#🧐நாட்டு நடப்பு #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள்
மே 1, நடிகை ஷோபாவின்
46வது ஆண்டு நினைவு நாள்.
மகாலட்சுமி மேனன் என்ற இயற்பெயர் கொண்ட ஷோபா, தமிழில் 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1966ல் இப்படத்தை இயக்கியவர், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு. பிறகு 'உத்ராத ராத்திரி' என்ற மலையாளப் படத்தில் ஹீரோயின் ஆன ஷோபா, தனது 17வது வயதில், 'பசி 'என்ற தமிழ்ப் படத்துக்காக தேசிய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார்.
ஷோபாவின் தந்தை கே.பி.மேனன், தாயார் பிரேமா மேனன். இவர்களில் பிரேமா, 1950களில் மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தவர். முன்னதாக ஷோபா, 1967ல் பி.வேணு இயக்கிய 'உத்யோகஸ்தா' என்ற மலையாளப் படத்தில் பேபி ஷோபா என்ற பெயரில் நடித்தார். இப்படம் வெற்றி பெற்று, ஷோபாவுக்கு சிறந்த குழந்தை நடிகை என்ற அங்கீகாரம் கிடைத்தது.
'தட்டுங்கள் திறக்கப்படும்', 'அச்சாணி', 'நிழல் நிஜமாகிறது', 'ஒரு வீடு ஒரு உலகம்', 'முள்ளும் மலரும்', 'வீட்டுக்கு வீடு வாசப்படி', 'ஒரு விடுகதை ஒரு தொடர்கதை', 'ஏணிப்படிகள்', 'பசி', 'அழியாத கோலங்கள்', 'அகல் விளக்கு', 'சக்களத்தி', 'வேலி தாண்டிய வெள்ளாடு', 'மூடுபனி', 'பொன்னகரம்', 'சாமந்திப்பூ,' 'அன்புள்ள அத்தான்' போன்ற படங்களில் நடித்த ஷோபா, சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார். அவரது இறுதிச்சடங்கு சென்னை வடபழநி ஏ.வி.எம் சுடுகாட்டில் நடந்தது. அங்கு நினைவுச் சின்னம் இல்லை.


