது கரத்தில் உபதேச முத்திரையுடன் அருள்பாலிக்கிறார். ஞானத்தையும் தர்மத்தையும் உணர்த்தும் திருக்கோலம் இது. 3️⃣ புஜங்க (சேஷ) சயனம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் இந்த திருக்கோலம், உலகைக் காக்கும் பரம கருணையின் அடையாளமாக விளங்குகிறது. 4️⃣ உத்தியோக சயனம் கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் திருமழிசை ஆழ்வாரின் வேண்டுகோளுக்காக சயன நிலையிலிருந்து எழுந்து பேசுவது போன்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இந்த அரிய திருக்கோலம் வேறு எந்தத் தலத்திலும் இல்லை. 5️⃣ வீர சயனம் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் வீர சயனத்தில் அருள்பாலிக்கிறார். சாலிஹோத்ர முனிவரின் பக்திக்கு அருள் புரிந்த தலமாக இது சிறப்புப் பெற்றது. 6️⃣ போக சயனம் சிதம்பரம் திருச்சித்திரக்கூடத்தில் கோவிந்தராஜப் பெருமாள் புண்டரீகவல்லி தாயாருடன் போக சயனத்தில் காட்சி தருகிறார். இது இறை ஆனந்தத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. 7️⃣ தர்ப்ப சயனம் திருப்புல்லாணியில் ஸ்ரீராமர் தர்ப்பைப் புல்லின் மீது பள்ளிகொண்டிருக்கும் அரிய திருக்கோலம் காணப்படுகிறது. இலங்கைக்கு செல்லும் முன் சமுத்திர ராஜனை வேண்டி மேற்கொண்ட தவத்தை நினைவூட்டும் தலம் இது. 8️⃣ பத்ர (வடபத்ர) சயனம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி பெருமாள் ஆலமர இலையின் மீது பள்ளிகொண்ட திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். "பத்ர" என்பது ஆலமர இலையைக் குறிக்கும். 9️⃣ மாணிக்க சயனம் திருநீர்மலையில் அரங்கநாதர் மாணிக்க சயனத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்ற நான்கு திருக்கோலங்களிலும் தரிசிக்கலாம் என்பது தனிச்சிறப்பு. 🔟 உத்தான சயனம் திருக்குடந்தை (கும்பகோணம்) சாரங்கபாணி பெருமாள் சயன நிலையிலிருந்து எழுந்திருப்பது போன்ற உத்தான சயனத்தில் காட்சி தருகிறார். 108 திவ்ய தேச தரிசனத்திற்கு இணையான புண்ணியம் கிடைக்கும் தலமாக இது போற்றப்படுகிறது. 🙏 திவ்ய தேச தரிசனத்தின் மகிமை வைணவ மரபில் 108 திவ்ய தேசங்களை தரிசிப்பது உயர்ந்த புண்ணியமாகக் கருதப்படுகிறது. அனைத்துத் தலங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும், இயன்றவரை திருத்தல யாத்திரை மேற்கொள்வது ஆன்மிக முன்னேற்றத்திற்கும் இறையருளுக்கும் வழிவகுக்கும். மேலும், காட்டுமன்னார்குடி ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் கோவில், நாதமுனிகள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உலகிற்கு மீட்டளித்த புனிதத் தலமாக இருப்பதால், திவ்ய தேச யாத்திரையின் மங்களகரமான தொடக்கத் தலமாக போற்றப்படுகிறது. இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால், அவர் நம்மை நோக்கி பல அடிகள் வந்து அருள்புரிவார். ஸ்ரீமகாவிஷ்ணுவின் திவ்ய சயன தரிசனம் அனைவருக்கும் ஆன்மிக அமைதி, நலன் மற்றும் இறையருள் வழங்கட்டும்.✍🏼🌹1214
- MUTHUPANDIAN RAMKUMAR#🕉🐚🌀ஸ்ரீ மஹாலக்ஷ்மி மகாவிஷ்ணு 🐚🌀🕉 #காக்கும் கடவுள் மகாவிஷ்ணு. பெருமாள் #மகாவிஷ்ணு #மகாலட்சுமி மகாவிஷ்ணு #💳💸💰மஹாலக்ஷ்மி மகாவிஷ்ணு💰💸💳 விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமை எல்லாரும் புரிந்துகொண்டு சொல்வதற்கு ஏற்ப, அங்கங்கே உள்ள ரத்தினங்களைச் சேகரித்து, மாலை தொடுத்தது போலே தொடுக்கப்பட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம். ‘சஹஸ்ரநாமம்' என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது. ஆதிசங்கர பகவத்பாதாள், காஷ்மீரில் யாத்திரை செய்து கொண்டிருந்த போது, தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆக்ஞாபித்தார். அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்குத் திருவுள்ளம். அங்கேயிருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால்... அது விஷ்ணு சஹஸ்ரநாமம். “நான் இதைக் கேட்கலையே...நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..? நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே...” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது! அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிட்டார். “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன...?” ‘சுவாமி! நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு; இதை எடுத்துண்டு போ'ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்...?” என்றார் சிஷ்யர். அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே நினைத்தார்: அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்... அதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர். இப்படி லலிதையே போற்றும்படியான, லலிதமான சஹஸ்ரநாமம், எல்லாரும் கொண்டாடும் படியான ஏற்றம் உடையது. எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான். ஆகையினாலே, சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும். ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்...? அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே...? ஞானியருள் அக்ரகண்யரான பீஷ்மரால்.. "பீஷ்மர்" என்றாலே "பயப்படத் தக்கவர்" என்று அர்த்தம். அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர். அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர். “அணையும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்...? போ! அவர் சொல்வதைப் போய்க் கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார். ‘ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே - தர்மத்தைச் சொல்ல...?' என்று நமக்குக் கேட்கத் தோன்றும். பகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக் கூடிய மகான்கள் இருக்கணும்! இந்த உண்மைக்கு சாட்சியமாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். பல பேர் கேட்டார்கள். அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான். அவன் சொன்னது கீதை; கேட்பது சஹஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய்க் கேட்டதே அவன் பெருமை, உயர்வு. பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் செய்திருக்கிறார். "பகவத் குண தர்ப்பணம்" என்று அதற்குப் பெயர். 'பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி' என்று பொருள். "விஷ்ணு சஹஸ்ரநாமம்" என்னும் போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா? அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்... அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள்! சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக் கூடக் காட்டவல்லது இல்லையா..? அதைப் போலே சர்வ வியாபகனானவனை, அந்த சின்னத் திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்த பகவத் குண தர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குரிய ஏற்றங்களைச் சொல்கிறார். நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும்; துர்தேவதைகள் பிரவேசிக்காது... நம் சித்தத்திலும் நுழையாது. "கீதைக்குச் சமானமாக ஏதாவது உலகத்திலே உண்டா?" என்று கேட்டால், அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான். இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது. கீதையைச் சொன்னது பகவான். அந்த பகவத்சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய ஞானி (பீஷ்மர்) சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ரநாமம். பகவானைக் காட்டிலும் ஞானி உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம். வேதமே சொல்கிறது. ‘யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும். யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும்...!!! நாராயண! நாராயண வைகுண்டம் எப்படி இருக்கும்? வைகுண்டத்தைப் பற்றி புரந்தரதாசர், கனகதாசர் ஆகியோர் பல பாடல்கள் பாடியிருக்கின்றனர். கருணையே உருவான ஸ்ரீமன் நாராயணன் - எவ்வித களங்கமும் இல்லாத சுந்தர வடிவானவன் - காதில் குண்டலங்கள்; கழுத்தில் ஆபரணங்கள்; முகத்தில் புன்னகை - லக்ஷ்மி தேவியுடன் ஆதிசேஷன் மேல் வீற்றிருப்பான். பிரம்ம, ருத்ராதிகள் அவன் புகழ் பாடிக் கொண்டிருக்க, வேத கோஷங்கள் முழங்கிக் கொண்டிருக்கும். நாரதர் முதலானோர் இறைவனைக் குறித்து பஜித்துக் கொண்டிருப்பார்கள். இப்படியான வைகுண்டக் காட்சியை பின்வரும் பாடலில் தாசர் விவரிக்கிறார். வேங்கடாசல நிலையம் வைகுண்ட புரவாசம் பங்கஜ நேத்ரம் பரம பவித்ரம் சங்க சக்ரதர சின்மய ரூபம் (வேங்கடாசல) வேங்கடாசலத்தில் (திருப்பதியில்) வீற்றிருப்பவன் வைகுண்டத்தில் வசிக்கிறான் தாமரை மலர் போன்ற அழகான கண்கள்; எவ்வித களங்கமுமில்லாத தூய்மையானவன் இரு கைகளிலும் சங்கு, சக்கரம் தரித்த அழகே வடிவானவன் (வேங்கடாசல) அம்புஜோத்பவ வினுதம் அகணித குண நாமம் தும்புரு நாரத கான வினோலம் (வேங்கடாசல) எப்பொழுதும் அவன் பேரை ஜபித்துக் கொண்டே இருக்கும் பிரம்மன்; கூடவே தம்புரா வைத்துக்கொண்டு பாடிக் கொண்டிருக்கும் நாரதர் (வேங்கடாசல) மகர குண்டலதர மதனகோபாலம் பக்த போஷக ஸ்ரீ புரந்தரவிட்டலம் (வேங்கடாசல) பளபளக்கும் குண்டலங்களை அணிந்திருக்கும் மதனகோபாலன் பக்தர்களை காக்கும் ஸ்ரீ புரந்தர விட்டலனே (வேங்கடாசல1310