காலம் கனிந்து
என் மூச்சுக் காற்று
மெல்ல விடைபெறும் அந்தத் தருணத்திலும்,
உன் குரல் மட்டும் என் காதில் கேட்டால் போதுமடி.
மௌனத்தில் உறையத் துடிக்கும் என் செவிகள்,
உன் அழைப்பைக் கேட்டதும்
மீண்டும் ஒருமுறை உயிர்த்தெழும்.
நின்று போன கடிகார முள்ளாய்
அமைதி கொள்ள நினைக்கும் என் இதயம்,
உன் ஒற்றைச் சொல்லின் அதிர்வில்
மறுபடி துடிக்கத் தொடங்கும்.
மரணத்தின் பிடி
என்னை இழுத்தாலும்,
உன் குரல் கொடுக்கும் வலிமையில்
மீண்டும் ஒருமுறை பிறந்து வருவேன் என் தோழி உனக்காக! #💝இதயத்தின் துடிப்பு நீ


