Fakir Mohamed Lebbai
ShareChat
click to see wallet page
@fakirmohamedlebbai
fakirmohamedlebbai
Fakir Mohamed Lebbai
@fakirmohamedlebbai
நிமிர்ந்து நில் ! மண்டியிடாதே!!
டெல்லி AI உச்சிமாநாட்டின் அவமானம்: நிர்வாகக் கட்டமைப்பின் தோல்வியைப் பிரதிபலிக்கிறது! புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்தியா AI இம்பாக்ட் உச்சிமாநாடு 2026'-இல் நிகழ்ந்த குளறுபடிகள் மற்றும் மேலாண்மைத் தவறுகளை, எஸ்டிபிஐ கட்சியின் தேசியச் செயலாளர் அட்வகேட் சர்தார் டி.எஸ். பிந்த்ரா கடுமையாகக் கண்டித்துள்ளார். குறிப்பாக, கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் தொடர்பான சர்ச்சையில் அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார். 2014-ஆம் ஆண்டில் நரேந்திர மோடியால் கௌரவிக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது சந்தையில் கிடைக்கக்கூடிய ஒரு சீன ரோபோ நாயை, தனது 'சிறப்பு மையத்தின்' உள்நாட்டு கண்டுபிடிப்பு எனத் தவறாகக் காட்டி அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் பலத்த விமர்சனத்தைத் தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகம் கண்காட்சி அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டது. இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் நிகழ்வுகளில் நிலவும் விளம்பர மோகம் மற்றும் பலவீனமான பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. இந்தக் கவலைகளோடு சேர்த்து, உச்சிமாநாட்டின் மோசமான ஒருங்கமைப்பு தோல்விகளும் அடுக்கப்பட்டுள்ளன. பங்கேற்பாளர்கள் கடும் வெயிலில் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டது. ஒரு முதன்மையான 'டிஜிட்டல் இந்தியா' நிகழ்வாக இருந்தபோதிலும், அங்கு கட்டணங்கள் ரொக்கமாக மட்டுமே பெறப்பட்டன. மேலும், வைஃபை (WiFi) வசதி இல்லாமை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளால் 27-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்திருந்த பங்கேற்பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளால் கண்காட்சியாளர்கள் தங்கள் அரங்குகளுக்குள் நுழைய முடியாமல் போனதும், அதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகளும் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தத் தவறுகள் அனைத்தும் ஒரு தேசியத் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை, ஆழமான நிர்வாகக் கட்டமைப்பு தோல்வியின் குறியீடாக மாற்றியுள்ளன என்று அட்வகேட் டி.எஸ். பிந்த்ரா விமர்சித்துள்ளார். இத்தகைய வெற்று விளம்பரச் செயல்பாடுகள் உண்மையான கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் மாணவர்களின் கண்ணியத்தை அவமதிக்கின்றன. எனவே, கண்காட்சியாளர்களை முறையாக ஆய்வு செய்தல் மற்றும் உண்மையான கண்டுபிடிப்புகளுக்கு நேர்மையான முறையில் ஆதரவு அளித்தல் போன்ற விரிவான சீிருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். #📺வைரல் தகவல்🤩 #📷வாட்ஸப் DP
📺வைரல் தகவல்🤩 - டெல்லி AI Attendees  VIP down  உச்சிமாநாட்டின் 'Huge let  6 km as Al walk India  10 forced  paralyses  Summit movement| அவமானம்: Impact . நிர்வாகக் கட்டமைப்பின் தோல்வியைப் பிரதிபலிக்கிறது சர்தார் டிஎஸ் பிந்த்ரா தேசியச் செயலாளர் SDP| SOCIAARFVOFRATIX KOPoಖ no೨39 r  டெல்லி AI Attendees  VIP down  உச்சிமாநாட்டின் 'Huge let  6 km as Al walk India  10 forced  paralyses  Summit movement| அவமானம்: Impact . நிர்வாகக் கட்டமைப்பின் தோல்வியைப் பிரதிபலிக்கிறது சர்தார் டிஎஸ் பிந்த்ரா தேசியச் செயலாளர் SDP| SOCIAARFVOFRATIX KOPoಖ no೨39 r - ShareChat
பிப். 21 - உலக தாய்மொழி தினம்! ​ஒவ்வொரு மனிதனின் சிந்தனைக்கும், பண்பாட்டிற்கும் ஆணிவேராகத் திகழ்வது அவரது தாய்மொழி. தத்தமது அடையாளத்தின் ஊற்றுக்கண்ணாகவும், வாழ்வியலின் அடிப்படையாகவும் விளங்குவதும் அதுவே! "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே... முன்தோன்றி மூத்த குடி!" என்று போற்றப்படும் தமிழினத்தின் உயிர்மூச்சாய் விளங்குவது நமது அன்னைத் தமிழ். "பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய்" காலமெல்லாம் வென்று நிற்கும் மாற்றமில்லா மாண்பு நம் மொழிக்கு உண்டு. இந்த நன்னாளில்: ​அன்னைத் தமிழைப் போற்றிப் பாதுகாப்போம்! அவரவர் தாய்மொழிகளின் உரிமையைக் காப்போம்! மொழித்திணிப்பை எந்நாளும் உறுதியோடு எதிர்ப்போம்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ்! ​-நெல்லை முபாரக், தலைவர், SDPI கட்சி - தமிழ்நாடு. #InternationalMotherLanguageDay | #MotherLanguageDay | #MotherTongue | #LanguageMatters | #LinguisticDiversity | #Multilingualism | #MotherLanguageDay2026 | #OurLanguagesOurVoices | #IMLD2026 #உலகதாய்மொழிதினம் | #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📷வாட்ஸப் DP
📺அரசியல் 360🔴 - 21 20 தாய்மொழி தினம்ி பிப்ரவரி ஒவ்வொரு மனிதனின் சிந்தனைக்கும் பண்பாட்டிற்கும் ஆணிவேராகத்திகழ்வது அவரது தாய்மொழி தத்தமது அடையாளத்தின் ஊற்றுக்கண்ணாகவும்  வாழ்வியலின் அடிப்படையாகவும்  விளங்குவதும் அதுவே!  சகல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே . முன்தோன்றி மூத்தகுடி என்று  யிர்மூச்சாய்விளங்குவது  போற்றப்படும்தமிழினத்தின் : நமது அன்னைத்தமிழ்  பபழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய்  காலமெல்லாம் வென்றுநிற்கும் மாற்றமில்லா  மாண்புநம் மொழிக்குஉண்டு  அன்னைத்தமிழைப் போற்றிப்பாதுகாப்போம்!  அவரவர் தாய்மொழிகளின் உரிமையைக் காப்போம்  மொழித்திணிப்பை எந்நாளும் உறுதியோடு எதிர்ப்போம்  வாழ்கதமிழ் வெல்ததமிழி நெல்லை முபாரக் MA SDPI கட்சிதமிழ்நாடு  தலைவர் SDP சோசியல் எமாக்ரடிக் பார்ட்டி  ஆஃப் நற்தியா தமிழ்நாடு LOcp sdpllamllnaduoflicial 21 20 தாய்மொழி தினம்ி பிப்ரவரி ஒவ்வொரு மனிதனின் சிந்தனைக்கும் பண்பாட்டிற்கும் ஆணிவேராகத்திகழ்வது அவரது தாய்மொழி தத்தமது அடையாளத்தின் ஊற்றுக்கண்ணாகவும்  வாழ்வியலின் அடிப்படையாகவும்  விளங்குவதும் அதுவே!  சகல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே . முன்தோன்றி மூத்தகுடி என்று  யிர்மூச்சாய்விளங்குவது  போற்றப்படும்தமிழினத்தின் : நமது அன்னைத்தமிழ்  பபழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய்  காலமெல்லாம் வென்றுநிற்கும் மாற்றமில்லா  மாண்புநம் மொழிக்குஉண்டு  அன்னைத்தமிழைப் போற்றிப்பாதுகாப்போம்!  அவரவர் தாய்மொழிகளின் உரிமையைக் காப்போம்  மொழித்திணிப்பை எந்நாளும் உறுதியோடு எதிர்ப்போம்  வாழ்கதமிழ் வெல்ததமிழி நெல்லை முபாரக் MA SDPI கட்சிதமிழ்நாடு  தலைவர் SDP சோசியல் எமாக்ரடிக் பார்ட்டி  ஆஃப் நற்தியா தமிழ்நாடு LOcp sdpllamllnaduoflicial - ShareChat
எதிர்கட்சிகளின் கேள்விகளிலிருந்து பிரதமரை காப்பாற்ற பெண் எம்பிக்களை அவமதிப்பது கண்டனத்திற்குரியது! - எஸ்டிபிஐ இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சபாநாயகர் பதவி என்பது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினருக்கும் பொதுவானதாகவும், முழுமையான நடுநிலை கொண்டதாகவும் விளங்க வேண்டிய உயரிய பதவியாகும். ஆனால், அண்மையக் காலங்களில் சபாநாயகரின் செயல்பாடுகள் அந்த பதவியின் கண்ணியத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளன. எல்லையில் சீன ஊடுருவல் மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் போன்ற தேசப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் சார்ந்த மிக முக்கியமான விவகாரங்களில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கடமை பிரதமருக்கு உண்டு. ஆனால், பிரதமர் மோடி அவைக்கு வராததை நியாயப்படுத்தும் வகையில் சபாநாயகர் ஓம் பிர்லா அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சியளிப்பதோடு, ஜனநாயகத்தை எள்ளி நகையாடுவதாகவும் உள்ளது. பிரதமர் அவைக்கு வராததற்குப் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேடயமாகப் பயன்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெண் உறுப்பினர்கள் பிரதமரை தாக்கச் சதி செய்ததாக சபாநாயகர் கூறியிருப்பது, மக்கள் பிரதிநிதிகளாக உள்ள பெண்களின் கண்ணியத்தைச் சிதைக்கும் செயலாகும். அவர்களின் ஜனநாயகக் குரலை "தாக்குதல் சதி" என்று சித்தரிப்பது, அவர்களின் அரசியல் உரிமைகளைக் கொச்சைப்படுத்துவதாகும். பிரதமருக்கு இருக்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டிய சபாநாயகரே, அவருக்குப் பாதுகாப்பு கவசமாக செயல்படுவது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது. சபாநாயகர் என்பவர் அவையின் விதிகளின்படி நடுநிலையுடன் செயல்பட வேண்டுமே தவிர, ஆளும் தரப்பின் செய்தித் தொடர்பாளராகவோ, பாதுகாவலராகவோ செயல்படக் கூடாது. எனவே, பெண் உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சபாநாயகர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். நாடாளுமன்றத்தின் மாண்பையும், பெண் பிரதிநிதிகளின் கண்ணியத்தையும் காக்க அவர் முன்வர வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். #StopInsultingWomenMPs | #SaveDemocracy | #ParliamentDebate | #Accountability | #SDPI | #📷வாட்ஸப் DP #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴
📷வாட்ஸப் DP - எதிர்கட்சிகளின் கேள்விகளிலிருந்து பிரதமரை காப்பாற்ற பெண் எம்பிக்களை அவமதிப்பது ೫ கண்டனத்திற்குரியது! 1 1 நெல்லை முபாரக் M.A. தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு SDPY சோசியல் டெமொக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா தமிழ்நாடு f@xO Isdpitamilnaduofficial எதிர்கட்சிகளின் கேள்விகளிலிருந்து பிரதமரை காப்பாற்ற பெண் எம்பிக்களை அவமதிப்பது ೫ கண்டனத்திற்குரியது! 1 1 நெல்லை முபாரக் M.A. தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு SDPY சோசியல் டெமொக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா தமிழ்நாடு f@xO Isdpitamilnaduofficial - ShareChat
சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்! - நாடாளுமன்ற ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது! - எஸ்டிபிஐ இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ஜனநாயகத்தின் மிக உயரிய இடமாகவும், மக்களின் பிரதிநிதிகள் தேசத்தின் முக்கியப் பிரச்சினைகளை முன்வைக்கும் தளமாகவும் விளங்குவது நமது நாடாளுமன்றம். ஆனால், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை விவாதிக்கக் கோரிய, தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளுக்கே எதிரானது. மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விவகாரத்தை, அதிகார பலத்தைக் கொண்டு ஒடுக்குவது என்பது ஆரோக்கியமான நாடாளுமன்ற நடைமுறைக்கு அழகல்ல. முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணே அவர்கள் தனது நினைவுக் குறிப்பு புத்தகத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லை விவகாரங்கள் குறித்து குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் தேச நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமானவை. ராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவரின் கருத்துகள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் கோருவதும், விவாதம் நடத்துவதும் எதிர்க்கட்சிகளின் கடமையாகும். அந்த கடமையைச் செய்ய முற்பட்ட உறுப்பினர்களைச் சபையிலிருந்து சஸ்பெண்ட் செய்வது, அரசின் மீதான சந்தேகங்களை வலுப்படுத்துவதோடு, உண்மைகளை மூடி மறைக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு என்பது ரகசியமாக வைக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், நாட்டின் மிக முக்கியமான முடிவெடுக்கும் இடமான நாடாளுமன்றத்திலேயே அதைப் பற்றிப் பேசக்கூடாது என்பது ஏற்புடையதல்ல. எம்.பி.க்களின் குரலை ஒடுக்குவதன் மூலம் ஒரு அரசு தற்காலிகமாக விவாதங்களைத் தவிர்க்கலாம், ஆனால் மக்களின் கேள்விகளைத் தவிர்க்க முடியாது. எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கத்தை உடனே ரத்து செய்வதுடன், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய அரசு வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📷வாட்ஸப் DP #📺வைரல் தகவல்🤩
📺அரசியல் 360🔴 - SDPI Issued on 04.02.2026 சுவெங்கடேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிஃக்கள் 8 இடைநீக்கம்! நாடாளுமன்ற ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் நடவழக்கை கண்டக்கத்தக்கது! எம்பிஃக்களின் குரலை ஒடுக்குவதன்  மூலம் மக்களின் கேள்விகளைத் தவிர்க்க முடியாது ! நெல்லை முபாரக் MA, தலைவர், SDPI தமிழ்நாடு கட்சி SDPI சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி  ஆஃப் இந்தியா தமிழ்நாடு 9Isdpitaminaduofficial SDPI Issued on 04.02.2026 சுவெங்கடேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிஃக்கள் 8 இடைநீக்கம்! நாடாளுமன்ற ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் நடவழக்கை கண்டக்கத்தக்கது! எம்பிஃக்களின் குரலை ஒடுக்குவதன்  மூலம் மக்களின் கேள்விகளைத் தவிர்க்க முடியாது ! நெல்லை முபாரக் MA, தலைவர், SDPI தமிழ்நாடு கட்சி SDPI சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி  ஆஃப் இந்தியா தமிழ்நாடு 9Isdpitaminaduofficial - ShareChat
பிப் 03 - பேரறிஞர் அண்ணா நினைவு தினம்.! பேரறிஞர் அண்ணா – தமிழ் இனத்தின் கனவாக, திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டவராக, சமூகநீதி, தமிழ் மொழி, சுயமரியாதை கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஆளுமையாக என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது போராட்டமும், அறிவும் இன்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டுகிறது. அவர்தம் முழக்கங்களையும், சமூக நீதிக் கொள்கைகளையும் என்றென்றும் நினைவுகூர்வோம்.! -நெல்லை முபாரக், தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு. #RememberingAnna #ArignarAnna | #CNAnnadurai | #PerarignarAnna | #பேரறிஞர்அண்ணா | #📷வாட்ஸப் DP #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴
📷வாட்ஸப் DP - பிப்ரவரி 03 பேரறிஞர் அண்ணா நினைவுதினம் பேரறிஞர் அண்ணா தமிழ் இனத்தின் கனவாக திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு  அடித்தளமிட்டவராக, சமூகநீதி தமிழ் மொழி, சுயமரியாதை கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஆளுமையாக என்றென்றும் நினைவுகூரப்படுவார் அவரது போராட்டமும் அறிவும் இன்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டுகிறது அவர்தம் முழக்கங்களையும் சமூக நீதிக் கொள்கைகளையும் என்றென்றும் நினைவுகூர்வோம்! SDPH சோசியல் டெமொக்ரடிக் இந்தியா  ஆஃப்  பார்ட்டி  கட்சி தமிழ்நாடு [Olsdpitamilnadu' பிப்ரவரி 03 பேரறிஞர் அண்ணா நினைவுதினம் பேரறிஞர் அண்ணா தமிழ் இனத்தின் கனவாக திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு  அடித்தளமிட்டவராக, சமூகநீதி தமிழ் மொழி, சுயமரியாதை கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஆளுமையாக என்றென்றும் நினைவுகூரப்படுவார் அவரது போராட்டமும் அறிவும் இன்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டுகிறது அவர்தம் முழக்கங்களையும் சமூக நீதிக் கொள்கைகளையும் என்றென்றும் நினைவுகூர்வோம்! SDPH சோசியல் டெமொக்ரடிக் இந்தியா  ஆஃப்  பார்ட்டி  கட்சி தமிழ்நாடு [Olsdpitamilnadu' - ShareChat
ஒன்றிய பட்ஜெட்-2026 சாமானிய மக்களை ஏமாற்றியுள்ளது! - எஸ்டிபிஐ வேலையின்மை மற்றும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் சாமானிய மக்களுக்கு உண்மையான நிவாரணம் அளிக்கும் எந்த ஆக்கப்பூர்வமான திட்டமும் இல்லாமல், வெறும் பெருமிதமான அறிக்கைகளாலும், சுய புகழ்ச்சிகளாலும் நிரம்பிய ஒரு ஆவணமாக ஒன்றிய பட்ஜெட் 2026 அமைந்துள்ளது என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயல்தலைவர் முகமது ஷஃபி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது; உணவு, எரிபொருள், கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி ஆகியவற்றின் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சாமானிய குடும்பங்கள் தத்தளிக்கும் இந்த நேரத்தில், இந்தப் பட்ஜெட் மிகைப்படுத்தப்பட்ட கணிப்புகளையும் நீண்டகால வாக்குறுதிகளையும் தவிர வேறு எதையும் வழங்கவில்லை. இது மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பொருளாதார நெருக்கடிகளைக் கவனத்தில் கொள்ளத் தவறியுள்ளது. சாதாரண இந்தியர்களின் நிதர்சன வாழ்க்கையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதாக இந்தப் பட்ஜெட் தெரிகிறது. குறிப்பாக நடுத்தர வர்க்கம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் இருந்தபோதிலும், வருமான வரி வரம்புகள் (income tax slabs) எவ்வித மாற்றமும் இன்றி உள்ளன. இது வாங்கும் சக்தி தொடர்ந்து குறைந்துவரும் சம்பளக்காரர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. வரிச் சலுகைகள் அல்லது வருமான ஆதரவு வழங்க மறுப்பதன் மூலம், அரசு உள்நாட்டு நுகர்வை பலவீனப்படுத்தி, பொருளாதார மீட்சியை மேலும் தாமதப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பட்ஜெட் சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பற்றி எதுவும் பேசவில்லை. அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் கணிக்க முடியாத சந்தை நிலவரங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் அமைப்புசாரா விவசாயிகளுக்கு அர்த்தமுள்ள சலுகைகளும் வழங்கப்படவில்லை. வருமானப் பாதுகாப்பு இல்லாத நிலையில், கிராமப்புற துயரங்கள் மேலும் ஆழமடையும். தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது இன்னும் கவலை அளிப்பதாக உள்ளது. லட்சக்கணக்கான தினக்கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். ஆனால் அவர்களை மேம்படுத்தும் பயனுள்ள நலத்திட்டங்கள் அல்லது வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் எதுவும் இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் வருமான ஆதரவு குறித்த மௌனம், சமூகப் பொறுப்பில் கடுமையான தோல்வியை பிரதிபலிக்கிறது. நிதியமைச்சர் மீண்டும் மீண்டும் "சப்கா சாத், சப்கா விகாஸ்" (அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி) என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். ஆனால் சிறுபான்மை சமூகங்களை மேம்படுத்துவதற்கான உறுதியான திட்டங்கள் அல்லது இலக்கு வைக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்திய தலையீடுகள் இல்லாதது, சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளியை அம்பலப்படுத்துகிறது. ஆகவே, மக்களை மையமாகக் கொண்ட பட்ஜெட்டானது வேலைவாய்ப்பு, விலை கட்டுப்பாடு, வருமானப் பாதுகாப்பு, சமூக நீதி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சமூகத்தின் பெரும்பகுதியினர் பாதுகாப்பின்மைக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகும்போது, உள்கட்டமைப்பு எண்களால் மட்டும் வளர்ச்சியை அளவிட முடியாது. நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் உண்மையாக சேவை செய்யும் பொருளாதாரக் கொள்கையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு முகமது ஷஃபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📷வாட்ஸப் DP #📺வைரல் தகவல்🤩
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ஒன்றிய பட்6ெட் 2026 சாமானிய மக்களை ஏமாற்றியுள்ளது! 30| GEI 2026 ஷஃபி முகமது தேசிய செயல் தலைவர் SDPIssuedon 02Feb 2026 SDPI சோசுயல் படமாவரடக பய்ப்ட பற தமிழநாடு @೦ ೦೦lsdpitamllnaduotilclal  ஒன்றிய பட்6ெட் 2026 சாமானிய மக்களை ஏமாற்றியுள்ளது! 30| GEI 2026 ஷஃபி முகமது தேசிய செயல் தலைவர் SDPIssuedon 02Feb 2026 SDPI சோசுயல் படமாவரடக பய்ப்ட பற தமிழநாடு @೦ ೦೦lsdpitamllnaduotilclal - ShareChat
பெண் குழந்தைகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் தமிழக அரசின் மகத்தான திட்டம் வரவேற்க்கத் தக்கது! - எஸ்டிபிஐ இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் காக்கும் உன்னத நோக்கத்துடன், மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் (ஹெச்பிவி) தடுப்பூசி வழங்கும் முன்னோடித் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலில் இந்தப் புரட்சிகரமான தடுப்பூசித் திட்டத்தை தொடங்கியுள்ள தமிழக அரசின் நடவடிக்கையை எஸ்டிபிஐ கட்சி வரவேற்று பாராட்டுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு சில நிமிடங்களிலும் ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவது என்பது கொடூரமான உண்மை. பெரும்பாலான சமயங்களில் நோய் மேம்பட்ட நிலையில் கண்டறியப்படுவதால், சிகிச்சை சவாலாகிறது. இத்தகைய பின்னணியில், தமிழக அரசு தொடங்கியுள்ள இந்த (HPV) இலவச தடுப்பூசித் திட்டம் வெறும் சுகாதாரத் திட்டமாக மட்டுமின்றி, பெண்களின் வாழ்வைப் பாதுகாக்கும் மாபெரும் சமூகப் புரட்சியாகவே விளங்குகிறது. உலக அளவில் தடுப்பூசி மூலம் முழுமையாகத் தடுக்கக்கூடிய ஒரே புற்றுநோய் கருப்பை வாய் புற்றுநோய் மட்டுமே என கூறப்படுகிறது. ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) இதற்கான முதன்மை காரணியாகும். இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்பே, குறிப்பாக இளம் வயதில் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நீண்டகால பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கூட ஆயிரக்கணக்கில் விலை போகும் இத்தடுப்பூசி, பொருளாதார வசதி உள்ளோருக்கு மட்டுமே அணுகக்கூடியதாக இருந்தது. ஆனால், தமிழக அரசின் இந்த இலவசத் திட்டம் ஏழை எளிய மக்களின் பெண் குழந்தைகளுக்கும் இதை அடையக்கூடியதாக மாற்றியுள்ளது. இதன்மூலம் சுகாதாரத்தில் சமத்துவத்தை நிலைநாட்டியுள்ளது; பெண்களின் உரிமைகளை வலுப்படுத்தியுள்ளது. ஆரோக்கிய உரிமை என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானது அல்ல என்பதை இத்திட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும், பெண்களின் உயிர் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் எந்த முயற்சியும் பாராட்டுக்குரியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி சார்பாக தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, தகுதியுடைய அனைத்து பெண் குழந்தைகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📺அரசியல் 360🔴 - வயதுக்குப்பட்ட  14 பெண் குழந்தைகளூக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் மகத்தானதிட்டம் தமிழக அரசின் வரவேற்க்கத்தக்கது! நெல்லை முபாரக் MA மாநில தலைவர், SDPI கட்சி SDPI சோசியல் டறொகிரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி, தமிழ்நாடு Isdpitamilnadu xg SDPI Issued on 31Jan 2026 வயதுக்குப்பட்ட  14 பெண் குழந்தைகளூக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் மகத்தானதிட்டம் தமிழக அரசின் வரவேற்க்கத்தக்கது! நெல்லை முபாரக் MA மாநில தலைவர், SDPI கட்சி SDPI சோசியல் டறொகிரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி, தமிழ்நாடு Isdpitamilnadu xg SDPI Issued on 31Jan 2026 - ShareChat
பாரத ரத்னா விருது பெற்றவர்கள் முதல் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் வரை: வாக்காளர் நீக்கங்கள் தேசிய அளவில் கவலையை ஏற்படுத்துகின்றன! குஜராத்தின் ஜூனாகத்தில், ஹாஜி ரமக்து (மிர் ஹாஜிபாய் காசம்பாய் என்றும் அழைக்கப்படும்) என்று பிரபலமான நாட்டுப்புற இசைக்கலைஞரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் முயற்சி போன்ற இலக்கு வைக்கப்பட்ட வாக்காளர் நீக்கங்கள் மூலம் ஜனநாயக உரிமைகள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களை #SDPI கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அஷ்ரஃப் கடுமையாகக் கண்டித்துள்ளார். தோலக் இசை நிகழ்ச்சிகள், பஜனைகள், சந்த்வானி, கஜல்கள் மற்றும் கவ்வாலி போன்றவற்றிற்கு வாழ்நாள் முழுவதும் பங்களித்த 74-80 வயதான இசைக்கலைஞர் ஹாஜி ரமக்து அவர்களுக்கு, 77வது குடியரசு தினத்தன்று (2026 ஜனவரி) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், சமூகத்தில் ஆழமான தொடர்புகள் இருந்தபோதிலும், "நிரந்தரமாக வேறு இடத்திற்குச் சென்றுவிட்டார்" என்று கூறி, உள்ளூர் பாஜக கவுன்சிலர் ஒருவரால் படிவம்-7 ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நிர்வாகப் பிழை அல்ல; ஜனநாயகப் பங்கேற்பு மற்றும் கண்ணியத்திற்கு எதிரான திட்டமிட்ட அவமதிப்பாகும். இச்சம்பவம் தேசிய அளவிலான கவலையளிக்கும் போக்கை பிரதிபலிக்கிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற குஜராத்தி நகைச்சுவையாளர் ஷஹாபுதீன் ரத்தோடும் இதேபோன்ற ஆட்சேபனைகளை எதிர்கொண்டார். முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ் சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறையில் (SIR) தனது பெயர் விடுபட்டிருப்பதைக் கண்டறிந்தார். நோபல் பரிசு மற்றும் பாரத ரத்னா விருது பெற்ற அமர்த்தியா சென் மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். அர்ஜுனா விருது பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உத்தரப் பிரதேசத்தில் தனது பெயர் விடுபட்டிருப்பதைக் கண்டறிந்தார். இது முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான பாரபட்ச அச்சங்களை தீவிரப்படுத்துகிறது. உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் தனது பெயர் காணாமல் போனதால் இடைத்தேர்தலில் வாக்களிக்க மறுக்கப்பட்டார்; அரசியல் தலையீடே காரணம் என அவர் குற்றம்சாட்டினார். முன்னாள் இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பிரதீப் வசந்த் நாயக்கின் மனைவியின் பெயரும் புனே வாக்காளர் பட்டியலில் இருந்து முன்னதாக நீக்கப்பட்டிருந்தது. இது அமைப்பின் ஆழமான குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. இந்த உயர்மட்ட புகார்கள், 2025-ல் தொடங்கிய தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறையின் (Special Intensive Revision - SIR) பரவலான தவறான பயன்பாட்டுக்கு முன்னால் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றன. ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் 6.5 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் நீக்க விகிதம் 18 சதவீதத்தை எட்டியுள்ளது (சுமார் 2.89 கோடி பெயர்கள் நீக்கம்). இதன் தாக்கம் புலம்பெயர்ந்தோர், பழங்குடியினர், தலித்துகள், பெண்கள் மற்றும் குறிப்பாக முஸ்லிம்கள் மீது விகிதாசாரமற்ற முறையில் விழுந்துள்ளது. ராஜஸ்தான், பீகார், அசாம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், பாஜக தலைவர்களிடமிருந்து பெருமளவு படிவம்-7 ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவும், இறப்பு/இடமாற்றம் குறித்த போலிக் குற்றச்சாட்டுகளை உருவாக்கவும், சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் மொத்த நீக்கங்களை மேற்கொள்ளவும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெய்ப்பூரில், முஸ்லிம் வாக்காளர்களை நீக்குமாறு பாஜக எம்எல்ஏ வற்புறுத்தியதால் ஒரு வாக்குச்சாவடி அதிகாரி தற்கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. பீகாரின் டாக்கா தொகுதியில் கிட்டத்தட்ட 80,000 முஸ்லிம் வாக்காளர்கள் பாஜக லெட்டர்ஹெட் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டனர். கேரளாவில், முறையான சரிபார்ப்பு அல்லது முன்னறிவிப்பின்றி படிவம்-7ஐ தவறாகப் பயன்படுத்தி வாக்காளர்களை—குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினரை—நீக்கும் முயற்சிகள் கடுமையான கவலையை எழுப்பியுள்ளன. பல அறிக்கைகள் பாஜகவின் செயலில் உள்ள பங்கைக் குறிக்கின்றன. சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் மொத்த நீக்கங்கள் ஏற்படுவதால், எஸ்.ஐ.ஆர் செயல்முறை தேர்தல்களின் நியாயம், உள்ளடக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அசாமில் நெருக்கடி மிகக் கடுமையானது. முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வங்காள வம்சாவளி முஸ்லிம்களை "மியாஸ்" என்ற இழிவான சொல்லால் குறிப்பிட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்குவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். ஜனவரி 2026 இல், திருத்தச் செயல்முறையை அழுத்தத் தந்திரமாகப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட அவர், 4 முதல் 5 லட்சம் வாக்குகள் ரத்து செய்யப்படும் எனக் கணித்தார்—இது பரவலான சீற்றத்தையும் தேர்தல் கையாளுதல் குற்றச்சாட்டுகளையும் தூண்டியது. இத்திருத்தச் செயல்முறைகளை உடனடியாக நிறுத்தவும், எஸ்.ஐ.ஆர்-இன் சுயாதீன தணிக்கை செய்யவும், துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கடுமையான பொறுப்புக்கூறல் விதிக்கவும் எஸ்டிபிஐ கட்சி கோருகிறது. இந்தியாவின் ஜனநாயகம் முறையான விலக்கிலிருந்து தப்பிக்க முடியாது. ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் பயம் அல்லது சாதகம் இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகவே, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், உரிய செயல்முறையை நிலைநிறுத்தவும், சட்டப்பூர்வ வாக்காளர்களின் பெயர்களை விரைவாக மீட்டெடுக்கவும் இந்திய உச்ச நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறோம். #SDPI #SDPITN #YoungDemocratsSDPI #YouthWithSDPI #Sdpipositivepolitics #India #SecularIndia #ProtectMinorities_Marginalised #JusticeDignityEquality #UnityInDiversity #music #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📷வாட்ஸப் DP #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - பாரதரத்னாவிருதுபெற்றவர்கள்முதல் விருது பத்மஸ்ரீ பெற்றவர்கள்வரை வாக்காளர்நீக்கங்கள் தேசியஅளவில் 65@606060 ஏற்படுத்துகின்றனம MUHAMMED ASHRRGF | National Geneual Secietaly] SDPI  PEVOFRATIE SOCIAARFY Of பாரதரத்னாவிருதுபெற்றவர்கள்முதல் விருது பத்மஸ்ரீ பெற்றவர்கள்வரை வாக்காளர்நீக்கங்கள் தேசியஅளவில் 65@606060 ஏற்படுத்துகின்றனம MUHAMMED ASHRRGF | National Geneual Secietaly] SDPI  PEVOFRATIE SOCIAARFY Of - ShareChat
ஜனவரி 30, தேசத் தந்தை மகாத்மா காந்தி பயங்கரவாதி கோட்சேவால் கொல்லப்பட்ட நாள்!!! காந்தியை கொன்றவர்கள் தேசத்தை கொல்கிறார்கள்... காந்தியின் மதச்சார்பற்ற தேசத்தை கட்டமைப்போம்!! மதவாத பாசிசத்தை முறியடிப்போம்!!!! #SDPI #SDPITN #YoungDemocratsSDPI #YouthWithSDPI #Sdpipositivepolitics #India #SecularIndia #ProtectMinorities_Marginalised #JusticeDignityEquality #UnityInDiversity #January30th #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📺அரசியல் 360🔴 - ஜவரி 30 80 9 JANUARY  தேசத் தந்தை மகாத்மா காந்தி பயங்கரவாதி கோட்சேவால் கொல்லப்பட்ட நாள்! காந்தியை கொன்றவர்கள் தேசத்தையும் கொல்கிறார்கள்l காந்தியன் மதச்சார்பற்ற தேசத்தை கட்டமைப்போம்! மதவாத பாசிசத்தை முறியடிப்போம்! O>O Isdpitamilnadu Soclal Democratic Party 0flndla - TanlNadu ஜவரி 30 80 9 JANUARY  தேசத் தந்தை மகாத்மா காந்தி பயங்கரவாதி கோட்சேவால் கொல்லப்பட்ட நாள்! காந்தியை கொன்றவர்கள் தேசத்தையும் கொல்கிறார்கள்l காந்தியன் மதச்சார்பற்ற தேசத்தை கட்டமைப்போம்! மதவாத பாசிசத்தை முறியடிப்போம்! O>O Isdpitamilnadu Soclal Democratic Party 0flndla - TanlNadu - ShareChat
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும்!- SDPI கட்சி வேண்டுகோள் குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்துவதை உறுதி செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எஸ்டிபிஐ கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் இதர அரசியல் கட்சிகள், தங்களின் கட்சி நலன்களைக் கடந்து நாட்டு மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் அர்த்தமுள்ள விவாதங்களுடன் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் செயல்தலைவர் முகமது ஷஃபி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் புதன்கிழமை தொடங்கும் இப்பட்ஜெட் கூட்டத்தொடர், நாடு பொருளாதார, சமூக மற்றும் ஜனநாயக ரீதியாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் சூழலில் நடைபெறுகிறது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயக வெளிப்பாட்டின் உச்சபட்ச மன்றமாகும். அது வெறும் அரசியல் ஆதாயம் தேடும் போர்க்களமாக மாறிவிடாமல், உண்மையான விவாதம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தளமாகச் செயல்பட வேண்டும்." வேலையின்மை, பணவீக்கம், விவசாயிகளின் பிரச்சனைகள், வெளியுறவுக் கொள்கை சவால்கள், கூட்டாட்சி உறவுகள், வாக்காளர் பட்டியல் திருத்தங்கள், பொது சுகாதாரம் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களின் பாதுகாப்பு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து தீவிர விவாதம் தேவை. தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் கொள்கைகள் குறித்து ஆழமான விவாதங்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தேவையற்ற இடையூறுகள் முக்கியப் பிரச்சினைகளைத் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது. அரசாங்கம் தனது சட்டமியற்றும் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முறையான ஜனநாயக உணர்வுடன் பதிலளிக்க வேண்டும். அதே சமயம், எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்ற நேரத்தைத் திறம்படப் பயன்படுத்தி, மக்கள் பிரச்சினைகளை உறுதியுடனும் பொறுப்புடனும் எழுப்ப வேண்டும் என எஸ்டிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள இந்தக் கூட்டத்தொடரில், வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் சமமான பொருளாதார வளர்ச்சி குறித்த தெளிவான பதில்களை இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயக நிறுவனங்கள் மோதல்களால் அல்ல, அரசியலமைப்பு விழுமியங்களின் அடிப்படையிலான உரையாடல்களால்தான் வலுப்பெறுகின்றன. ஆகவே, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், குடிமக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை உறுதிப்படுத்தவும் ஒரு ஆக்கப்பூர்வமான நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அவசியம் என்பதை எஸ்டிபிஐ மீண்டும் வலியுறுத்துகிறது. -முகமது ஷஃபி தேசிய செயல் தலைவர், SDPI #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP
📺அரசியல் 360🔴 - SDPI Appeals Io AII Political Parties to Ensure a Productive]| Parliament Session in thet Inersi 0i Olfzens Mohdmmad Shali Nationa Actins President DP SOCIAAPEMOERDIE 0=0 " SDPI Appeals Io AII Political Parties to Ensure a Productive]| Parliament Session in thet Inersi 0i Olfzens Mohdmmad Shali Nationa Actins President DP SOCIAAPEMOERDIE 0=0 - ShareChat