#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 07.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
கர்த்தா அறியக் கண்டே னிவன்தனையும்
ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரமுதல்
வாசு நெறிதேசு வழியறிந்த மன்னவன்காண்
ஏகச் சுழிமுனையும் இகமுகி வாம்வரையும்
ஆக முடம்பறிவும் அண்டபிண் டத்தறிவும்
முன்பின் னாராய்ந்து மூதுண ராகமங்கள்
தன்னன் பிறப்பும் சாற்றத் திறவான்காண்
கல்லாத கல்வி கலைக்கியா னக்காண்டம்
எல்லா மறிந்த இயல்முனிவ னென்றுரைக்க
.
விளக்கம்
=========
எல்லாவற்றுக்கும் மூலப்பொருளைப் பற்றி வியாகரர் அறிவான் என்பதை நான் அறிந்து கொண்டேன். இவன் ஆககவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி போன்ற எல்லாவற்றையும் சுவாசத்தின் பிரிவுகளையும் ஒப்பற்ற சுழிமுனையைப் பற்றியும், இந்த யுகத்தின் முடிவுவரையும், உடம்பு கூறுகளையும், அண்டம் பிண்டம் பற்றி அறிவையும், முன்பிறப்பு, பின்பிறப்பு போன்றவற்றை ஆராயும் பண்டைய உயர்வான நூல்களையும், தன்னுடைய முன் பிறப்பையும், பின் பிறப்பையும் சொல்லுகின்ற திறனும் படைத்தவன். யாரும் கற்க முடியாத கல்வி, எல்லா வகைக் கலைகள், ஞான காண்டங்கள் போன்ற எல்லாவற்றையும் இடவன் தெளிவாக அறிந்தவன் என்பதை அறிவீராக என்று பராசரர் சொல்லி முடித்தார்.
.
.
அகிலம்
========
நல்லதுதா னென்று நன்முனிவனை ஈசர்
வல்லமையா மென்று மாமுனியைக் கொண்டாடி
என்பிறப்பு என்மாது இதுமுன் பிறப்புமுதல்
பின்பிறப்பு முதலாய்ப் பேசென்றா ரீசரரும்
.
விளக்கம்
==========
இதைக் கேட்ட ஈசர், பராசர முனிவனை நோக்கி, மிகவும் நல்லது. இது மிகுந்த திறமைதான் என்று அந்த முனிவனைப் பாராட்டினார். பிறகு பராசர முனிவனின் மகன் வியாகரரை நோக்கி, என்னுடைய தோற்றமும் என் மனைவி சக்தியின் பிறப்பும், சிறப்புப் பொருந்திய நுண்ணிய முந்தைய பிறப்பும் இனி வருகின்ற பிறப்பும் தெளிவாய் நீ சொல்லுவாயாக என்று ஈசர் கூறினார்.
.
.
அகிலம்
========
வேதவியாசர் முக்காலம் உரைத்தல்
======================================
அப்போது வேத வியாச ரகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று சிவனை மிகத்தொழுது
மூல முதலை முத்தி முகந்துகொண்டு
காலமே நின்ற கடவுளே தஞ்சமென்று
ஆதிமுத லந்தம் அடங்கல் மிகவுணர்ந்து
சோதி பதம்போற்றிச் சொல்லுவான் மாமுனியும்
.
விளக்கம்
=========
இதைக் கேட்ட வேத வியாகரர் மனம் மகிழ்ந்து வணங்கி ஈசரை நோக்கி, சுவாமி நான் கூறுகிறேன் நீர் கேட்டு அருள்வீராக என்று கூறி அவருடைய பாதங்களைத் தொழுது, அந்த மூலப் பரம்பொருளின் பாதங்களைக் கட்டிப் பிடித்து முத்தி முகர்ந்து, சுவாமி ஏற்கெனவே நிலையாக நின்று கொண்டிருக்கும் இறைவனே, உம்மிடம் தஞ்சம் அடைகிறேன் என்று கூறிவிட்டு, ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் மீண்டும் நினைவு கூர்ந்து சோதிப் பொருளான ஈசருடைய பாதங்களைப் போற்றிப் பேசலுற்றான்.
.
.
அகிலம்
=======
மும்மூர்த்தி யான முதல்மூர்த்தி தோன்றியதும்
அம்மூர்த்தி தன்னில் ஆயிளையாள் தோன்றியதும்
சத்தியிலே நாதம் தான்தோன்றி வந்ததுவும்
வித்தியாய் நாதமதில் விந்துமிகத் தோன்றியதும்
விந்திலே விட்டிணுவும் விரைவாகத் தோன்றியதும்
அந்த முறைமுதலாய் அண்டபிண் டம்வரையும்
சொல்லி யுகமதுதான் தோன்றும்வகை கூறலுற்றான்
.
விளக்கம்
=========
மும்மூர்த்திக்கும் முதல் மூர்த்தியின் தோற்றமும், அம்மூர்த்தியிலிருந்து அவருடைய மனைவி சக்தியான தோற்றமும், அந்த சக்தியிலிருந்து நாதம் தோன்றிய விதம் பற்றியும், அந்த நாத்திலிருந்து விந்து விரைவாகத் தோன்றியதும், விந்துவிலிருந்து விஷ்ணு விரைவாகத் தோன்றியதும், முறையாகச் சொல்லி அண்டம் பிண்டம் தோன்றிய விதத்தை வகை வகையாகச் சொல்லி இனி வருகின்ற தருமயுகம் தோன்றும் வகையும் சொன்னான்.
.
.
அகிலம்
=======
சல்லிக் கொடிய சண்டக் குறோணிமுதல்
நீசன் பிறப்புவரை நிகழ்த்தினான் மாமுனியும்
பாசனீ சன்வரைக்கும் பாருலக வாறதையும்
சொல்லி விரித்து சுத்தஏ ழாம்யுகந்தான்
நல்ல யுகமதுதான் நாடுவதுஞ் சொல்லிமிக
.
.
விளக்கம்
=========
மிகவும் கொடிய தீமை பொருந்திய குறோணிமுதல் கலிநீசன் பிறப்புவரையும் ஆறு யுகங்கள் பற்றியும் தெளிவாக விதிர்து எடுத்துரைத்தான். சுத்தம் பொருந்திய தருமயுகமாகிய ஏழாம் யுகம் தான் சிறந்த யுகம் அதுவே எல்லாரும் விரும்புவது என்றும் சொன்னான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


