Fakir Mohamed Lebbai
ShareChat
click to see wallet page
@fakirmohamedlebbai
fakirmohamedlebbai
Fakir Mohamed Lebbai
@fakirmohamedlebbai
நிமிர்ந்து நில் ! மண்டியிடாதே!!
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை மற்றும் நீண்டகால பரோல் விவகாரம்! –தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை ---------------------------- இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக சிறைகளில் 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் முன்கூட்டியே விடுவிப்பது என்பது முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதுவரை சிலர் முன்விடுதலை பெற்றிருந்தாலும், பலர் நீதிமன்ற அனுமதியுடன் நீண்டகால பரோல் விடுப்பில் இருந்து வருகின்றனர். தற்போது அவர்களது பரோல் காலாவதியாகியுள்ள நிலையில், 21 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மீண்டும் நீண்டகால பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். விசாரணையின் போது மாண்புமிகு நீதிபதிகள், “நீண்டகால பரோல் மற்றும் முன்விடுதலை தொடர்பான முடிவுகளை தமிழக அரசே எடுக்க வேண்டும்” என்று தெளிவாகக் கூறி, மனுக்களை நிராகரித்தனர். இதனால் இந்த 21 சிறைவாசிகளும் மீண்டும் சிறைக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசு பரீசீலிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளதால், நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கருணை அடிப்படையில் அவர்களை முன்விடுதலை செய்யும் நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். முன்னதாக அவர்களை நீண்டநாள் பரோல் விடுப்பு வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உயர் நீதிமன்றமே உத்தரவு மூலமாக அரசுக்கு இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கும் நிலையில், தமிழக அரசு உடனடியாகவும் தயக்கமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறைவிடுப்பில் இருந்த இந்த சிறைவாசிகள், புதிய வாழ்க்கையைத் தொடங்கி, தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைந்து, சமூகத்தில் பொறுப்புள்ள குடிமக்களாக வாழ முயற்சித்து வந்தனர். முன்கூட்டிய விடுதலைக்காக ஆவலுடன் காத்திருந்தவர்களை, அரசின் தொடர்ச்சியான தாமதங்கள் மீண்டும் சிறைக்குத் திருப்பி அனுப்பியுள்ளன. இது சிறைவாசிகளையும் அவர்களது குடும்பங்களையும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் இருந்தவர்கள், இந்த நிச்சயமற்ற நிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, தமிழக அரசு இந்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் முன்கூட்டிய விடுதலைக்கான நடவடிக்கைகளை உடனடியாகத் துரிதப்படுத்த வேண்டும். மற்ற ஆயுள் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் முன்விடுதலை வாய்ப்புகள், பாரபட்சமின்றி இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். பேரறிவாளன் விவகாரத்தில் அவர் விடுதலை பெறும் வரையில் அவருக்கு வழங்கப்பட்ட நீண்டநாள் பரோல் விடுப்பை போன்று இவர்களுக்கும் பரோல் விடுப்பு வழங்கிட வேண்டும். நீதி மற்றும் மனிதாபிமான அணுகுமுறையுடன் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விசயத்தில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தலைமைச் செயலர் அவர்களுக்கும் மனு அனுப்பியுள்ளேன். முஸ்லிம் சமூகத்தின் நெடுநாள் எதிர்பார்ப்பையும் மனிதாபிமானக் கோரிக்கையையும் நிறைவேற்றிட தமிழக அரசு உடனடித் துரித நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இந்த சிறைவாசிகளின் விடுதலை, அவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், நீதியின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும் உதவும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். Chief Minister of Tamil Nadu #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP
📺அரசியல் 360🔴 - முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை மற்றும் நீண்டகால பரோல் விவகாரம்! -தமிழக அரசுக்கு SDPI கட்சி கோரிக்கை நெல்லை முபாரக்  மாநில தலைவர் SDPI SDPI சோசியல் டெமாக்ரடிக் mogolsdpiauinaduofficial 61 கடசிதமிழ்நாடு முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை மற்றும் நீண்டகால பரோல் விவகாரம்! -தமிழக அரசுக்கு SDPI கட்சி கோரிக்கை நெல்லை முபாரக்  மாநில தலைவர் SDPI SDPI சோசியல் டெமாக்ரடிக் mogolsdpiauinaduofficial 61 கடசிதமிழ்நாடு - ShareChat
பீகாரின் முடிவுகள் தரும் அதிர்ச்சி செய்தி: தேர்தல்கள் இப்போது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட “மேட்ச்-பிக்ஸிங்” ஆகிவிட்டன! ------------------------------- பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-ஜேடியூ தலைமையிலான ஆளும் கூட்டணி நம்ப முடியாத வகையில் 90 சதவீதத்துக்கும் மேலான வெற்றி விகிதத்துடன் அபரிமிதமான வெற்றி பெற்றிருப்பது நமக்கு ஒரு கசப்பான உண்மையை நினைவூட்டுகிறது: தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகள் கற்பனையல்ல, இன்றைய இந்தியாவின் கடுமையான யதார்த்தம். இந்தத் தேர்தல், மாநில வாக்காளர் பட்டியலில் பரவலான “சிறப்பு தீவிர திருத்தம்” (Special Intensive Revision - SIR) நடத்தப்பட்ட பின்னரே நடத்தப்பட்டது. இந்த செயல்முறை குறித்து பல எதிர்க்கட்சிகள், ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரிகள், அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொறுப்பான பலரும் கடுமையான ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் இந்த உண்மையான கவலைகளை கண்டுகொள்ள மறுத்துவிட்டு, ஏறக்குறைய 50 லட்சம் பேர் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கும் முடிவை அமல்படுத்தியது. பீகாரில் வாக்களிப்பு முறை குறித்து நிபுணர்களால் இன்னும் ஆழமான பகுப்பாய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், வெளிவந்திருக்கும் முற்றிலும் இயற்கைக்கு மாறான முடிவுகள் ஒரே திசையையே சுட்டிக்காட்டுகின்றன: இது ஒரு மிகக் கடுமையான நிலையின் அறிகுறி; இனி தேர்தல்கள் “மேட்ச்-பிக்ஸிங்” போல நடத்தப்படும் காலம் தொடங்கிவிட்டது என்பதும், “அம்பயர்” (தேர்தல் ஆணையம்) ஆளும் சக்திகளின் பக்கம் சாய்ந்து நிற்பதும் தெளிவாகிறது. தேர்தல் பிரச்சார காலத்திலேயே இந்தக் கவலைகள் எழுப்பப்பட்டன. பல எதிர்க்கட்சிகளும் தனிநபர்களும் புதிய வாக்காளர் பட்டியல் குறித்து தேர்தல் ஆணையத்தில் பல புகார்களை பதிவு செய்திருந்தனர். லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது வெளியான மற்றொரு உண்மை: இறுதி பட்டியல் வெளியான பிறகும் ஆணையம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்களை மீண்டும் சேர்த்திருக்கிறது — இது மிகவும் ரகசியமான, சந்தேகத்துக்குரிய நடவடிக்கையாகத் தெரிகிறது; ஆளும் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் அவர்களுக்கு சாதகமாக செய்யப்பட்ட ஏற்பாடு போல தோன்றுகிறது. முன்பு பெரிய அளவில் நீக்கப்பட்ட பெயர்களில் பலவற்றின் நீக்கம் முறை மிகவும் அபத்தமானதாகவும் நியாயமற்றதாகவும் இருந்தது — அது குறித்த கேள்விகள் இன்று வரை பதிலளிக்கப்படவில்லை. இறந்தவர்கள், மிக இளம் வயது வாக்காளர்கள், குறிப்பிட்ட சமூகம் அல்லது சமுதாயக் குழுக்களின் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டதாக பல அறிக்கைகள் வெளியாயின; நிபுணர்களும் பொறுப்பான ஊடகங்களும் ஆழமான ஆய்வுக்குப் பிறகு இதை வெளிப்படுத்தின. ஆனால் எந்த அதிகாரியும் இதற்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று கருதினர். இந்தியாவின் தற்போதைய தேர்தல் முறைமீதான நம்பிக்கை வெகுவாகக் குறைந்து வருவது தெளிவு. ஆளும் கட்சிகளால் அரசு இயந்திரத்தை வெளிப்படையாக தவறாகப் பயன்படுத்தியது இம்முறை பீகாரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்திருக்கிறது. வாக்காளர்களை ஈர்க்க அரசு நிதியிலிருந்து “இலவசங்கள்” (freebies) பட்டியல் நீண்டு கொண்டே போனது அதிர்ச்சியளித்தது. சுமார் 1.25 கோடி பெண் வாக்காளர்களுக்கு தலா 10,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. பல சமூகக் குழுக்களுக்கும் தேர்தலுக்கு சற்று முன்பே இதே போன்ற “பயன்கள்” வழங்கப்பட்டன. பின்தங்கிய மற்றும் தேவைப்படும் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு அதை “லாபம்” என்ற பெயரில் வழங்குவது தெளிவாக தேர்தல் ஆதாயத்தை அறுவடை செய்யும் நோக்கம் கொண்ட ஊழல் நடைமுறை. ஆனால் தேர்தல் ஆணையம் இதன் அரசியலமைப்பு ரீதியான செல்லுபடியாகும்தன்மை குறித்து ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை. யாராவது நீதிமன்றத்தில் சவால் விடுத்தாலும் பயனில்லை — ஏனெனில் தேர்தல் செயல்முறை தொடங்கிய பிறகு நீதிமன்றங்கள் பொதுவாக தலையிடுவதில்லை. பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை ஒரு பயங்கரமான பிம்பத்தை முன்வைக்கிறது: இந்தியாவின் தேர்தல் முறைமை இப்போது ஆட்சியில் இருப்பவர்களால் எந்தவித விளைவுகளுக்கும் அஞ்சாமல் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடியதாக ஆகிவிட்டது. தேர்தல் ஆணையம் தனது பக்கச்சார்பு அணுகுமுறைகள் மூலம் தனது சொந்த நம்பகத்தன்மைக்கே பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா இப்போது தனது ஜனநாயக அமைப்புகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சறுக்கலான சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இறுதி விளைவு பேரழிவு தவிர வேறொன்றும் இருக்காது. இந்த அர்த்தத்தில் பீகார் ஒரு எச்சரிக்கை மணியடி — இந்திய மக்களுக்கு உரத்ததும் தெளிவானதுமான செய்தி: தங்கள் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்க உடனடியாகச் செயல்பட வேண்டும் என்பதே. -பி. அப்துல் மஜீத் பைஸி தேசியப் பொதுச்செயலாளர், SDPI #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📷வாட்ஸப் DP
📺அரசியல் 360🔴 - ShareChat
*திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்* எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் இன்று (நவ,19) திருச்சியில் நடைபெற்றது. மாநில பொருளாளர் முஸ்தபா வரவேற்புரையாற்ற, மாநில செயலாளர் ஹமீத் ஃப்ரோஜ் நன்றியுரையாற்றினார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெகலான் பாகவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் அச.உமர் பாரூக், அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபூபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் நஸ்ருதீன், மாநிலச் செயலாளர்கள் ஷபீக் அஹம்மது, நஜ்மா பேகம், அப்துல்லா ஹஸ்ஸான், பாஸ்டர் மார்க் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் பணிகள், தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் எஸ்ஐஆர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்: 1.‘களத்தைத் தயார் செய்வோம்! 2026-இல் வெல்வோம்!’ என்ற முழக்கத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் தழுவிய அளவில் எஸ்டிபிஐ கட்சியின் பூத்-வாரியான கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. திட்டமிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம் முடிவடைந்துவிட்டது. இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் பொறுப்பாளர்கள்-முகவர்கள் மாநாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. நவம்பர்-டிசம்பர் இலக்குக் காலக்கெடுவிற்குள் அனைத்து மாவட்டங்களிலும் இம்மாநாடுகள் நிறைவுபெறும். இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் பூத் பொறுப்பாளர்கள் மற்றும் முகவர்கள் மாநாடும், திருவாரூரில் தஞ்சை மண்டல பூத் பொறுப்பாளர்கள் மாநாடும் நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் திராவிட முதன்மைக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக, அதிக எண்ணிக்கையிலான பூத் கமிட்டி பொறுப்பாளர்களையும் உறுப்பினர்களையும் கொண்ட கட்சியாக எஸ்டிபிஐ தன்னை வேகமாக உருவாக்கி வருகிறது. இந்த மாநாடுகள் அதற்கான தெளிவான சான்று. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இம்மாநாடுகள் மூலம் கட்சியின் அடிமட்ட அமைப்பு மேலும் வலுப்பெறும்; 2026-இல் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை பெறும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. இந்த மாபெரும் பணியை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி வரும் அனைத்து மண்டல் பொறுப்பாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் இந்த செயற்குழு பாராட்டுகளைத் தெரிவிக்கிறது. நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள ஒவ்வொரு தகுதிவாய்ந்த வாக்காளரும் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தத்தில் விடுபடாத வகையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இந்தப் பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டுமென மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. 2.தமிழகத்தில் சுமார் 6.5 கோடி வாக்காளர்களை மையப்படுத்தி இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் தொடர்ந்து குழப்பங்களும், குளறுபடிகளும் நீடித்து வருகின்றன. வாக்காளர்கள் ஒருபுறம் பரிதவிக்கும் நிலையில், பணிச்சுமை காரணமாக பூத் நிலை பணியாளர்களும் பாதிக்கப்பட்டு போராடும் நிலைக்கு சென்றுள்ளனர். வாக்காளர்களுக்கு விண்ணப்பங்கள் நிரப்புவதில் மாறுபட்ட, தவறான தகவல்கள் பூத் நிலை பணியாளர்களால் வழங்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். மிகமுக்கியமாக பெயர் மாற்றம் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்கிற வழிக்காட்டுதல் இல்லாததால் அவர்களும் குழப்பத்தில் உள்ளனர். மட்டுமின்றி, 2002-க்கு முன்பு பல தேர்தல்களில் வாக்களித்தவர்களின் பெயர்கள் 2002 இறுதிப் பட்டியலில் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக இப்போது ஆவணங்கள் கோருவது நியாயமற்றது. புலம்பெயர்வு, இடமாற்றம், விழிப்புணர்வின்மை போன்ற காரணங்களால் அன்றைய பட்டியலில் பெயர்கள் தவறியிருக்கலாம்; பின்னர் வந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் உள்ள பட்டியல்களில் அவர்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். அப்படியிருக்கையில், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஆவணங்கள் கேட்பது ஏற்புடையதல்ல. தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின்படி சில தொகுதிகளில் 2002 இறுதிப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்; அதே சமயம் வேறு சில தொகுதிகளில் 2005 இறுதிப் பட்டியலில் உள்ளவர்கள் தகுதியானவர்களாக ஏற்கப்படுகிறார்கள். 2002-ல் தகுதியாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் 2003, 2004-ல் சேர்க்கப்பட்டவர்கள் இப்போது தகுதியற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்றால், 2005-ல் சேர்க்கப்பட்டவர்கள் மட்டும் தகுதியானவர்களாக ஆவது வெளிப்படையான பாரபட்சமாகும். இது ஒரே மாநிலத்தில், ஒரே தேர்தல் ஆணையத்தின் கீழ் இரு வேறு நியமங்களைப் பின்பற்றும் பாரபட்சமாகும். மேலும், பீகாரில் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் அங்கு பெயர் இருப்பவர்கள் அதைக்காட்டி இங்கு வாக்காளர்களாக தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்பதும், போதிய கால அவகாசம் அளித்து செய்ய வேண்டிய பணியை அவசர அவசரமாக முடிக்க முனைப்புக் காட்டுவதும் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகவே தெரிகிறது. ஆகவே, அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் எதிரான இந்த நடைமுறையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. 3.தமிழ்நாட்டில் தெரு நாய்க்கடி தொல்லைகள், அதனால் ஏற்படும் ரேபிஸ் தொற்று மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது மிகுந்த கவலைகளை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் இந்தாண்டு மட்டும் நாய்க்கடியால் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஆகவே, இப்பிரச்சினைகளை எதிர்கொள்ள, தமிழக அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் தடுப்பூசி திட்டங்களை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ARV மற்றும் ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) கையிருப்பு எப்போதும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ரேபிஸ் தொற்று குறித்து பொதுமக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும். சாலை மற்றும் தெருக்களில் கொட்டப்படும் குப்பை மற்றும் உணவுக் கழிவுகளை முறையாக அகற்றுவதன் மூலம் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம், தமிழ்நாட்டில் தெரு நாய் தாக்குதல்கள் மற்றும் ரேபிஸ் மரணங்களை குறைத்து, மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. 4.தமிழ்நாட்டில் தற்போது டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட விசக்காய்ச்சல்கள் மிக வேகமாகப் பரவி வருகின்றன. வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட நீர்த்தேக்கம், சுகாதாரமற்ற சூழல், கொசுக்களின் இனப்பெருக்கம் ஆகியவை இப்பரவலுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. குறிப்பாகக் குழந்தைகளும் முதியோரும் இந்நோய்களால் பெரிதும் பாதிக்கப்படுவதால், பொது மக்களிடையே பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகவே, டெங்கு மற்றும் பிற விசக்காய்ச்சல்களின் பரவலை உடனடியாகக் கட்டுப்படுத்த தமிழக அரசு மிகத் தீவிரமான, உறுதியான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு முகாம்களை ஏற்படுத்துதல், உடனடி சோதனை மற்றும் சிகிச்சை வசதிகள் ஆகியவற்றை துரிதமாக செயல்படுத்தி இந்த அச்சுறுத்தலை முறியடிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. 5.தமிழ்நாடு குறுவைப் பருவத்தில் நெல் உற்பத்தி மற்றும் கொள்முதல் துறையில் சாதனை படைத்துள்ள நிலையில், காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையால் ஈரமான நெல் அதிக அளவில் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை தற்போதைய 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நியாயமான, விவசாயிகளுக்கு மிகவும் தேவையான கோரிக்கையை உடனடியாக ஏற்று, அதற்கான ஆணையை ஒன்றிய அரசு விரைந்து பிறப்பிக்க வேண்டுமென ஒன்றிய அரசை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. 6.கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக அரசு தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்த கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான அறிக்கையை, ஒன்றிய பாஜக அரசு கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது 2011-ஆம் ஆண்டு பழைய மக்கள் தொகை தரவின் அடிப்படையில் குறைந்த மக்கள் தொகை என்கிற காரணத்தைக் காட்டி நிராகரித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது வெறும் நிர்வாகத் தவறு அல்ல – தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான திட்டமிட்ட புறக்கணிப்பும், அரசியல் பழிவாங்கலும்தான் என எஸ்டிபிஐ கட்சி கருதுகிறது. குறைந்த மக்கள் தொகை கொண்ட ஆக்ரா, லக்னோ போன்ற நகரங்களுக்கு மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த அதே ஒன்றிய அரசு, கோவை, மதுரை போன்ற வேகமாக வளர்ந்து வரும் தொழில்-கல்வி மையங்களுக்கு மட்டும் தொடர்ந்து மறுப்பது தமிழகத்தின் மீதான வெளிப்படையான புறக்கணிப்பையே காட்டுகிறது. வேகமான நகரமயமாக்கல் மற்றும் வளர்ச்சியை அவதானிக்காமல், பழைய தரவுகளைப் பிடித்து, வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கும் இந்த அணுகுமுறை, தமிழகத்தின் உண்மையான தேவைகளைப் புறக்கணிக்கிறது. வளர்ந்து வரும் மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கு மெட்ரோ போக்குவரத்து என்பது ஆடம்பரம் அல்ல – அத்தியாவசியத் தேவையாகும். போக்குவரத்துத் திறன் தான் ஒரு நகரத்தின் வளர்ச்சியையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் தீர்மானிக்கும் முதன்மையான காரணி. ஆகவே தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையையும், மாநில அரசின் முயற்சியையும் மதித்து, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. 7.பாபரி மஸ்ஜித் இடிப்புத் தினமான டிசம்பர் 6 அன்று, தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. #📷வாட்ஸப் DP #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴
📷வாட்ஸப் DP - SDPIகட்சி ப SDPIகட்சி ப - ShareChat
#📷வாட்ஸப் DP #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📷வாட்ஸப் DP - நீங்கள் தேடி போகும் அழகான உறவுகளை விடர (8!! உங்களை வரும் அன்பான உறவுகளை புன்னகையுடன் நேசியுங்கள் னிய கலலைவணக்கம்! Fokir Mohamed Lebbai நீங்கள் தேடி போகும் அழகான உறவுகளை விடர (8!! உங்களை வரும் அன்பான உறவுகளை புன்னகையுடன் நேசியுங்கள் னிய கலலைவணக்கம்! Fokir Mohamed Lebbai - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📷வாட்ஸப் DP #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - சிலவற்றை தெரிந்துகொண்டால் தெளிவாசு இருப்பீர்கள்ள ஊலஹ்றைதெரிாமல் இருந்தால் நிம்மதியாசு இருப்பீர்கள் Fakir Mohamed Lebbai சிலவற்றை தெரிந்துகொண்டால் தெளிவாசு இருப்பீர்கள்ள ஊலஹ்றைதெரிாமல் இருந்தால் நிம்மதியாசு இருப்பீர்கள் Fakir Mohamed Lebbai - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📷வாட்ஸப் DP #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - இனிய Good காலை [ಯuingn வணக்கமீஜ வற்றிக்குத்தான் எல்லைகள் 6ل0 முயற்ச்சிகளுக்கு இல்லை!!! Takir ONchamed Xebbai இனிய Good காலை [ಯuingn வணக்கமீஜ வற்றிக்குத்தான் எல்லைகள் 6ل0 முயற்ச்சிகளுக்கு இல்லை!!! Takir ONchamed Xebbai - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📷வாட்ஸப் DP
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - 100 @@ @ எல்லா மனிதர்களுமீ கன்ணாடி ரல் தான இபணாத வரை ஒரு முகமீ இடந்து விபால் ஸல முகம் Fakiv Mohamed ebbai 100 @@ @ எல்லா மனிதர்களுமீ கன்ணாடி ரல் தான இபணாத வரை ஒரு முகமீ இடந்து விபால் ஸல முகம் Fakiv Mohamed ebbai - ShareChat
#📷வாட்ஸப் DP #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
📷வாட்ஸப் DP - நவம்பர் 18 கப்பலோட்டிய தமிழன் உசிதம்பரம் பிள்ளை 6. அவர்களின் நினைவுதினம் இன்று! Fakir Mohamed Lebbai நவம்பர் 18 கப்பலோட்டிய தமிழன் உசிதம்பரம் பிள்ளை 6. அவர்களின் நினைவுதினம் இன்று! Fakir Mohamed Lebbai - ShareChat
விலங்குகளைப் பலியிடும் மத வழிபாட்டு உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்க தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்.! ------------------------------ இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகையில் விலங்குகளைப் பலியிடும் (குர்பானி) நடைமுறையை, விலங்குகள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தை மீறுவதாகக் கூறி, அரசுத் தரப்பை மட்டும் எதிர் மனுதாரராகக் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு, இஸ்லாமிய சமூகத்தை மட்டுமல்லாமல், இந்து கோவில்களில் நடைபெறும் ஆட்டுப் பலி போன்ற பாரம்பரிய மதச் சடங்குகளையும் எதிர்காலத்தில் பாதிக்கக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. மனுதாரர் கூற்றுப்படி, விலங்குகள் சட்டம் விலங்குகளை வெட்டுவதற்காக அமைக்கப்பட்ட மையங்களில் அதற்குரிய நெறிமுறைகளைப் பின்பற்றி மட்டுமே விலங்குகள் வெட்டப்பட வேண்டும் என்று கூறுவதாலும், தமிழ்நாட்டின் உள்ளாட்சி சட்டங்களில் (பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி சட்டங்கள்) முன்பு இருந்த மதச் சடங்குகள் மற்றும் பண்டிகைகளுக்கான விலங்குப் பலி விலக்கு, 1998-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது என்பதும் கவலைக்குரிய விஷயம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26-இன் படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மத நம்பிக்கையைப் பின்பற்றும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. விலங்குப் பலி என்பது இஸ்லாமியர்களின் குர்பானி, இந்துக்களின் கோவில் சடங்குகள் உள்ளிட்ட பல மதங்களின் அடிப்படை வழிபாட்டு நடைமுறைகளில் இன்றியமையாத பகுதியாக உள்ளது. இத்தகைய உரிமைகளைப் பாதுகாப்பது, மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசின் கடமையாகும். ஆனால், தற்போதைய சட்ட வெற்றிடம் காரணமாக, இந்த வழக்கின் தீர்ப்பு மனுதாரரின் கோரிக்கையை ஏற்கும் வகையில் அமைந்தால் அது அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகளையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடும். ஆகவே தமிழ்நாடு அரசு, 1998 நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் மதச் சடங்குகள், பண்டிகைகள் மற்றும் வழிபாட்டு நடைமுறைகளுக்கான விலங்குப் பலி விலக்கை உடனடியாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விலங்குகள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தை மீறாமல், மத வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். இது இஸ்லாமியர்களின் குர்பானி, இந்துக்களின் கோவில் பலிகள் உள்ளிட்ட அனைத்து மதங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் நடவடிக்கையாக அமையும். மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பு மத சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் வாதிட வேண்டும். பாதிக்கப்படும் சமூகங்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத சுதந்திரம் என்பது இந்தியாவின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதால், அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகளையும் பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். #SDPI #SDPIPartY #SDPITamilnadu #SDPIPeoplePolitics #SDPIRealAlternative #NellaiMubarak #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
📺வைரல் தகவல்🤩 - [ 9 ٩ 9 விலங்குகளைப் பலியிடும் 3 மத வழிபாட்டு உரிமைகளுக்கு 2 ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்க ; ಕ್ಗ தமிழக அரசுக்கு எஸ்டிபிஐகட்சி வலியுறுத்தல்! நெல்லை முபாரக் MA மாநில தலைவர் SDPI ಹL*81 SDPI சோசியல் பயாகரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி தமிழ்நாடு @@ Isdpitamilnadu | [ 9 ٩ 9 விலங்குகளைப் பலியிடும் 3 மத வழிபாட்டு உரிமைகளுக்கு 2 ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்க ; ಕ್ಗ தமிழக அரசுக்கு எஸ்டிபிஐகட்சி வலியுறுத்தல்! நெல்லை முபாரக் MA மாநில தலைவர் SDPI ಹL*81 SDPI சோசியல் பயாகரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி தமிழ்நாடு @@ Isdpitamilnadu | - ShareChat
#📢 நவம்பர் 16 முக்கிய தகவல்🤗 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
📢 நவம்பர் 16 முக்கிய தகவல்🤗 - நவம்பர் 10 தேசியபத்திரிகை தினம் இன்று! LIvE TV Fakir Mohamed Lebbai நவம்பர் 10 தேசியபத்திரிகை தினம் இன்று! LIvE TV Fakir Mohamed Lebbai - ShareChat