ShareChat
click to see wallet page
search
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி துவக்கம் ஆட்சியர் விஷு மகாஜன் மனுக்கள் பெற்றார். தூத்துக்குடி ஜூன் 3 தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி பணி தொடங்கியது. ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கணக்கு முடிப்பு மற்றும் குறை தீர்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் பசலி 1435 ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயக் கணக்குகள் முடிவு வருடாந்திர "ஜமாபந்தி" பணி துவங்கியது. இதன் முதற்கட்டமாக ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கணக்கு முடிப்பு மற்றும் குறை தீர்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் ஜமாபந்தி காலத்தில் பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது எவ்வித தாமதமில்லாமல் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உரிய துரித சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஏரல் வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை சார்ந்த கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் ஏரல் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தற்போது செய்தி - ShareChat