ShareChat
click to see wallet page
search
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம் அதிகரித்து வரும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் – தீர்வு வேண்டிய அவசர நிலை ஒரு நாட்டின் நாகரிகத்தை அளவிட வேண்டுமெனில், அந்த நாடு பெண்களையும் சிறுமிகளையும் எவ்வளவு பாதுகாப்பாக வாழச் செய்கிறது என்பதே முக்கியமான அளவுகோலாகும். ஆனால் இன்று சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கும் நிகழ்வாக உள்ளது. இத்தகைய குற்றங்கள் ஒரு குடும்பத்தின் பிரச்சினை மட்டுமல்ல; மொத்த சமூகத்தின் தோல்வியையும் வெளிப்படுத்துகின்றன. பள்ளி, வீடு, தெரு, பொது இடங்கள் என எந்த இடத்திலும் முழுமையான பாதுகாப்பு உணர்வு இல்லாத நிலை உருவாகியுள்ளது. குழந்தைகளின் அறியாமை, சமூக விழிப்புணர்வு குறைவு, குற்றவாளிகள் தப்பித்துவிடலாம் என்ற மனநிலை போன்றவை இத்தகைய குற்றங்கள் தொடர காரணங்களாக உள்ளன. சமூக அக்கறை மறந்து சுயநலம் மட்டும் மேலோங்கி வளர்ந்த ஒரு தலைமுறையின் தவறுகளால் இன்று இந்த அவலம் தொடர்கிறது.. இந்த நிலையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் அவசியம். பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி (Sex education) மற்றும் சட்டங்களும், அதற்கான தண்டனைகள் குறித்த பாடங்கள் இனி கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். சிறுவயதில் இருந்தே ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை அணுக வேண்டிய முறை மற்றும் அவர்களை பாதுகாக்கும் கடமையை தெளிவாக புரிய வைக்க வேண்டும். குழந்தைகளுடன் திறந்த மனதுடன் உரையாடி, அவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காவல்துறை புகார்களை உடனடியாக பதிவு செய்து, விரைவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றங்கள் மூலம் தாமதமின்றி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தில் உள்ள கடுமையான தண்டனைகள் உறுதியாக அமல்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில், சமூகமும் தனது பொறுப்பை உணர வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் ,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உளவியல் ஆலோசனைகள் போன்றவை தொடர்ந்து நடைபெற வேண்டும். இதை பொதுமக்களின் பார்வையில் படும் படியாக அரசு காட்சிப்படுத்தவும் வேண்டும். பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகளை கடந்து போகாமல் சிறுமிகளின் பாதுகாப்பு என்பது அரசு மட்டும் ஏற்க வேண்டிய பொறுப்பல்ல; ஒவ்வொரு குடும்பம், கல்வி நிறுவனம், சமூக அமைப்பு மற்றும் குடிமகனின் கூட்டுப் பொறுப்பாகும். "ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வாழும் சமூகமே உண்மையான முன்னேற்ற சமூகமாகும்" என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டிய காலம் இது. இதை மக்கள் நீதி மய்யம் அரசுக்கு வலியுறுத்துகிறது. @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #Kamalhaasan_MP #Makkalneedhimaiam #Childabuse
maiamoffcial - மக்கள் மய்ம்மு நீதி @MaiamofficiallT மய்யம் சிறுமிகள் மீதான தொடர் பாலியல் வன்கொடுமைகள் தீர்வா தண்டனையா 15.06.2026 WWW maiam com O/@maiamofficial மக்கள் மய்ம்மு நீதி @MaiamofficiallT மய்யம் சிறுமிகள் மீதான தொடர் பாலியல் வன்கொடுமைகள் தீர்வா தண்டனையா 15.06.2026 WWW maiam com O/@maiamofficial - ShareChat