ShareChat
click to see wallet page
search
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 03/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 313 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XII 2)"மிகுந்த சத்தமிட்டு தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள் என்று கூறினான்." (வெளி 14:7). அன்பான கர்த்தருடைய பரிசுத்த ஜனமே, ஒரு பாவ மனிதனுக்கு கிறிஸ்துவுக்குள் நித்திய ஜீவன் உண்டு என்பதே சுவிசேஷம். தேவனுடைய நியாயத்தீர்ப்பு ஊற்றப்படும் மகா உபத்திரவ காலத்திலும், மனித இனத்துக்கு தன்னுடைய சுவிசேஷத்தை அறிவிக்க தேவன் விரும்புகிறார். எனவே பலத்த சத்தத்தோடு, பூமியின் குடிகள் அத்தனை பேரும் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் தூதன் சொல்லுகிறான். 1. தேவனுக்குப் பயப்படுங்கள். 2. தேவனை மகிமைப்படுத்துங்கள். 3. தேவனைத் தொழுது கொள்ளுங்கள். இந்தச் செய்தி உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு மனித இனத்துக்கு சொல்லப்பட்டதுதான் என்றாலும், தூதன் மூலமாக அவசரமாக அறிவிக்கப்படும் காரணத்தையும் தூதன் சொல்கிறான். தேவனுடைய நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்கி விட்டது. இதைக் கூர்ந்து தியானிக்கையில் இந்தத் தூதனுடைய செய்தியானது, அந்திக்கிறிஸ்துவுக்குப் பயப்படாதிருங்கள், அந்திக்கிறிஸ்துவை மகிமைப்படுத்தாதிருங்கள், அந்திக்கிறிஸ்துவை தொழுது கொள்ளாதிருங்கள் என்று ஜனங்களை எச்சரிக்கின்றதாகவே நாம் உணர்கிறோம். "அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படிச் செய்தது. அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின் மேல் அக்கினியை இறங்கப் பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம் போக்கி பட்டயத்தினாலே காயப்பட்டுப்பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ண வேண்டுமென்று பூமியின் குடிகளுக்கு சொல்லிற்று.” (வெளி 13:12-14). இவ்வசனங்கள் மூலம் கள்ளத்தீர்க்கதரிசியானவன், ஜனங்களை வஞ்சித்து மோசம் போக்கும்படி அதிசய அற்புத அடையாளங்களை நடப்பித்து, முந்தின மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவுக்கு சொரூபம் பண்ணி அதை வணங்கச் செய்து கொண்டிருந்தான். அந்நிலையில் தேவனானவர் தன் தூதனைக் கொண்டு ஜனங்களை எச்சரிக்கும்படி, நியாயத்தீர்ப்பு வருகிறது; ஆகையால் யாவற்றையும் உண்டு பண்ணின தேவனையே தொழுது கொண்டு நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று பூமியின் சகல ஜனங்களையும் எச்சரிக்கிறார் என்றே ஆவிக்குள் நிதானிக்கிறோம். கடைசி நாட்களைக் குறித்து இயேசு ராஜா பிரசங்கித்தபோது, "ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்." (மத் 24:14) என்றார். "அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது" (கொலோ 1:23) என்கிறார் அப்.பவுல். தேவனாகிய கர்த்தர் கடைசி நாட்களில் சகல சிருஷ்டிகளுக்கும், அறிவிக்கும்படியான ராஜ்யத்தின் சுவிசேஷமாகிய நித்திய ஜீவனைச் சார்ந்த சுவிசேஷத்தை, கடைசிக் காலமான அந்திக்கிறிஸ்துவின் மகா உபத்திரவ காலத்தில், இத்தூதனைக் கொண்டு வானத்தின் கீழிருக்கிற சகல ஜனங்களுக்கும் அறிவிக்கிறார் என்றே அறிந்து கொள்கிறோம். "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" என்று நீதி 1:7; நீதி 9:10 ஆகிய இரண்டு இடங்களில் வேதாகமத்தில் வாசிக்கிறோம். உபா 10:12: யோசுவா 24:14; 1 12:13; ஏசா 8:13; 5 10:28: | 5 1:17. 2:17 ஆகிய கர்த்தருடைய திருவசனங்கள் யாவும் கர்த்தருக்குப் பயப்பட வேண்டும் என்று போதிக்கின்றன. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி கீழ்க்காணும் கர்த்தருடைய திருவசனங்களில் காண முடிகிறது. (I சாமு 12:14; சங் 25:12; சங் 31:19: ஏசா 50:10; 1:50; லூக்கா 10:35) கர்த்தருக்குள் அன்பான தேவனுடைய பரிசுத்தவான்களே. கீழ்க்காணும் கர்த்தருடைய திருவசனங்களின்படி தேவாதி தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென்று போதிக்கப்படுகிறோம். ''நம்முடைய துதியினாலும்" (சங் 22:23); "நற்கிரியைகளினாலும்" (மத் 5:16). "நம்மில் வெளிப்படும் நற்கனிகளினாலும்" (யோவா 15:8). ''நம்முடைய சகோதர ஐக்கியத்தினாலும்" (ரோம 15:7); "நம்முடைய அர்ப்பணிப்பினாலும்," (1 கொரி 6:20) தேவாதி தேவனைத் தொழுது கொள்ளும்படியாக அறிவிக்கும் தூதன் அதற்கான காரணத்தையும் முதலாவதாக அறிவிக்கிறார். வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், நீருற்றுகளையும் சிருஷ்டித்தவர் தேவன் என்பதினால், அவர் ஒருவரே மனிதனுடைய தொழுகைக்குப் பாத்திரராயிருக்கிறார். "கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்" (யோவே 2:32). "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுகிறனெவனோ அவன் இரட்சிக்கப்டுவான்" என்று தேவன் உரைத்திருக்கிறார். (அப்.2:21). “கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிறவன் இரட்சிக்கப்படுவான்." (ரோம 10:13). “நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தரும் ஒருவராய் சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறார்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிப்பதாக ஆமென்." (I தீமோ 6:15-16). மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம், " நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தருமான சர்வ சிருஷ்டி கர்த்தாவாகிய தேவாதி தேவனை தொழுது கொள்ளுகிறவன் இரட்சிக்கப்படுவான்" என்று மனுக்குலத்திற்குப் போதிக்கின்றது. ''அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தை பட்சிக்கிறது போல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே: அவர்கள் கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறதில்லை. (சங் 14:4:53:4) இவ்வசனங்கள், "அக்கிரமக்காரர் தேவனைத் தொழுது கொள்ளுகிறதில்லை” என்பதை அறிவிக்கின்றது. “தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல், சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள். அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக் கொடுத்தார்" (ரோம 1:25,26) என்ற இவ்வசனம் தேவனைத் தொழுது கொள்ளாதவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார் என்று அறிவிக்கின்றது. கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #✝️இயேசுவே ஜீவன் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - ன்றைய வெளிப்பர்த்தின் வி( Gaop @ தியானம் 03/07/2026 3.வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் XII 2) ` பீகுந்த சத்தமிட்டு தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள்  வவெளி 14:7). என்று கூறினான் ' பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை ன்றைய வெளிப்பர்த்தின் வி( Gaop @ தியானம் 03/07/2026 3.வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் XII 2) ` பீகுந்த சத்தமிட்டு தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள்  வவெளி 14:7). என்று கூறினான் ' பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை - ShareChat