ShareChat
click to see wallet page
search
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்! - எஸ்டிபிஐ ஒன்றிய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய சட்டத் திருத்தம், ஒரு பக்கமிருக்கும் சமத்துவமின்மையைச் சரிசெய்வது போலக் காட்டி, இன்னொரு பக்கம் ஏழை எளிய மக்களுக்குப் புதிய அநீதியை இழைப்பதாக அமைந்துள்ளது. வறுமையில் வாடும் மிக ஏழ்மையான குடிமக்களின் பசியைப் போக்குவதற்குப் பதிலாக, அவர்களுக்குள் இருக்கும் பற்றாக்குறையை மட்டுமே இந்த புதிய திட்டம் பிரித்துக் கொடுக்கிறது. இது "அனைவருக்கும் உணவு" என்ற உன்னத உரிமையைப் பலவீனப்படுத்தும் செயலாகும் என்பதால், இந்தத் திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் ஃபைஸி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “இதுவரை "அந்தியோதயா அன்ன யோஜனா" திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதந்தோறும் 35 கிலோ உணவுத் தானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய திருத்தத்தின்படி, "ஒரு நபருக்கு இவ்வளவுதான்" என்று கணக்கிடப்பட்டு, குடும்பத்திற்கான அதிகபட்ச வரம்பாக அதே 35 கிலோ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கணவன்-மனைவி என இரண்டு பேர் மட்டும் இருக்கும் முதியவர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறிய தனிக்குடும்பங்களுக்குக் கிடைத்து வந்த உணவுத் தானிய உதவி பாதியாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் வறுமை என்பது அவர்களின் பொருளாதாரப் பின்தங்கிய நிலையை வைத்து முடிவு செய்யப்பட வேண்டுமே தவிர, வெறும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து அல்ல. அரசின் இந்த நடவடிக்கை ஏழைகளுக்கான திட்டத்தின் மிக அடிப்படையான நோக்கத்தையே முற்றிலும் சிதைக்கிறது. மிக முக்கியமாக, இந்தியாவின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் இருக்கும் உண்மையான சவால்களை இந்தத் திருத்தம் எதிர்கொள்ளத் தவறிவிட்டது. கடந்த பல ஆண்டுகளில் ஏழைகளாக மாறிய கோடிக்கணக்கான தகுதியான மக்களுக்கு இன்னும் ரேஷன் அட்டை கிடைக்காமல் வெளியில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், காலாவதியான 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இன்னும் பயனாளிகள் பட்டியல் நீடிப்பதுதான். இந்த புதிய சட்டம் அந்தப் பெரும் பிழையைச் சரி செய்ய முன்வரவில்லை. அதேபோல, பெரிய குடும்பங்களாக இருந்தாலும் அதிகபட்சம் 35 கிலோதான் தரப்படும் என்ற பிடிவாதமான உச்ச வரம்பையும் மாற்றவில்லை. மேலும், ஏழை மக்களுக்கு வெறும் அரிசி, கோதுமை போன்ற தானியங்களை மட்டும் தராமல், உடம்புக்குச் சத்து தரும் பருப்பு, எண்ணெய் போன்ற பிற ஊட்டச்சத்துப் பொருட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் என்ற அவசியத்தையும் இந்தச் சட்டம் முற்றிலும் புறக்கணித்துள்ளது. மக்களாட்சியில் ஓர் அரசின் கடமை என்பது நாட்டில் உணவுப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதும், வறுமையை ஒழிப்பதுமே ஆகும். அதைவிடுத்து, வறுமையில் வாடும் ஏழைகளிடமிருந்தே உணவைப் பறித்து, இன்னொரு ஏழைக்குக் கொடுக்கும் ஒரு மோசமான செயலாகவே இந்த புதிய திருத்தம் அமையும். எனவே, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தாண்டி, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு 35 கிலோ உணவுத் தானிய உரிமை எவ்விதக் குறைப்புமின்றி தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். உடனடியாக தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விடுபட்ட கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்குப் புதிய ரேஷன் அட்டைகளும், ஊட்டச்சத்துப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும்” என அவர் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார். #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #⚡ஷேர்சாட் அப்டேட்
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் RATION CARD தேசிய உணவுப் பாதுகாப்புச் nder locus again சட்டத் திருத்தம்! सरर पारत IHDI 0R अशिशिवन " शारय [ a பாதுகாப்புச் தேசிய உணவுப் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் காலாவதியான 2011 மக்கள் { தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது இது, மில்லியன் கணக்கான ஏழைக் டும்பங்களின் சட்டப்பூர்வ  6UU61 ரிமைகளைப் பறித்து,  கோடிக்கணக்கான மக்களைப் புறக்கணிக்கிறது அரசாங்கம்  நலத்திட்டங்களைக் குறைப்பதன் மூலம் இச்சட்டத்தின் நோக்கத்தையே பலவீனப்படுத்தி ரிமைக்கு வ உ -P.Aஅப்துல் மஜித் ஃபைலி தேசிய பொதுச்செயலாளர் SDPI  Abdul Majeed Faizy Mರi MMaLl dmcemlladu Ju-  aJ 310730010@ ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் RATION CARD தேசிய உணவுப் பாதுகாப்புச் nder locus again சட்டத் திருத்தம்! सरर पारत IHDI 0R अशिशिवन शारय [ a பாதுகாப்புச் தேசிய உணவுப் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் காலாவதியான 2011 மக்கள் { தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது இது, மில்லியன் கணக்கான ஏழைக் டும்பங்களின் சட்டப்பூர்வ  6UU61 ரிமைகளைப் பறித்து,  கோடிக்கணக்கான மக்களைப் புறக்கணிக்கிறது அரசாங்கம்  நலத்திட்டங்களைக் குறைப்பதன் மூலம் இச்சட்டத்தின் நோக்கத்தையே பலவீனப்படுத்தி ரிமைக்கு வ உ -P.Aஅப்துல் மஜித் ஃபைலி தேசிய பொதுச்செயலாளர் SDPI  Abdul Majeed Faizy Mರi MMaLl dmcemlladu Ju-  aJ 310730010@ - ShareChat