🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️ #செய்திகள் #தற்போது செய்தி
வாக்குபதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் விவரங்கள் பொருத்தும் பணி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி ஏப்.17-
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குபதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வரும் இப் பணிகளின் போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களில் (EvM) வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது
மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. பெல் (BEL) நிறுவன பொறியாளர்கள் மூலம் VVPAT இயந்திரங்களில் குறியீடு ஏற்றுதல் மற்றும் Control unit (CU) வில் வேட்பாளர் தரவுகளை பதிவேற்றும் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் ஒதுக்கபடும் இயந்திரங்களின் எண்கள் (CU BU VVPAT numbers) இறுதி செய்யப்பட்டு தேர்தல் ஆணைய விதிமுறைகள்படி சீலிடப்படுகின்றன ஏதேனும் இயந்திரத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவை உடனடியாக மாற்றப்பட்டு தயார்நிலையில் வைக்கப்படும்.
வாக்காளர்களின் வசதிக்காக இந்த முறை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டார். மின்சாரம், குடிநீர், கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வாக்குசாவடிக்குள் கைபேசிகள் அனுமதி இல்லாததால் இந்த முறை புதிய வசதியான டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வாக்காளர்கள் தங்கள் கைப்பேசிகளை வெளியே ஒப்படைத்துவிட்டு வாக்களித்த பின் பெற்றுக் கொள்ளலாம்.
பாகம் எண் மற்றும் வரிசை எண் தெரியாதவர்களுக்கு உதவ வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் "Booth Facilitation Desk" அமைக்கப் பட்டுள்ளது .தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய ரிசர்வ் போலிஸ் படை (CRPF) மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் தலைமையில் பாதுகாப்பு திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


