kaderAshifAshiq
பெற்றோருக்கு நன்மை செய்தல்
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:
“நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான செயல் எது?’ என்று கேட்டேன்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
‘தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது.’ என கூறினார்கள்.
‘அதற்குப் பிறகு எது?’ என நான் கேட்டேன்.
அதற்கை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
‘பெற்றோருக்கு நன்மை செய்வது.’” எனக் கூறினார்கள்.
📚 ஆதாரம்: அதபுல் முப்ரத் ஹதீஸ் எண் 1
🌿 இன்றைய அமல்:
👨👩👦 பெற்றோர் உயிருடன் இருந்தால்:
அவர்களிடம் அன்பாகப் பேசுங்கள் 🤍
அவர்களை சந்தோஷப்படுத்துங்கள் 😊
அவர்களுக்கு உதவி செய்யுங்கள் 🤲
அவர்களுக்காக துஆ செய்யுங்கள் 🌿
🕊️ பெற்றோர் மரணித்திருந்தால்:
அவர்களுக்காக மன்னிப்பையும் அருளையும் வேண்டி துஆ செய்யுங்கள் 🤲
அவர்களின் நன்மைக்காக ஸதகா செய்யுங்கள் 🌱 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்